Thursday, March 31, 2011

தீட்சை முறைகளைக் கூறும் சித்தர் பாடல்கள்

தீட்சை முறைகளைக் கூறும் சித்தர் பாடல்கள்.

--ஸ்பரிச தீட்சை என்ற தொடு தீட்சை.



வாரணம் முட்டையிட்டு வயிற்றில்வைத் தணைத்துக் கொண்டு

பூரணக் கூடுண்டாக்கிப் பொரிந்திடுங்குஞ்சு போலக்

காரணக் குருவைமூலக் கனல்விளக் கதநாற கண்டு

நாரணன் அறியாநாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே



சட்சு தீட்சை என்ற நேத்திர தீட்சை



தண்ணீரி லிருக்கும்மீன்கள் தண்ணீரிற் கருவைப்பித்திக்

கண்ணினாற் பார்க்கும்போது கயலுறு வானாற்போல

நண்ணிய குருவைக்கண்டு நாதன்நல் லுருவைச் சேர்த்து

விண்ணின்மேல் நாகைநாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே.



ஞானதீட்சை எனும் மானச தீட்சை



குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டையிட்டுக்

குளத்துநீர் குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும் போது

குளத்திலே புதைத்தமுட்டை கருவுரு வானாற்போல்

உளத்திலே நாகைநாதர் உருவழிந் துணர்வாய் நெஞ்சே.

------------(கணபதிதாசர் நெஞ்சறி விளக்கம் பாடல்கள்)



கருக்கொண்ட முட்டைதனைக் கடல்ஆமை தான் நினைக்க

உருக்கொண்ட வாறதுபோல் உன்னை அடைவது எக்காலம்.

-------------------(பத்ரகிரியார் பாடல்)

Tuesday, March 29, 2011

'சூக்கும பயணம்'

'சூக்கும பயணம்' என்பது என்ன?விளக்கம் தேவை..."
என ஒரு அன்பர் கேள்வி கேட்டார்.
தெரிந்த அன்பர்கள் தங்கள் அனுபவங்களை
பகிர்ந்து கொள்ளலாம்.
நான் 1992 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி ஆழியார் சென்ற போது மகரிஷி அவர்கள் கொடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.


முன் ஏற்பாடு :
மதிய உணவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வேண்டும் என்றால் இரவு நீர் ஆகாரம் மட்டும் போதும்.
இரவு சவ ஆசனத்தில் படுத்து மணி பூரகத்தில் மனம் வைத்து படுக்க வேண்டும்.
சீவ காந்த பயிற்சி செய்து பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும்.
கண்ணாடி பயிற்சியில் சூக்கும வெளிப்பாடு இருக்க வேண்டும்.


பயிற்சி :

காலையில் 4 .30 மணிக்கு கண் விழித்து, சிறு நீர் கழித்து, கை கலீல் நீர் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மணி பூரகத்தில் மனம் வைத்து சவ ஆசனத்தில் படுத்து தவம் செய்ய வேண்டும்.
மகரிஷி அவர்கள் வந்து சூக்குமமாக நம்மை வழி நடத்தி செல்வார்.

விளக்கம் :

எண்ணத்தின் ஆற்றல், இறையாற்றல் காந்தம், இவையிரண்டின் வாயிலாக சூக்குமப் பயணத்தில் பெறக்கூடிய அனைத்தையும் நம்மால் பெற இயலும். எனவே சூக்குமப்பயணத்தால் சிறப்பாகப் பயனேதுமில்லை, காந்தச் செலவு தான் என்கிற வாதம் சரியே. எனினும் சூக்குமப்பயணத்தை பல வருடங்களாய் கற்றுத்தந்தோம் என்பதால், அதனது வரையறையையும், சில அடிப்படைத்தகவல்களையும் நாம் நம்மோடு வைத்துக்கொள்வதில் பிழையில்லை தான்.

"நுண்ணுடலினின்று உயிர்த்துகள் சிலவற்றைப் பிரிதல், அவ்வாறு பிரிந்த உயிர்த்துகள்களோடு நடுமனம் மூலமாக எண்ணத்தொடர்பில் இருத்தல், எண்ணத்தொடர்பே பிரிந்த உயிர்த்துகள்களை வான்காந்த மண்டலத்தில் வழிநடத்திச்செல்லுதல், அவ்வுயிர்த்துகள்கள் தம் காந்தச் செறிவு சார்ந்து அழுத்தம், ஒளி, ஒலி, மணம், சுவை, எண்ணம் இவைகளில் ஒன்றாகவோ பலவாகவோ உணரப்படல்" - சூக்குமப் பயணத்தின் அடிப்படை வரையறை.

சூக்கும பயணம் - பயன்கள் சில
1 . உடலில் சீவ காந்த சக்தி பெருகும். (நன்கு பயிற்சி செய்த பின்பு)
2 . நான் யார்? என்ற தன் நிலை விளக்கம் கிட்டும்.
3 . மனதில் பற்றட்ட்ற நிலை வரும்.
4 . இறை நிலை தவம் நன்கு வரும்.
5 . கூடு விட்டு கூடு பாயும் சக்தியை உணரலாம்.
6 . உங்கள் உடலை நீங்களே பார்க்கலாம்.
7 . மனம் அமைதி அடையும்.
8 . உடல் நகராமல் மனதால் எல்லாம் நடத்தி கட்டலாம்.
9 . உயிரின் நிலை பற்றி தெளிவு கிட்டும்.
10 . தம் கருத்தை பிறர் மனத்தில் உதிக்க செய்யலாம்.

சில சங்கடங்களும் உள்ளன...
1 . முதல் நாள் மதியம் முதல் உணவு கட்டுப்பாடு தேவை.
2 . இரவு சாப்பிடாமல் இருப்பது நல்லது.
3 . இரவு 9 மணிக்குள் தூங்க வேண்டும்
4 . ஒரு வாரம் முன்பும், பின்பும் பிரம சரியத்தில் இருக்க வேண்டும்.
5 . கண்ணாடி பயிற்சி செய்து தெளிவு பெற வேண்டும்.
6 . இரவு மணி பூரகத்தில் தவம் செய்ய வேண்டும்.
7 . காலை 4 .30 தவம் தொடங்க வேண்டும்.
8 . பயிற்சி முடிந்த பின் குளிக்க கூடாது.
9 . உடன் சாப்பிட கூடாது
10 . புலன் இயக்கம் அதிகம் இருக்க கூடாது.
11 . உடற் பயிற்சி மற்றும் எந்த பயிற்சியும் செய்ய கூடாது.
12 . மதியம் வரை எங்கும் வெளியில் செல்ல கூடாது.
13 . அன்று பிரயாணத்தை தவிர்க்க வேண்டும்.
14 . சீவ கந்த சக்தி அதிக இழப்பு இருக்கும்.
15 . உடல், மனம் இயக்கம் இருக்க கூடாது.


அடுத்து பயிற்சி முறை ....

சூக்கும பயணம் பயிற்சி முறை

காலை 4 .௦௦00 முதல் 5 .00௦௦ மணிக்குள் செய்ய வேண்டும்.

இரவு மணி பூரகத்தில் தவம் செய்து படுக்க வேண்டும்.

அருட் காப்பு போட்டு, குருவின் துணையுடன்

காலையில் மணி பூரகத்தில் நன்கு தவம் செய்து ஆற்றலை தேக்க வேண்டும்.

துரியாத தவத்தில் துவாக சாங்கம் செய்வது போல

மணி பூரகத்தில் இருந்து ஒரு முழம் மேலே உயிர் ஆற்றலை உடலில் இருந்து

மேலே கொண்டு வர வேண்டும்.

மகரிஷி அவர்கள் நம்மை வழி நடத்தி செல்வார்.

சித்தர்கள் வாழ்ந்த இடங்கள் , கோவில்கள் (திருப்பதி, பழனி....), நண்பர்கள் வீடு, சந்திரன், நெருங்கிய உறவினர்கள் வீடு, பிடித்த சுற்றுலா இடங்கள் போன்றவட்ரை பார்கலாம, வாழ்த்தலாம், காப்பு போடலாம்.

மீண்டும் திரும்பி வர வேண்டும்.

உங்கள் உடலை நீங்களே பார்கலாம்.

பின் மீண்டும் மணி பூரகத்தில் வந்து முடிக்க வேண்டும்.

அரை மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும்.

இடம் நிசப்தமாக இருப்பது அவசியம்.

ஏன் இதை தடை செய்தார்கள் மகரிஷி ........

தோரயமாக 1995 ஆண்டு முதல் இது தடை செய்யப்பட்டது.
மகரிஷி அவர்கள் செய்தால் அதற்கு ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும்.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தி வந்தது.
அமெரிக்காவில் (astral Travel) செய்த ஒருவர் இறந்து விட்டதாக செய்தி.
அதனால் அமெரிக்கா அரசு இதை தடை செய்தது.
இன்நிகழ்ச்சி நம் இயக்கத்திகும் வந்து விட கூடாது என நினைத்து (நீண்ட) எதிர் கால விளைவை எண்ணி இம்முடிவை அறிவித்தார்.
மகரிஷியுடன் கிட்ட ஒரு கேள்விக்கு தெரிந்த paerasiriyar oruvarai கொண்டு பயிற்சி பெற்ற அன்பர்கள் கூட்டாக manrangalil செய்யலாம்.
இனி புதிய அன்பர்களுக்கு அள்ளிக்கபட மாட்டாது என கூறினார்.

அனுபவங்கள் சில

ஆசிரியர் பயிற்சி பெற்று, சூக்கும பயணம் கற்று, மீண்டும் அதை பெற விரும்பி 1993 ஆம் ஆண்டு மீண்டும் ஆசிரியர் பயிற்சிக்கு வந்தேன்.
வீட்டில் செய்தேன்.
பலனை உணர்தேன்
விளைவுகளை சந்தித்தேன்.
திருமணத்திற்கு முன்பு பல நாட்கள் செய்துள்ளேன்.
திருமணத்திற்கு பிறகு சூழ்நிலை அமையவில்லை.
ஆழியார் போன்ற அமைதியான இடங்களில் செய்யலாம்.
பயிற்சி செய்யும் போது சப்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.
அந்த அறியில் வேறு யாரும் இருக்க கூடாது.
கொசு வலை இருந்தால் நல்லது.
பேன்(fan) கூடாது.

ஒரு அன்பரின் அனுபவம்.
அவர் பயிற்சி செய்யும் போது எலி அவர் மீது விழுந்து அவர் துள்ளி எழுந்து, உடல் பாதிக்கப்பட்டதால் பயிற்சியை கை விட்டார்.

மகரிஷி தடை செய்த பின் முயற்சியை தொடர மனம் விரும்பவில்லை.
கற்றது கை மண் அளவு.
ஏதோ அறிவிற்கு எட்டிய அளவு கூற முயற்சி செய்துள்ளேன்.
பிழை இருந்தால் மன்னிக்கவும்.
திருத்தம் இருந்தால் வரவேற்க்கப்படுகிறது.
வாழ்க வளமுடன்.
குருவே துணை.

பயிற்சி பெற விரும்பினால் -

சூக்கும பயணத்தின் விதிமுறைகளும் விளக்கங்களும் தெளிவாகவும்,இருந்தது.
அருண் அவர்களின் விளக்கம் இன்னும் ஆழ்மன வரையில் சென்று ஆராய வைத்தது.
இன்னும் தெரிந்து கொள்ளவேண்டும். என்பவர்களுக்கும், பயிற்சியில் கலந்து கொள்ளவேண்டும் என நினைப்பவர்களுக்கும்.
மகரிஷியுடன் நீண்ட காலம் இருந்தவர். பேராசிரியர்,மாரியம்மாள் அவர்கள். இப்போதும் ஒவ்வொரு பௌர்ணமிக்கு முன்தினமே சென்று விட்டால். பௌர்ணமி அன்று சூக்கும பயணத்தவம் சொல்லித்தருவார்கள்.
இரண்டுநாள் பகலில் எல்லாத்தவங்களும் முறையான விளக்கத்தோடு
அவர்களே நடத்துவார்கள். ஆழியாறிலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்குள் இருக்கிறது. அந்த இடம் போன் நெம்பர் 9842282078 . அருள்நிதி மாரியம்மாள் அவர்கள்.
தகுதி, பிரம்மஞானப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். வாழ்க வளமுடன்.
வேதலோக அன்பு நிலையம் வாழ்க வளமுடன்
http://www.vethaloka.org/
நன்றி : பூங்குழலி அம்மா, அருண், ரமேஷ், சுந்தரராஜன், ரமேஷ் குமார்,
சீதா லக்ஷ்மி

Monday, March 28, 2011

எண்ணம் எங்கும் செல்லும்

எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று - மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை - விழிப்புடன் - ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.


"எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்".

எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.

எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கடவுளைக் காணலாம்

காமத்தை கடந்தால் கடவுளைக் காணலாம் என்பது நமது சித்தாந்தங்களில் ஒன்று . புனிதமான கோயில்களில் ஏன் காமம் ததுப்பும் சிலைகள்? சிவலிங்கத்தை கூட ஆண் பெண் ஆலிங்கம் செய்யும் ஒரு தத்துவமாக விளக்கம் தரும் முயற்சிதான் என்ன?

மனதை கடந்து செல்லவேண்டும் எப்படி ? காமம் என்னும் உயிர்ச் சக்தியை மனம் கடந்து செல்லும் போது எதை கடந்து உள்ள சென்றால் கட+உள் = கடவுளை காணலாம்? உயிர் என்று நாம் எதை குறிப்பிடுகின்றோம்? உயிருக்கு எதாவது உருவம் இருக்கிறதா? நாத விந்து என்று நமது முன்னோர்கள் எதை சொன்னார்கள்? உயிர் நிலை தானே இந்த நாத விந்து. காமத்தை அடக்கலாமா? அது அடக்கவேண்டிய ஒன்று அல்ல. சில சமயங்களில் தவிர்க்க வேண்டிய ஒன்று. நீரிலே அடக்கும் ஒரு பந்து எப்படி மிகவும் வீறுக் கொண்டு மேல் எழுப்புகிறதோ அப்படிதான் காமமும் அடக்க அடக்க இன்னும் அதிகமாகி நம்மை அழித்துவிடும். எத்தனை சாமியார்களின் வாழ்க்கையை பாருங்கள், மண்ணாலும் பெண்ணாலும் பொண்ணாலும் விழ்ந்தவர் கோடி.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்து சங்கத்தின் தலைவர் அவர்களை பார்த்து பேசிக் கொண்டிருந்த போது சமீபத்தில் ஒரு பிரபலமான இந்திய நாட்டின் செஸ்க் சாமியாரின் சீடர்களின் நிகழ்வு ஒன்று மலேசியாவில் நடந்தது. அதில் இந்து சங்கதின் துணைத்தலைவர் கலந்து கொண்டு பேசியதற்காக பத்திரிக்கைகளில் இந்து சங்கம் என்ன இவர்களுக்கு உடந்தையா என்று கேள்வி எழுந்தாக மிகவும் வருத்தப்பட்டார். தலைவரின் வருத்தம் நியாமான ஒன்று . தவறான ஒரு தலைமையில் இயங்கி ஒரு இயக்கத்தை ஒரு தேசிய நீரோடையில் இணைக்கும் ஒரு சிறு முயற்சி தான் துணைத் தலைவர் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு பேசி விட்டு வந்திருக்கின்றார். யாருக்கு தெரியும் அந்த சாமியார் பசுத் தோல் போர்த்திய புலி மாறுவர் என்று அவர்களின் சீடர்களின் கதிதான் எப்படி? மதப் போர்வையில் சில சாமியார்களின் மன்மதலீலைகள் அரங்கேற்றம் பெருவதற்கு பாலியல் உறவு கொள்வதற்கும் அவர்களின் வக்கிரமான புத்தி மட்டும் காரணம் அல்ல, நாமும் ஒருவகையில் காரணமாகிவிடுகின்றோம். ஆன்மீகத்தை துறந்துவிட்டு மத சங்குகளில் மக்களின் வாழ்க்கை நெறிகளை புகுத்திவிட்டோம். எது உண்மை எது பொய் என்று பகுத்துணராமல் உணர்ச்சி அடைப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இவர்களை போன்றோரின் ஆளுமைக்கு அடிமைப்பட்டு தான் போவோம்.

பால் உறவும் ஆன்மீக மேம்பாடும் (sex and spiritual development) என்ற பொருள் குறித்து விளங்கிக் கொள்ளும் முன் அதனுடைய மதிப்பைப் பற்றி நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டும். இந்த பால் உறவு என்ற ஒன்று, அதை ஒட்டிய அறிவு, எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு சமுதாயத்தில் தெளிவு இருக்கிறதோ, அந்த அளவுக்குக்தான் சமுதாயம் நல்ல முறையில் மகிழ்சியாக, உடல் நலத்தோடும் மனவளத்தோடும் இருக்க முடியும்.
என் நண்பர் ஒரு அருமையான ஒரு விளக்கத்தை தந்தார்.

பிரமாச்சாரியத்தையும் இல்லறத்தையும் இணைக்கும் பாலம் தான் காய கல்ப பயிற்சி. நாத விந்து சக்திகளை குண்டலினியின் சக்தியாக மேல் எழுப்பி அந்த நாத விந்து சக்திகளை உடல் முழுவுதும் பரப்பி இளமையை காப்பது மட்டும் அல்லாமல், மன கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கும் ஒரு அருமையான வழி இந்த காய கல்பம் என்று . இரண்டு வேவேறான கோப்பாடுகள். அதாவது துறவறமும் இல்லறம் ஒரே செயல் முறையில் இணைக்கும் இந்த இந்திரிய யோகம். மன ஆளுமை அதே சமயம் விந்து நாதத்தை சேமித்து தேவைக்கு மிகுதியானதை உடலுக்கு உயிர்ச் சக்தியாகி உடல் நலத்தையும் மன நலத்தையும் ஒருங்கே பேணும் அற்புத கலை தான் இந்த காய கல்ப பயிற்சி. ஆனால் நமது மக்கள் இந்த மாதிரியான வாழ்க்கைக்கு தேவையான அற்புத பயிற்சியை தவிர்த்து விட்டு வேறு எதுக்கோ கவணத்தை செலுத்துகின்றனர்.

இயற்கையும், அறிவும் இணைந்துதான் வாழ்வு நடைப்பெறுகிறது. இயற்கையை உணர்ந்து, இயற்கையை மதித்து, இயற்கையின் விளைவறிந்து எண்ணம், சொல், செயல் பயன்படுத்தி நல்ல முறையில் செம்மையாக வாழ்வை நடத்துவதற்கு ஏற்ற பயிற்சி தான் யோகம்.
கண்ணை மூடிக் கொண்டால், அது தியானம் அன்று. மனம் ஒருமைப்ட்டு மனதை மற்ற எண்ணத்தில் இருந்து விடுப்பட்டு ஒரே சிந்தனையில் வைத்திருப்பதுதான் தியானம், சிலர் நினைப்பது போன்று காவி உடை அணிந்தால் மட்டும் அவன் யோகியாகிவிடுவானா? யோகம் தியானமும் ஒரு மனிதனை செம்மை படுத்திவிடுமா? அவன் மனவளமும் அகத் திறனும் முழுமை பெற்று மனக்கட்டுபாடுக் கொண்டால் அவன் ஒரு சிறந்த யோகி ஆவான். அது அகத்தை ஆய்ந்துணர்ந்தால் தான் உண்டு.

சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள். துறவிகள் என்று வெளியேறியவர்களில் பெரும்பாலோர் அறிவின் நிறைவு பெற்றுப் பின்னர் துறவு பெற்றார்களில்லை, அறியாமை, மனகுழப்பம், எழ்மை வேலையின்மை,நோய்,சோம்பேறித்தனம், பேராசை, வெறுப்பு, குடுப்பச் சண்டை இவற்றால் இல்லம் விட்டுக் கடமை பிறழ்ந்து வெளியேறினார்கள், சுழ்நிலை நிர்பந்தத்தால் தவிர்க்கமுடியாத நிலையில் வெளியேறியவர்களும் உண்டு. அவர்களில் ஏதோ ஒரு சிலர் சந்தர்ப வசதியாலும், நல்லாசிரியரோடு தொடர்பு கொண்டு ஞானப் பேறு பெற்றார்கள். மற்றவர்கள் வாழ்வு பாழாகி துன்புற்று மடிந்தார்கள்.

புத்தபிரானும் இறுதியாக ஒரு நல்ல ஒரு பெண்மணியிடம் தீட்சை வாங்கி உண்டுவிட்டே போதிமரத்தில் சித்தியை பெற்றார். உலகிற்கு புத்தத்தை தந்தார். இல்லை என்றால் பத்திலே ஒன்றாகி கரைந்து போயிருப்பார் புத்தர்.

நாம் எதை எதையோ நினைக்கின்றோம். ஆனால் நினைத்தெல்லாம் நடப்பது இல்லை. ஏனெனில் நம் எண்ணங்களுக்கு வலுவில்லை. அந்த வலிமையை “தாரனை” என்னு தியானத்தால் வலுப்பெறச்செய்யலாம். எண்ணம் வலுப்பெரும் போது, நமது சிந்தனை செயல் உறுதிபடுகிறது. நல்ல எண்ணங்களை நினைக்க தெரியாதவராக நாம் இருந்தால் துன்பமே அன்றி இன்பம் இல்லை.

தியானம் பயிலும் முன் நாம் நல்ல சிந்தனைக் கொண்டவராக இருக்க வேண்டும். ஆசை பற்று கடந்தவையாக நமது மனம் இருக்கவேண்டும். அது தான் மனக் கட்டுப்பாடு. நல்ல எண்ணங்களாளே நமது வாழ்க்கையும் வடிமைக்கப்டுகிறது.
மனக் கட்டுப்பாடின்றி நல்ல யோகியை நடிப்பவர்களின் வேசம் ஒரு நாள் உலகிற்கு தெரிய வரும். அது இயற்கையின் நீதி அனைத்து துறந்தவன் யோகியாக இருக்கலாம். ஆனால் இங்கு பலர் உடையயைதான் துறக்கின்றனர். உள்ளத்தை அல்ல. துறவிக்கு எதற்கு பல கோடி சொத்து? வீடு, நிலம், பரிபாலனம்?

உண்ணும் உணவு கூட நம் உழைப்பில் இருந்து பெற வேண்டும். பிச்சை எடுப்பவன் எப்படி யோகியாவன். நாம் வணங்குவதற்கு அவன் எப்படி யோக்கியவன் ஆவான்? இந்த சமுதாயம் பிச்சைக்காரர்களை வளர்கிறது. மதத்தின் பெயரால் யோகியின் பெயரால் சத உட்க்கார்ந்து உண்ணும் சோம்பேறி மனிதனை உருவாகிக் கொண்டிருக்கிறது. நமது சமுதாயத்தில் தான் இலவச அண்ணதானம். அதிலே வேறு உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்ற உறங்கும் சித்தாந்த போதனை. எப்படி உருப்படும் நமது சமுதாயம். ஆனால் மேலை நாடுகளில் No Free lunch .உழைப்பில்லாமல் அங்கு ஊதியம் இல்லை.

ஒரு வேளை உண்பவன் யோகி
இரு வேளை உண்பவன் போகி
மூன்று வேளை உண்பவன் ரோகி

அளவான உறக்கம், அளவான உழைப்பு. அளவான ஒய்வு, இதிலே அளவான உடல் உறவும், அளவான செல்வம் இருந்தால் சிறப்பு. அளவுக்கு மீறிய எதுவும் துன்பம் தர கூடிய ஒன்றுதான். அளவுக்கு மீறிய எந்த ஒரு செல்வமும் மற்றவர்களின் உழைப்பை அவர்களுக்கு சேர வேண்டிய பொருளை நாம் சுரண்டுவது போன்ற செயல்தான். இதுவும் ஒரு வகையான சமுதாய துன்பம் தான்.

இதிலே வேடிக்கை என்னவென்றால் எல்லாம் துறந்த சாமியார்களுக்கு பல கோடி சொத்துக்கள் , கை கால்களை அமுத்தி விட பக்தர்கள். உணர்சிகளை அடக்க முடியாத இந்த சாமியார்கள் பெண்ணின்பத்தில் உணர்சிவசப்படுகின்றனர். இவர்கள் ஆன்மாவை துறந்தவர்கள் அன்று. பேராசைக் கொண்டவர்கள். சில சித்திகளை கொண்டு பணம் பறிபவர்கள். வெட்டகம் கெட்டவர்கள். இவர்கள் எல்லாம் யோகியா? பணம் தேவை இல்லாத ஒருவருக்கு பணம் காசு கொடுக்கும் முட்டாள்கள் நாம். எவ்வளோ நல்ல இயக்கங்கள் வாழ்க்கை நெறியை சொல்லுகிறது. ஆனால் அது எல்லாம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை. ஆடம்பரமும் , ஆர்ப்பாட்டம்தன் இவர்கள் தெரிகிறது. பணத்தோடு வாழ்பவர்கள் எல்லாம் யோகி அல்ல, பகுத்தறிவோடு வாழ்க்கையை உணர்த்த முற்படுவோர்தான் யோகி.

ஒரு யோகி என்றால் இந்த மக்களின் மன வளத்தையும் உடல் நலத்தையும் அவன் சார்ந்த குடுப்ப நலத்தையும் பேணும் ஒரு அமைப்பாக இருந்து செயல் படவேண்டும் அந்த யோகி. இதுதான் வாழ்க்கை என்று தான் உணர்ந்து, இந்த மக்களும் உணரும் நெறிமுறைகளை தந்து, மக்களின் ஆன்ம நெறிகளை வாழ்க்கை நெறிகளோடு இணைத்து வாழ்பவன் தத்துவர்தமான இந்த வாழ்க்கையை உணரகூடியவனாக இருப்பான்.

மனவளம்

சமுதாய பிரச்சனைகளை தீர்க்க மனவளம் காட்டும் தீர்வு

சமுதாய கேடு எங்கிருந்து வருகிறது என்றால் தனி மனித ஒழுக்க கேட்டில் இருந்து தான் வருகிறது.இன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஒழுங்கீனம், திமிர், ஆணவம் அனைத்திற்கும் ஒரு வகையான மூலக் கூறுகள் ஆன்மீகம் அற்ற சமுதாய வாழ்க்கை முறைகள் தான். அதற்காக மூடத்தனமான மதக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை.அவ்வாறான பிற்போக்கு தனமான கொள்கைகளை களைந்து அறிவான விஞ்ஞானம் கொண்ட மெய் ஞானத்தை ஆன்மீகத் சாரத்தை வாழ்க்கை நெறியாக கொண்டால் அமைதியான அன்பான பண்பான பகுத்தறிவான மனிதர்களை இந்த சமுதாயம் வழங்கும். தனி மனித அமைதி, ஒரு குடும்பத்தின் அமைதி, ஒரு குடும்பத்தின் அமைதி, ஒரு இனத்தின் அமைதி, ஒரு இனத்தின் அமைதி, ஒரு நாட்டின். அமைதிதான், இந்த உலகத்தின் அமைதியாக மாறும்.

1) இயற்கை விதி,
2) சமுதாய அமைப்பு
3) இன்ப துன்ப உணர்ச்சிகள்

ஆகிய மூன்று கோணங்களின் இணைப்பிலே இந்த வாழ்வு நடைப்பெறுகிறது. இந்த மூன்று துறைகளிலே தெளிவு உண்டானால் அறிவுச் சார்ந்த வாழ்வு புலப்படும். நமக்கு சமுதாய சிக்கலுக்கும் வழியும் தெரியும்.

துன்பம், என்பது சமுதாய துன்பம் மட்டும் அல்ல. தனி மனித துன்பமும்தான் இந்த சமுதாயத்திற்கான துன்பமாக மாறிவிடுகிறது. தனி மனித துன்பங்கள் சங்கிலி தொடர் போல சமுதாய துன்பமாக வீக்கம் பெருகிறது. தனி மனிதனுக்கு வேலை இல்லை என்றால் சமூதாய பிரச்சனைகள் உருவெடுக்க காரணமாகிவிடுகிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு இங்கிருந்து தான் உற்பதியாகிறது. தனி ஒரு மனிதன் தன்நிலையை உணர்ந்தால் சமுதாய பிரச்சனைகள் களையப்படும். ஒட்டு மொத்த சமுதாயத்தை நாம் திருத்த முடியாது, ஆனால் தனி ஒரு மனிதனின் வளமான வாழ்வு அவனின் அறிவு சார்ந்த உழைப்பு மட்டும் போதுமானதல்ல, அவனின் மன நலமும் உடல் நலமும் வாழ்க்கை நலமும் சிறப்பாக இருக்கவேண்டும்.

உண்மையில் துன்பங்ளுக்கான காரணம் தான் என்ன? மனிதன் நான்கு வித குறைப்பாடுகளால் துன்பமடைகிறான். அமைதியிழந்து அல்லலுறுகிறான்.

1).கடவுளை தேடிக்கொண்டேயிருந்தும் காண முடியாத குறை
2).வறுமை என்னும் பற்றாக்குறை
3).விளைவறியாமலோ, விளைவையறிந்தும் அலச்சியம் செய்தோ, அவமதித்தோ செயலாற்றி அதன் பயனாகத் துன்பம் அனுபவிக்கும் குறை.
4).மனிதனின் சிறப்பறியாமல், பிறர் மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், துன்புற்றும் அல்லலுறும் குறை.

இந்த நான்கு குறைப்பாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டன. வாழ்க்கை பலவிதமான சிக்கல்களாகி அவற்றை எளிதில் தீர்த்து விடுதலை பெறமுடியாமல் அவற்றுக்கு வழி காணாமல் மனிதன் தவிக்கிறான். வாழ்வின் நலமிழந்து தான் வருந்தியும் பிறரையும் வருத்தியும் வாழ்கிறான்.

அறிவின் நிலைகளை மனிதன் அனுபவமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் முறையான அக நோக்கும் பயிற்சி அவசியம். மனிதன் மன வளத்தை சரியான முறையில் இயக்க தெரிந்தால் போதும், பெரும்பாலான சமூக பிரச்சனைகள் தீர்ந்த மாதிரிதான்.
அறிவு புத்தி நிலையிலும், சித்த நிலையிலும், பேரறிவு நிலையிலும், சமாதி நிலையான பிரம்ம நிலையிலும் நின்று பயில வேண்டும். பிறகு வேண்டும் போது வேண்டிய படி அறிவை பயன்படுத்தி இனிது வாழ முடியும்.

மனிதனின் பிரச்சனையே மனப் பிரச்சனைதான். மனதை கட்டுப்படுதாமல் மனதிற்கு அடிமை ஆவது தான். மனச்சிக்களில் மாட்டிக் கொண்டு மன அமைதி இழந்து வாழ்ந்து கொண்டிருப்பது தான் இன்றைய நடைமுறையாகிப் போனது. பெருபாலான நமது முக பாவங்களை பாருங்கள், ஒரு விகாரம் தெரியும், ஒரு திமிர் தெரியும், தான் என்ற ஆணவம் தெரியும். இவை எல்லாம் எங்கிருந்து வருகிறது? எல்லாம் அகத்தின் அழகு தானே. அகத்தை சீர் செய்தால் மனதில் தெளிவு உண்டாகும், முகத்திலே அறிவின் ஒளியும் அன்பின் நிலையும் தெரியும்.

பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கின்றான். துன்பமில்லா இன்ப வாழ்வை மட்டு மனிதன் நாடுகிறான்.வாழ்வின் நோக்கதிற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால் அது துன்பம் தரும் . இயற்கையாக கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையும் அவ் வாழ்க்கையின் நோக்கத்திற்கேற்ற வாழுகின்ற முறை யாது என்று அறிந்து கொள்வதுதான் அறிவு என்னும் ஞானம்.
தவறிழைப்பது மனம் இனி தவறு செய்து விடக் கூடாது என தீர்மானிப்பது அதே மனம், தவறு செய்யாத வழியை தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனம். மனதை பழைய நிலையில் வைத்துக் கொண்டு புதிய பாதையில் செல்ல அதற்கு எப்படி முடியும்? கட்டுப்படாத மனம் காட்டு யானைக்கு ஒப்பானது.கட்டுப்ட்ட மனமோ ஆக்க வேலைகளுக்கு உதவும்.

எப்படி இந்த மனதிற்கு பயிற்சி தருவது?

நமது பதிவுகளில் பேராசை, சினம், கடும்பற்றும், முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சகம், என்னும் ஆறு குணங்கள் கூட பழிச்செயல்கள் மூலம் பதிவு பெற்றவைகளே. இவற்றை நாம் மெய் விளக்கத் தவ முறையில் அறுகுணச் சீரமைப்பு என்னும் பயிற்சி மூலம் நமக்கு இருக்கும் பதிவுகளை மாற்றமுடியும்.

உணர்ச்சி நிலையில் உணர்ந்த நிலை
1. பேராசை நிறைமனம்
2. சினம் பொருமை
3. கடும்பற்று ஈகை
4. முறையற்ற பால் கவர்ச்சி கற்பு நெறியாக
5. உயர்வு தாழ்வு சமநோக்கு
6. வஞ்சகம் மன்னிப்பு

அகநோக்கும் பயிற்சியின் மூலம் மனதை உயிரில் ஒடுக்கி உயிர் நிலையறிந்து ஆன்ம உணர்வு முதலில் பெற வேண்டும். இந்த நிலையில் இன்ப துன்ப உணர்வுகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் உண்மையை அறிந்த மனிதனுக்கு இந்த உணர்வு பெற்றபின் மனம் உடல் நிலை கடந்து உயிர் நிலையில் நிலைத்துப் பின் உயிர் நிலையும் தாண்டி, தெய்வ நிலையில் லயித்து நிற்கின்ற உயர்பேறு கிட்டுகிறது. செய்கின்ற செயல் எல்லாம் கடமை உணர்வின் கீழ் எல்லோருக்கும் பயனாகும். அறிவே தூய்மையான மெய்பொருளோடு ஒன்றி நிற்கும். இங்கு பழிச்செயல் பதிவுகள் புதிதாகத் தோன்றா. முன்பு இருந்த பதிவுகள் யாவும் அடியோடு முறிந்து போகும். இந்த உண்மையை தான்
“இருள்சேர் இருவினையும்சேரா இறைவனபொருள்சேர்
புகழ் புரிந்தார் மாட்டு”
என்றார் வள்ளுவர்

ஆன்மீகம் என்றவுடன் ஏதோ மதப் போதனை என்று நினைத்துக் கொள்வது எவ்வளவு அறியாமை! எந்த மதமும் ஆன்மீகதோடு தொடர்புடையதுதான்.ஆனால் மதம் மனித சிந்தனைகளை ஏற்று சில கட்டுப்பாடுகளையும் சில கடப்பட்டுகளையும் மனித இனத்தின் மேல் தனது ஆதிக்கத்தை திணிப்பதுதான் மனித சமுதாயத்தில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடுகிறது. தன்னை சார்ந்த மதத்தினரையும் தனக்கு எதிரான மதத்தினரையும் தனது கட்டுக்குல் கொண்டு வருவதற்கு முயர்ச்சிப்பதுதான் மதம். எந்த மதத்தில் இல்லை பஞ்சமா பாதகங்கள்? தனது மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்றால் கலுவேற்றுவது, அவர்களை உயிருடன் எரிப்பது , போர் புரிந்து கொல்வது மற்ற மதத்தினரின் செத்துக்களை கொள்ளை அடிப்பது, கற்பழிப்பது என்று எது முடியுமோ அதை எல்லாம் இறைவன் பெயரில் செயல் படுத்துவது மதம். மனதை பக்குவபடுத்தி மனித நேயத்தை வளர்க்க வேண்டிய மதம் மனிதருக்குள் பிளவை எற்படுத்தி எனது மதம் பெரியது உனது மதம் சிறியது என்று கோட்பாடுகளில் காலத்தை தள்ளிக்கொண்டு இருக்கிறது மதம்.

சில அற்புதமான மஹான்களில் ஆன்ம நேயத்தில் உருவான மத கோட்பாடுகள் காலவோட்டத்தில் ஆன்மீகத்தை மறந்து உலக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு பல விஷயங்கள் வெரும் சடங்காகி போனதுதான் வேதனை. மதம் தனது பல வேசங்களை களைந்தால் அற்புதமான ஆன்மீகம் கண்ணுக்கு தெரியும். அற்புதமான மனித நேயம் மிகுந்த வாழ்க்கையும் புரியும்

உயிருள்ள எந்த மனிதனுக்கும் மனம் என்ற உணர்வு இருக்கும் குரங்கு போன்று திரிந்துக் கொண்டிருத ஆன்மாவை உணர்ந்துக் கொள்வதுதான் ஆன்மீகம். ஒவ்வொரு மனிதனும் தன் உயிரும் மனமும் உணர்ந்து தெளிந்து பக்குவபடுத்துவது தான் ஆன்மீகம். ஆன்மீக தேடல் என்பது ஏதோ பிற்போக்கு சிந்தனை என்பது எல்லாம் ஒரு மாயை. மனம் அறிவின் நிலைப்பட்டால், அதுவே பெரிய சீர்திருத்தம் தான்.மனம் அன்பு நிலைப்பட்டால் மகாத்மா என்று பொருள். மனித மனம் ஒரு நிலைப்பட்டால் மகா சக்தி மிக்கது. அன்பு மயமான மனதிற்கு எப்படி வரும் வன்முறை? மனம் அமைதி கொள்பவன் எப்படி பஞ்சமா பாதகங்களில் ஈடுபடுவான்? தனி மனித சீர்திருத்தம் மனதின் அடிப்படையில் இருந்தால் இந்த சமுதாயம் சிறந்த சமுதாயமாக மிளிரும் என்றால் அது மிகையல்ல.
ஒரு நபியை, ஒரு ஏசுவை, புத்தர் பிரானை, வள்ளுவரை திருமூலரை, வள்ளாலரை ,தாயுமானவரை, வேதாத்திரியை போன்று இன்னும் எண்ணற்ற சித்தர்களையும் யோகர்களையும் தந்தது இந்த ஆன்மீக நெறிதான். அந்த ஆன்மீக நெறி ஏன் நமது வாழ்க்கை நெறியாக கூடாது?

சமுதாயத்திலே முதலில் அனைவருக்கும் மன வளத்தை போதிப்போம்; மனதை பண்படுத்துவோம். மனம் சீர்ப்பெற்றாலே மாண்புடன் வாழும் மனிதனை நாம் கண்டுக் கொள்ளலாம்.

இங்கு ஒரு கேள்வி எழும்? மனதை அடக்க தெரிந்த சில சாமியார்கள் ஏன் பெண்ணின்பம் கண்டு அவமானம் படுகிறார்கள்? அடுத்து சிந்திப்போம்.
Posted by sk.manokaran at 10/22/2010 2 comments

குடும்பத்தில் அமைதி

சீர்திருத்தவாதிகள் என்பார்கள், அல்லது சிந்தனைவாதி என்பார்கள், ஆனால் எப்படிப்பட்ட சீர்த்திருத்தவாதி என்ற கேள்வி எழுகிறது? சிந்தனையும் செயலும் சீர்த்திருத்தம் பெற்று இருக்கிறதா? தன்னையும் தன் சார்ந்த எண்ணங்களையும் சீர்த்திருத்தி சிந்தனைகளை கூர்மையாக்கி இந்த சமுதாயத்திற்கு எருவாகும் மனிதன் எங்கே? சீர்த்திருத்தமும் சிந்தனையும் தன்னை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு இயக்க நிலைக்கு மேன்பட்ட அந்த சீர்பெற்ற மனிதன் தன்னை ஒழுங்கு படுத்தவும் தன்சார்ந்த குடும்பத்தையும் ஒழுக்க நெறியில் சரியான பகுப்பு பாதையில் வழி நடத்தும் திறன் பெற்றவனா என்பதை இங்கு கூர்ந்து கவணிக்க தக்கது.

ஊருக்கு உபதேசம் செய்யும் மாந்தர் பெருமக்கள் தன் குடும்பத்தின் அமைதிக்காக என்ன செய்கின்றான்? வாழ்க்கை கலை என்பது ஒரு கருங்கல் போன்றது. கருங்கல்லிலே நமக்கு தெரியாமல் அழகிய சிலை மறைந்திருப்பது போன்று. நமது வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு சிற்பியின் திறமையினால் அழகிய சிலை வடிவம் உயிர்ப்பெறுவது போல் நமது வாழ்க்கையிலும் துன்பத்தை கழித்து இன்பம் என்னும் அழகிய வாழ்வை பெறுவது நமது கடமை அன்றோ?

குடும்ப அமைதிக்கும் குடும்ப உறவுக்கும், பெற்ற மக்கள் செல்வங்களின் மேன்மைக்கும் அவர்களின் ஒழுக்க நெறிக்கும் கணவன் மனைவியின் பங்கு எவ்வளவு முக்கியம்?
பல குடும்ப பிரச்சனைகளில் போராடிக் கொண்டிருக்கும் நமது இந்திய சமுதாயம் இன்று பிரச்சனைகளின் மையமாக உருவேடுத்திருப்பதற்கு காரணம் குடும்பத்தில் அமைதி இன்மையே. பேசித் தீர்க்க வேண்டிய பல விடயங்கள் பூதகரமான பிரச்சனைகளாக மாறிப்போனதற்கு விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததே. நமது இளையோரிடம் ஒழுக்க நெறியும் சுய மரியாதையும் இல்லாமல் போனதற்கும் குடும்பத்தில் அமைதி இன்மையே.

நேற்றைய மதிய வேளையில் பூச்சோங் otk வட்டாரத்தில் உள்ள ஒரு வங்கிக்கு ( maybank ) ஒரு வேலையாக சென்றேன். பக்கதில் ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்ததை அதிர்ச்சியோடும் திகைப்புடன் நோக்கவேண்டி இருந்தது. ஒரு ஆண் மாணவரரும் ஒரு பெண் மாணவியும் வாடப்போடா வாடிப் போடி என்று சகஜாமாக பேசுவது எனக்குள் என்னமோ செய்தது . சமுதாயம் ஏன் இப்படி தரம் இழந்துக் கொண்டிருக்கிறது.? இதற்கு யார் பொறுப்பு?

பெரும்பாலான குடும்பத்தில் கணவன் மனைவி என்ற இருபாலரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தான்தோன்றித் தனமாக நடப்பதும், கணவனின் தியாகத்தையும் மனைவியின் தன்னலமற்ற சேவையயை போற்றாமல் இருபதே பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.அந்த பிரச்சனைகளின் மைய வடிவமாக குழந்தை வளர்ப்பு என்பது கேள்விக் குறியான ஒன்றாகிவிடுகின்றது. நல்ல கணவன் மனைவியாக வாழ மறுக்கும் தம்பதியினர் குடும்பம் என்னும் பல்கலைகழகத்தை எப்படி வழி நடத்தமுடியும்? இன்றைய பெரும்பான்மையான சமுதாய இன்னலுக்கு பெற்றோரின் கடமை தவறிய வளர்ப்பு முறை என்றால் யாராவது மறுக்கத்தான் முடியுமா? விதை ஒன்று போட்டால் சூரா ஒன்றா முளைக்கும்? தாய் தந்தை அல்லது கணவன் மனைவி வினைச்செயல் பிள்ளைகளின் உதாரணத்திற்குறிய செயலாகத்தான் இருக்கும். இன்றைய வளரும் பிள்ளைகளின் உதாரண புருசர்கள் தாய் தந்தை தான்.

கணவன் மனைவி உறவு என்பது ஒரு அற்புதமான உறவு. தம்பதிகள் இனைந்து ஒன்று சேர முடிவுகள் எடுத்து குடும்பத்தை வழி நடத்தினால் சிறந்ததோரு உதாரண குடும்பங்களை உருவாக்க முடியும். ஒரு கணவனின் தன்னில் பாதிதான் மனைவி. தன்+பாதி என்னும் தமிழ் சொல்லின் விரிவுதான் தம்பதிகளாக உருமாறியதில் வியப்பு ஒன்றும் இல்லை. சிவனின் மறு பாதி சக்தி, சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பது சமயம் சார்ந்த அறிஞர் பெருமக்களின் கருத்து. அதுபோல் குடும்பம் என்றால் கணவன் மனைவிக்கும் சரி பாதி பங்கு உண்டு. சரி சம உரிமை என்பதைவிட சரி சம கடமை என்பது சாலப்பொருந்தும். இல்லறம் என்பது படிக்கும் பாடச்சாலை மட்டும் அல்ல, அது ஒரு இனிய அனுபவம். அந்த அனுபவத்தை நல்ல படிப்பினையாகவும் நல் அறமாக ஒழுக்க சிந்தனையாகவும் மொத்தத்தில் வாழ்க்கை கல்வியாக தன் மக்கட்செல்வங்களுக்கு போதிப்பதில் என்ன தவறு நேர்ந்து விடப்போகிறது?

நமது குழந்தைகள் எதிர்க்காலத்தில் கதறி அழுவதில் இருந்து அவர்களை காப்பாற்றுங்கள். இந்த கொடுரமான உலகில் இருந்து தீமைகளை கற்றுக்கொள்வதில் இருந்து அவர்களை தடுத்து நல்ல பண்பான ஒழுக்க சீலர்களாக தடம் அமைத்துக் கொள்வதற்கு உதவுங்கள் குடும்பத்தில் அமைதி அவசியம். அது போல் உங்கள் உள்ளத்திலும் அமைதி மிக மிக அவசியம்.அப்பொழுதுதான் சமுதாயம் சிறக்கும்,செழிக்கும்.

இன்றைய சிந்தனை
உறவிலே அமைந்துள்ள உண்மையை உணர்ந்திடு, துறவிலே உள உள்ளத் தூய்மை பெற்றுய்யலாம்.- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.

குடும்ப மகிழ்சிக்கு அறிவுரைகள்

இதுதான் நல்ல குடும்பம்! ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான அறிவுரைகளை கூறு கிறார் வேதாத்திரி மகரிஷி. அந்த அறிவுரைகள் :

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய ன்றையும் கடைப்பிடித்து வரவேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்.

காய கல்ப யோகம்

காய கல்ப யோகம்

மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவு.
1. ரசம்
2. ரத்தம்
3. சதை
4. கொழுப்பு 5. எலும்பு
6. மஜ்ஜை மற்றும்
7. சுக்கிலம்

என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் 'சீவ இன அனைத்தடக்கப் பொருள்' தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.
உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.

உதாரணமாக
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.

சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து 'மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி' என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.
இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.

திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.
1. ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர்
அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால்
மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினை கள்கழிய உலகுக் கென்றும்
தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா

2. கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்.
காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்
இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை
இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை
மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும்.
மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்!

காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம்.
சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.
காயகற்பப் பயிற்சி பயன்கள்

1. உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும்.
2. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
3. முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
4. பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.
5. மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.
6. தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.
7. மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.
இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.------வேதாத்திரி மகரிஷி

குண்டலினி யோகம்

குண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
Vethathiri Maharishi - Simplified Kundalini Yoga

நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே சொல்லாமல், கீழ்நோக்கிப் போகா விட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மனிதனின் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பி விடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவிஇருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல,உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளின் அடி மட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும்.

ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும்। மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள்,மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும்பயிற்சியையும் நல்குவதே எளிய முறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம்,அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.

எளியமுறை குண்டலினி யோகம்
· ஆக்கினைச் சக்கரம்
· சாந்தியோகம்
· துரிய நிலை
· தற்சோதனை
· துரியாதீதம்
· சமுதாயச் சீர்திருத்தம்

நாம் நாள்தோறும் உணவு உண்ணுகிறோம்। குளிக்கிறோம். தூங்குகிறோம். ஏன்?

காப்பு, தூய்மை, ஓய்வு ஆகிய மூன்றும் தேவையாக உள்ளன. நமது உடலியக்கத்தின் விளைவாக நம் உடலிலிருந்து எப்போதும் கோடிக் கணக்கான அணுக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. அவ்விழப்பை ஈடுசெய்வதற்காக நாம் உணவு உண்ணுகிறோம்.
உடலிலே அழுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் படிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வழுக்கைப் போக்கி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காகவே நாள்தோறும் குளிக்கிறோம்.
ஐம்புலன்கள், கை, கால் முதலிய உடற் கருவிகளை இயக்கிக் கொண்டே இருக்கிறோம்। அதனால் நரம்புகள் சோர்வடைகின்றன. நரம்புகளின் சோர்வைப் போக்கி முறுக்கேற்றிக் கொள்ள ஒய்வு கொள்ளுகிறோம்இ தூங்குகிறோம்.

பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.
இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன।

மறதியும்-விழிப்பும்
எல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை। இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக-பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய, பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே போரியக்க மண்டலமாக (Universe)விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள்.


உயிரினங்களில் பாரிணாமத் தொடர்பால் சிறப்பு பெற்ற நிலையே மனிதன்। போரியக்க மண்டலக் காட்சிகளாக உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐவகை விளைவுகளையும் உணரும் ஐம்புலன்களையும்,இவையனைத்துக்கும் மூலமான வெட்டவெளியின் பெருமையை உணரத்தக்க ஆறாவது அறிவையும் பெற்று மனிதன் வாழ்கிறான்.

உடற் கருவிகளின் சிறப்பாலும் அறிவின் சிறப்பாலும் இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக விருப்பம்போல மாற்றி அமைத்து துய்த்து மனிதன் வாழ்கிறான்। தன் செயல் திறனிலும் புலன் கவர்ச்சியிலும் முழுவதும் ஈடுபட்டு, தன் உயிர் சிறப்பும் உயிரின் மூலச் சிறப்பும் மறந்து விடுகிறான். இதனால் அறிவு குறுகிய நோக்கில் செயல்படுகிறது பேராற்றல் பெற்ற இயற்கையே எல்லாமாகி தானுமாகி இன்ப துன்ப உணர்ச்சிகளால் எல்லைகட்டப் பெற்று இயங்கும் பேருண்மையை மறந்து தான் ஏதோ தனித்த பொருளாக இயங்குவதாகக் கருதி மயங்கி வாழ்கிறான்.


இத்தகைய புலன் மயக்க மறதியில் செயல் புரியும் ஆர்வமாக எழும் உயிர் விரைவு, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு மன உணர்ச்சி எண்ணங்களாக எழுகின்றன. பெரும்பாலும் மக்கள் இவ்வுணர்ச்சி மனோ நிலைகளில்தான் எண்ணம், சொல், செயல், இவற்றை ஆற்றுகின்றார்கள். இதன் விளைவாகத் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தைப் பெற்றும் அளித்தும் வாழ்கின்றனர்.
இயற்கை நியதியை உணர்ந்து பிறர் தேவைக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்து முறையோடும் அளவோடும் ஆற்றும் செயல்களே நற்கர்மங்கள். இவற்றால் எல்லோரும் இன்பம் காத்து வாழலாம். இயற்கை நியதியை மறந்தும் மதியாமலும், சமுதாய மக்கள் கருத்தையும் நலனையும் மறந்தும் மறதியாலும் ஆற்றும் செயல்கள் எல்லாம் தீய வினைகளாகும்.
ஒரு மனிதன் தன்னைப் பழக்கிக் கொள்ளும்வாறு தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நல்வினையோ தீவினையோ அவனிடம் தோன்றிக் கொண்டேயிருக்கும்।

எந்த செயலும் புலன்கள் உறுப்புகள் இவற்றில் இயக்கப் பதிவாக அமையும்। எண்ணப் பதிவாக அமையும். வித்து அணுக்களில் பரம்பரைத் தரபதிவாக அமையும். இம்மூன்று பதிவுகளும் சேர்ந்து உயிரணுக்களில் பாரிணாமச் சிறப்பாற்றலாக அமையும். இவ்வாறு மனிதன் பெறும் பதிவுகளே வினைப்பதிவுகளாகும்(Impressions Of Deeds).

இன்று உலகெங்கும் மனிதகுல வாழ்வில் அமைதி குலைந்து காணப்படுகிறது। பிணக்கும், பகையும், போட்டியும், போரும் வாழ்வில் துன்பங்களை மலியச் செய்து வருகின்றன. இவற்றிற்குக் காரணம் மனிதனேயாகும். தீவினைப் பதிவுகளால் தரக்குறைவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அறிவைப் புலன் கவர்ச்சியில் மயங்க வைத்துக் கொண்டு நினைவில் குறுகி நிற்கின்றான். தனக'கு மூலமான பேராதார நிலையை மறந்து விட்டான். இவையே துன்பங்கட்குக் காரணமாகும்.

உலகில் அமைதி நிலவவேண்டுமெனில், மனித குலம் இனிமை காத்து வாழ வேண்டுமெனில், தீய செயல் பதிவுகளை மாற்றி நற்செயல் பதிவுகளுக்குப் பழகிக் கொள்ளவேண்டும்। தவறு புரிந்து ஏற்றுக் கொண்ட, உயிரணுக்களில் பதிவாகியிருக்கும், தீவினைப் பதிவுகளைப் (Impressions Of Sins)போக்கித் தூய்மைபெற வேண்டும். தனது உயிர் மூலம் அறிந்து அறிவில் தெளிவும் முழுமையும் பெற அறிவை ஒடுக்கி உள் நோக்கிப் பயில வேண்டும். இத்தகைய செயல்கள் மூலம் உயிருக்குக்காப்பு, தூய்மை,ஓய்வு என்ற மூன்றும் கிடைக்கும். இவற்றிற்கான பயிற்சி முறைதான் நோன்பு என்றும் தவம் என்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய நோன்பு முறையை நமது முன்னோர்கள் இருவகையாகப் பிரித்தார்கள். அவற்றில் ஒன்று பக்தி நெறி மற்றொன்று ஞானநெறி. குழந்தை வயதுடையவர்களும் அறிவின் நுண்மை இல்லாதவர்களும் தெய்வ நிலையைக் கூர்ந்துணர்ந்து அதில் நிலைத்துப் பயில முடியாது. ஆகவே அவர்களுக்கு தெய்வ நிலையின் பெருமைய விளக்கி அதன் இருப்பு நிலையல் நம்பிக்கை வைத்து வணங்கவும், சமுதாய நலன் கெடாத வகையில் தனது இனிமை காக்கும் செயல்களையே புரிந்து வாழும் எண்ணம், சொல், செயல், பயிற்சிகளையும் வகுத்தார்கள். இதுவே பக்தி நெறியாகும்.
தெய்வ நிலையினைக் கூர்ந்துணரும் அறிவுடையோர்கள் முதலில் தனது உயிர் நிலையை உணரவும், பின் உயிரியக்க விரைவைப் படிப்படியாகக் குறைத்து நிலைத்து நின்று பரமாகி நிற்கவும் ஏற்ற தவ முறையே வகுத்தார்கள்। இதன் மூலம் ஒரு மனிதன் தனது அறிவைப் பற்றி, உயிர் மூலத்தைப் பற்றி தெளிவாக உணர்ந்துக் கொண்டு வாழ்வாங்கு தானும் வாழ்ந்து வாழத் தெரியாதவர்களுக்கும் வாழ வழிகாட்டி உதவும் நெறியை வகுத்தார்கள். இதுவே ஞான நெறியாகும்.

காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்று வகையாலும் உடலோம்பல் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே உயிரோம்பலும் மனிதனுக்கு இன்றியமையாதது என அறிந்தோம்। உயிர் தூய்மைக்கான பக்தி நெறி,ஞான நெறி, இரண்டு வழிகளில் பக்தி நெறி மனிதனை ஒரளவு தான் பண்படுத்துகின்றது. ஞான நெறியின் மூலம் தான் அறிவின் முழுமைப் பேற்றை அடைய முடியும். ஞான நெறியால் தான் உயிரின் இருப்பு,இயக்கம், விரிவு இவற்றைப் பற்றி தெளிந்து முழுமையாக முடியும்.

பக்தி நெறியிலிருந்து ஞான நெறிக்கு உயர வேண்டுமெனில் மனதை உயிரில் ஒடுங்கி மனம், உயிர் இரண்டையும் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும்। உயிரின் இயக்க விரைவைக் குறைத்து ஞானப் பேற்றை அடைந்துப் பின் தன் மூல நிலையான நிறை நிலையை (தெய்வ நிலையை) அனுபவமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற முறையான உளப்பயிற்சி அகநோக்குப் பயிற்சியாகும். இப்பயிற்சி முறைதான் யோகம் என்று கூறப்படுகின்றது.

மனதை உயிரில் ஒடுக்க வேண்டுமெனில், இயக்க மையத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்। உடல் முழுவதும் உயிர் பரவி இருந்தபோதும் அது மூலாதாரம் எனும் முதுகுத்தண்டின் கீழ்ப் புறத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. உயிராற்றலுக்குக் குண்டலினி சக்தியென்னும் ஒரு சிறப்புப் பெயருண்டு. இதனால்தான் குண்டலினி அமர்ந்திருக்கிறதென்று கூறுவது வழக்காயிற்று.

உயிராற்றலான குண்டலிணி சக்தியின் இயக்க மையத்தை புருவ மையத்துக்கு மாற்றியமைத்தால்தான் மனதை அதில் ஒடுக்க முடியும்। உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து மாற்றவும் பின் அதில் மனதை ஒடுக்கவும் ஏற்ற பயிற்சி தான் குண்டலினி யோகம்.

உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து எழுப்பிப் புருவ மையம் கொண்டு வர மூச்சுப் பயிற்சியைப் பின்பற்றினார்கள்। நமது முன்னோர்கள் மூச்சுப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியை நெற்றிக்குக் கொண்டு வர பல ஆண்டு காலம் தேவை. மேலும் அச்சக்தி ஏறிவரும் வழியில் சுவாதி\u202டிடானம் எனும் நீர் மையத்தையும், மணிப்புரகம் எனும் வெப்ப மையத்தையும், அனாகதமெனும் காற்று மையத்தையும், விசுத்தி எனும் புதாகாச மையத்தையும் கடந்து வரவேண்டியுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் இடப்பெயற்சி கொள்ளும்போது சில பல உடல் நோய்கள் காணும். அவற்றையெல்லாம் அனுபவித்துப் பெரு முயற்சியோடு தான் மேலேறி வரவேண்டும். இல்லறத்தில் வாழ்வோர்களுக்கு இம்முறை ஏற்றதல்ல.

எளிய முறை குண்டலினி
எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம்। காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.


மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள்। அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ,பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி,செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு,முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினைச் சக்கரம்
உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது। புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும்। அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது। மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்। தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.

சாந்தியோகம்
ஆக்கினைச் சக்கரமாகிய நெற்றிக் கண் யோகத்தினால் குண்டலினி இயக்கம் சில சமயம் உடல் தாங்கும் ஆற்றலுக்கு மேலாக ஓங்கும்। அப்போது தலை கனம் உண்டாகும். இந்தக் குறிப்பே சாந்தி யோகப் பயிற்சிக்கு ஏற்றதாகும். அப்போது ஆசானை ஆண்டி சாந்தி யோகப் பயிற்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும் வேறு முறைகள் மூலம் குண்டலினி ஏற்றம் பெற்றோர் சாந்தி யோக முறையறியாமல் பலர் குண்டலினி ஏற்றத்தைத் தாங்கும் சக்தியின்றி துன்புற்று வருந்துகிறார்கள். இத்தகையோர் உடனடியாகச் சாந்தி யோகம் தெரிந்துப் பயிலுதல் வேண்டும்.

துரிய நிலை
ஆன்மா தனது பழிச் செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரியநிலை யோகமாகும்। உயிராற்றல் மிக நுண்ணிய இயக்க நிலைக்கு இந்தப் பயிற்சியின் மூலம் திரும்பும். பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஓங்கி உள்ளுணர்வு (Intution) ஒளிரும். துரியநிலை யோகமானது ஆசான் தனது தவ ஆற்றலைக் கண்கள் மூலம் மாணவனுக்குப் பாய்ச்சிக் குண்டலினி சக்திக்கு ஒரு உயர் ஆற்றல் அளிக்கும் செயலாகும். மூளையின் நுண் பகுதிகளையெல்லாம் தூண்டி இயங்க வைக்கும் ஆற்றல் துரியநிலை யோகத்திற்கு உண்டு. இதன் மேண்மையினை எழுதி விளக்குவது அரிது. அவரவர்கள் அனுபவத்தால் பயனடைந்து விளங்கிக் கொள்ளவேண்டியது.

தற்சோதனை
துரியநிலை யோகத்தால் ஆன்மா தூய்மையடைந்து வரும்போதே தற்சோதனைப் பயிற்சியினைத் தொடங்க வேண்டும்। எண்ணம், சொல்,செயல் இவற்றின் விளைவறிந்து செயலாற்றும் ஒழுக்கப் பயிற்சியிலிருந்து தான் யார்? என்று தெளிந்து கொள்ளும் முழுமைப் பேறு வரையில் இப்பயிற்சி விரிவடைந்து பயன் தருகின்றது. ஒழுக்கம், கடமை, ஈகை,உயிர் விளக்கம், மெய் பொருள் விளக்கம் அனைத்தும் தற்சோதனை பயிற்சியினால் பெறப்படும்.

துரியாதீதம்
தெய்வ நிலைக்கு உயிரை உயர்த்தி இரண்டு நிலைகளும் கலப்புறப் பயிலும் யோகமே துரியாதீதமாகும்। இதனைச் சமாதியென்றும், சீவப்பிரம்ம ஐக்கிய முக்தி என்றும் கூறப்படுகின்றது. மனிதனாகப் பிறந்தவன் அறிந்து முழுமைபெற வேண்டிய விளக்கம் அனைத்தும் அந்த யோகத்தால் சித்தியாகும்.

முறையாக இத்தகைய எளிய முறைக் குண்டலினி யோகத்தைப் பயின்றால் மனிதன் தனது அறிவில் முழுமை பெறலாம்। உணர்ச்சி வயப்படாமல் சம மன நிலையில் கடமையாற்றி மகிழ்ச்சியோடு வாழலாம். வாழப் பறந்தவர்கள், வாழ்வை விளங்கிக் கொண்டுதானே வாழவேண்டும்? ஆகவே மெய்ஞ்ஞானம் எனும் அறிவின் விளக்கப்பேறு மனிதனுக்கு இன்றியமையாதது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வயதுக்கு வந்த உடன் பயின்று பலன் பெற வேண்டிய உளப்பயிற்சியேகுண்டலினி யோகம்.

சமுதாயச் சீர்திருத்தம்
உலகில் பெரும்பாலான மக்கள் புலன் கவர்ச்சியில் மயங்கி, ஆன்ம நிலையை மறந்து அறுகுண வயமாகி வாழ்கின்றார்கள். துன்பங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பால்கவர்ச்சி விரைவில்,மயக்கநிலையில் பெரும்பாலும் குழந்தைகள் உலகில் உற்பத்தியாகின்றன. அக்குழந்தைகளும் மயக்க நிலையில்தானே வாழ முடியும்? இந்த போக்கிலிருந்து உலகம் திருப்பம் பெற வேண்டுமெனில் திருமணத்திற்கு முன்னதாக ஆணும் பெண்ணும் குண்டலினி யோகம் கற்றுப்பயின்று முழுமை பெறவேண்டும். அப்போது தான் குடும்பத்தைத் திறமையோடு நடத்தும் ஆற்றல் வளருவதோடு அவர்கட்குப் பிறக்கும் குழந்தைகளும் அறிவின் விழிப்பு நிலைக்கு எளிதில் திரும்பிவிடும். இயற்கையான முறையில் கருத்தடைக்கும் குண்டலினியோகம் வழி செய்கிறது. உயிரியக்க மையத்தைக் குறிப்பிட்ட இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை உண்டாகிவிட்டால் தேவையானபோது குழந்தைப் பேறு அடையவும்,வேண்டாத போது அதனை தவிர்க்கவும் நுட்பம், ஆற்றல் இரண்டும் குண்டலினியோகத்தால் கிட்டும்.
பொதுவாகச் சொன்னால் குண்டலிணி யோகம் தனிமனித முழுமைக்கும்,உலக சமுதாய நலணுக்கும் ஏற்றதோர் உளப்பயிற்சி முறையாகும்। உயிர் நலம் பேணும் எல்லா முறைகளும் இந்த யோகத்தில் அடங்கியுள்ளன. இவ்வரிய யோகப் பயிற்சி முறையை விரும்புவோர் தகுதியுடையோர் அனைவரும் கற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களுக்கு உதவும் ஒரு அருள் நிலையமே உலக சமுதாய சேவா சங்கமாகும்.

இந்த சங்கத்தின் அருள் விளக்கப் பணி நிலையங்களே மனவளக்கலை மன்றங்கள்। இப்போது பல மன்றங்களில் இச்சங்கக் கிளைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கட்கும் வெளிநாடுகட்கும் இம்முறையைப் பரப்பி நலமளிக்க நம்மாலியன்ற தொண்டினைப் புரிவோம். இத்தெய்வீகத் தொண்டின் பெருமையுணர்ந்த அறிஞர்கள் பலர் ஞானாசிரியர்களாகப் பயிற்சி ஏற்றுள்ளனர். மேலும் பலர் முன் வரவேண்டும். இவ்வுலகில் எல்லாப் பகுதிகளிலும் இந்த மனவளக்கலை முறை பரவ நாம் ஒன்றுகூடி செயலாற்றுவோம்.

நம்மை அளித்த உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்றாகக் கருதி உவகையோடு அருட்தொண்டு புரிவோம் வாரிர் என்று தவத்தில் தேர்ந்த அன்பர்கள் எல்லோரையும் அழைக்கின்றேன்। இதனால் உங்கள் குடும்பக் கடமைகள் சிறிதளவும் குறைவு படாமல் இருக்கவும் விழிப்போடு இருக்கவேண்டும்.

இதுவரையில் ஞானம் என்ற துறையில் சில தவறான கருத்துக்கள் உலவி வருகின்றன. அவை
1. ஞானம் என்பது எளிதில் மனிதனுக்குக் கிட்டாது.
2. இல்லறத்தார்களுக்கு ஞானம் ஏற்றதல்ல.
3. பெண்கள் ஞானத்திற்கு ஒவ்வாதவர்கள்.
4. ஞானம் பெற்றால் மனிதன் குடும்பத்தை மறந்து விடுவான்.
5. ஞானம் பொருளாதாரத் துறைக்கு எதிரான ஒன்று.
இவ்வகையான ஐவகைத் தவறான கருத்துக்களையும் திருத்தி இன்று எண்ணிறந்த மக்களுக்கு மெய்விளக்கம் அளித்திருக்கிறது நமது மனவளக்கலை மன்றங்கள்। இத்தகைய மன்றங்கள் வளர வழி செய்து நம் கடனாற்றுவோம்.

பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.
இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

சாந்தி தவம்

சாந்தி தவம்.
அன்பர்களே வாழ்க வளமுடன்!

சொந்த வீட்டில் அல்லது சொந்த ஊரில் பெயர் வாங்குவது கடினம். அது போன்று எவ்வளவு பெயரால் சாந்தி தவத்தை உணர்த்து முழுமையாக செய்ய முடிகின்றது. சாந்தி தவத்தை பற்றிய தங்கள் அனுபவத்தை பகிர்த்து கொள்ளலாமே.


வெள்ளி கிழமை கலை தீப பயிற்சி செய்த பின்பு சாந்தி செய்தால் நன்றாக உணர முடியும். தினமும் தூக்கத்திற்கும் முன்பு சாந்தி செய்து பழகினால் நல்லது.


நானறிந்த ஒன்றும் இங்கே: ஒரு சிறு கர்சீப்பை நீரில் நனைத்து, பிழிந்து பின் மூலாதாரப் பகுதியில் உருட்டி வைத்துக் கொண்டு தவம் செய்வது தாரணைக்கு எளிதாய் அமையும். மூலாதாரத்தின் உணர்வு நன்றாய் தோன்றிய பின் கர்சீப்பை எடுத்து விடலாம்.
ஒரு பழைய அன்பர் சொன்னது: குண்டலினி நமது முறையில் முதுகுத் தண்டுக்கு வல இடப்புறமுள்ள பிங்கலை, இட நாடிகளின் [உஷ்ண, குளிர் நாடிகள்] வழியாகத்தான் மேலெழும்புகின்றது. மூலாதாரத்தவத்தைச் செய்யும் போது ஒரு நனைந்த ஈரத்தண்டை முதுகுத்தண்டின் மீது முழுக்கப்படுமாறு போர்த்திக் கொண்டால், உஷ்ண, குளிர் நாடிகளின் வழியாக அத்துணை எளிதில் உயிராற்றல் மேலெழும்பாது, அப்படியே சற்றே எழும்பினாலும், நனைந்த துண்டு போர்த்தியமையால் அதை நம்மால் உணர இயலாது. இவ்வாறு மனம் குண்டலினியோடு சேர்ந்து நகரா நிலையில், மூலாதாரத்தில் தேங்கியுள்ள ஆற்றலிலே தான் மனம் நிலைக்கும். இது சாந்தி யோகத்தை நல்லபடியாகச் செய்ய வழிவகுக்கும்.
மேலும் தங்களுக்காக சில பழைய அன்பர்களைத் தொடர்பு கொண்ட போது இன்னும் சில பயனுள்ள நுணுக்கங்களை அறிந்து கொண்டேன்:

1. சாந்தித் தவம் துவங்குகையில் மூலபந்தத்தில் இருந்து வரலாம், அது கவனத்தை ஆசனவாய்ப்பகுதியில் இருத்த உதவியாய் அமையவல்லது.

2. அசுவினி முத்திரையைத் தவறாது போட்டு வருபவர்களுக்கு மூலாதாரப் பகுதியில் கவனத்தை வைப்பது பழக்கமாய் மாறிவிடும். அத்தகையவர்கள் சாந்தி தவத்தில் எளிதில் கவனத்தை அப்பகுதிக்கு நகர்த்தி விடுவார்கள்.

3. புவிக்கு தன் மீது படும் எந்த ஒரு காந்தக்களதையும் தன்னுள்ளே ஈர்த்துக்கொள்ளும் பண்பு உண்டு [earthing]. நாம் சம்மணமிட்டு தவம் செய்கையிலே புவியின் மேற்பரப்புக்கு மிக அருகாமையிலே அதைத் தொடுமளவுக்கு நமது மூலாதாரம் வருவதினாலே, அங்கே தேங்கியுள்ள காந்தம், புவியின் காந்தக்களத்தோடு பின்னிப் பிணைய ஏதுவாகின்றது. இந்த நிகழ்வு கூட, மூலாதாரத்தில் உறங்கும் காந்தத்தை நாம் உணர முடியாமற் போவதற்குக் காரணமாக் அமையக்கூடியதே. இதைத் தவிர்க்கவே நாம் பாய் போன்றவற்றில் அமர்ந்து தவம் செய்கின்றோம். இக்காரணத்தாலே, சற்றே உயரமான தலையணை, மடித்த கம்பளிப் போர்வை போன்றவைகளின் மீது அமர்ந்து தவம் செய்வது மூலாதார உணர்தலை எளிதாக்கும். சேர் மீது அமர்ந்து தவம் செய்தலையும் முயற்சிக்கலாம்.
சாந்தி தவம் சில சிந்தனைகள்
1. தண்டுவட சுத்தி செய்யும் போது மூச்சு விடும் போது மூலாதாரத்தை கவனிக்க வேண்டும்
2. மூலதாரத்தில் சிறு பந்து வைத்து தவம் செய்யலாம்
3. பிருத்த்வி முதிதேரியல்(mutra) மனம் வைத்து மூலாதாரத்தை கவனித்தால் சாந்தி நன்கு பிடிபடும்.
இன்னும் சில உத்திகள்
1989 ஆம் ஆண்டு நான் தர்மபுரி மன்றத்தில் சேர்ந்த போது, அருள்நிதி ரவி அவர்கள் கூறியது.
1 . அக்கு பிரஷர் செய்யும் முதல் புள்ளி இடது கை மூன்று விரலில் வைத்துக்கொண்டு, வலது கை ஆல் காட்டி விரல் மூலாதாரத்தை தொட்டு (முதுகு தண்டின் நுனிப்பகுதியை) தொட்டுக்கொண்டு இடது பக்கம் படுத்துக்கொண்டு செய்ய வேண்டும்.
தூக்கம் வரும் வரை (10 - 15 நிமிடங்கள் ) மனம் விரல் நுனியை கவனித்தவாறு இருந்தால் நன்கு தூக்கம் வரும். சாந்தி தவம் நன்கு உணர முடியும்.
சாந்தித் தவம். அதிகம் மனதுக்கு (பிடிபடாததற்கு)
தோன்றாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

நமக்கு ஒரு பதினைந்து வயது இருக்கும் போதே மூலாதாரத்திற்கு ஆற்றல் வந்து விடுவதால்
நாம் முழுமையாய் தவம் கற்கும் காலம் வரை அங்கேயே (தாய்வீடு) இருந்ததால் புது இடத்திற்கு போனால் ஆக்கினை, துரியம்.இன்னும் பிற தவங்கள் மனதில் (உயிரில்)
பதிகிறது வழக்கமாய் அங்கேயே இருப்பதால் தெரிவதில்லையோ?
சாந்தி தவத்தின் போது நாம் அங்கேதான் இருக்கிறோம். புது இடம்போல் பழகிய இடம் தோன்றாது.
யோகா சாதனையின் ஆற்றல் மிகுதியின் காரணமாகவோ, உணவின் காரணமாகவோ, ஆரத்சியின் காரணமாகவோ, அல்லது கோள்களின் நிலை காரணமாகவோ, தவக்கனல் மிகுந்தால், அதை உடனடியாக உணர்ந்து, தனித்துக் கொள்ளவும், அந்த தவக்கனளின் மிகுதியை உடல் நலனுக்கும், உள்ளத்தின் நலனுக்கும் பயனாக்கி கொள்ளவும் சாந்தி தவம் உதவுகிறது.
சாந்தி தவத்தினால் உடல் வெப்பம் தனியும், நரம்பு மண்டலம் அமைதி அடையும். தவத்தின் போது முழுமையான அனுபவம் ஏற்படும். உடலுக்கு மூலப்பொருளான வித்துக் குழம்பு பால் சுரப்பியில் தேங்கி கிடப்பதால் சாந்தி தவத்தால் தவ ஆற்றல் உடல் ஆற்றலாக மாறும்.
முதல் அறிகுறி
நாம் சாந்தி தவத்தை முழுமையாக செய்தால் முதலில் கண்கள் குளுர்ச்சி பெரும். இது ஒரு மூத்த பேராசிரியர் கூறியது.
1 .சாந்தி தவத்தால் நிலத்தை சார்ந்த ஆராய்ச்சி பற்றிய அறிவு அதிகமாகிறது.
2 .உடல் வலி, காய்ச்சல், அசீரணம் போன்ற நோய்கள் நீங்குகின்றன.
3 .உடலில் உயிரின் இயக்கம் சீராகிறது.
4 .உடல் சக்தி மனோ சக்தியாகவும், மனோ சக்தி உடல் சக்தியாகவும்
மாற்றி பயன் பெறலாம்.
ஆரம்ப பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிட்ட பிறகும் மூன்று நிமிடம் இறங்குபடி கவனிக்க வேண்டும்.
இதற்கு உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதில்லை.
சாப்பிட்டு முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களை பார்த்துக்கொண்டே, நினைவை மட்டும் மூலதாரத்தில் வைத்திருக்க வேண்டும்.
மூலதாரத்திளிருந்து உணர்வு மேல்லேழுப்பப் பெற்ற உணர்வுவலார்களுடைய உயிர் ஆற்றலனது சில சூழ்நிலைகளுக்கு உள்ளாகும் போது சிதைவையும் , இழப்பையும் ஏற்க வேண்டி வரும். அவை :
1 . மாத விலக்கில் இருக்கும் பெண்களின் அருகாமை
2 . நாயின் அருகாமை
3 . பன்றியின் அருகாமை மற்றும்
4 . பிணத்தின் அருகாமை.
முகத்திலோ, கண்ணிலோ சூடு தெரியலாம். ஜூரம் வரலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல் போன்ற உஷ்ண வியாதிகள் வரலாம். அப்படி வந்து விட்டால், உடனடியாக சாந்தி யோகம் கொடுத்து விட வேண்டும்.
சாந்தியை பல காலம் செய்வதால் எந்தப் பிரச்சினையும் வராது.
மனதையும், உடலையும் அமைதி படுத்துவதால் தான் அதற்க்கு சாந்தி தவம் என்றே பெயர்.
சாந்தி தவம் செய்வதால் உடல் குளிர்ச்சி அடையலாம் .
உடல் செல்களின் காந்த துருவ இணைப்பு ஒரு ஒழுங்குக்கு வரும்.
நிலைக்கும்.
இதானால் நாள் பட்ட கர்ம நோயும் தீரும்.
கர்ம நோயை எதிர்க்க சாந்தி யோகம் செய்வதென்றால் தொடர்ந்து செய்து வர வேண்டும். தினந்தோறும் செய்ய வேண்டும். இரண்டு வேளையும் செய்து வர வேண்டும். மூன்று மாதம் செய்து வர வேண்டும். அதற்குள் அந்த நோயை அகன்று விடும். இல்லையென்றால் இன்னும் மூன்று மாதம் நீடித்து கொள்ள வேண்டும். இக்கலகட்டதில் மேல் தவம் எதுவும் செய்யக் கூடாது.
மூலாதாரம் மண்ணுக்குரிய மையமாகையினால்,
சப்த தாதுக்களில் மண்ணுக்குரிய வித்துவின் உற்பத்தி அதிகமாகும்.
அதனால் பால் உணர்வுகள் கூடுதலாகும்.
பால் உறவில் வல்லமை கூடும்.
இவற்றை சமாளித்து கொள்ள கூடிய அறிவு பலமும்,
குணா சிறப்பும் ஏற்கனவே பெற்றுக்க வேண்டும்.
பால் உணர்வில் வல்லமை இன்மையை போன்ற
பலகீனக்களையும் இந்த தொடர்ந்த சாந்தி யோகம் சரிப்படுத்தும்.

மலட்டு தன்மை கூட சாந்தி யோகம் சரிப்படுத்தும்.
பால் உணர்வு கருவிகளுக்கு பக்கத்தில் மூலதாரம் இருப்பதால்,
பால் உணர்வு வெறியும் எந்த தவம் தொடர்ந்து செய்வதால் உண்டு
பண்ணக் கூடும்.
சாந்தி யோகத்தால் பெரிய நன்மைகளையும் உண்டு
பண்ணிக் கொள்ளலாம் அல்லது
கஷ்டங்களை நீக்கிக் கொள்ளலாம்.
சீவ காந்த சிதைவு என்பது நாய், பன்றி, பூனை, ஆந்தை, கோட்டன் , வவ்வால் போன்ற உயிரினக்களில் உண்டு. அதை வளர்ப்பதிலும் , தொடுவதிலும் , கொண்ழுவதையும் யோகிகள் தவிர்த்தே ஆகா வேண்டும்.

சீவ காந்த உறுதி நிலை அருகம் புல், வேம்ப்பு, துளசி, பசு, யானை, மயில், மான், குழந்தை, , நவரத்தின கற்கள், வெள்ளி, பொன், பெண்கள்ளிடத்திலும் அதிகம் இருக்கும்.

பிணத்தில் பக்கத்தில் போக கூடாது. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த மாதிரி சீவ காந்த சிதைவு நிலைகளை எதிர் கொள்ள வேண்டி வரும் போது நாம் சாந்தி யோகத்தில் இருந்து கொண்டால் சீவ காந்த சிதைவு ஏற்ப்படாது.
வாழ்க வளமுடன். குருவே துணை.
நன்றி : தணிகைவேல், அருண், பூங்குழலி அம்மா,

Saturday, March 26, 2011

நோயே, என்னை நெருங்காதே!

நோயே, என்னை நெருங்காதே!
அசத்துகிறது ஜீன்ஸ்
டி.என்.ஏ. என்பதுதான் 21-ம் நூற்றாண்டில் பல ஆச்சர்யங்களை நிகழ்த்த இருக்கும் அற்புதம். நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் ஜீன் மரபணுக்கள் உள்ளன. உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகளை இந்த டி.என்.ஏ. தனக்குள் கொண்டுள்ளது. பெற்றோர் வழியாக, பாரம்பரியப் பண்புகள் சந்ததியினருக்குத் தொடர்ந்து வருவதற்கு இந்த டி.என்.ஏ-தான் காரணம்!

எதிர்காலத்தில் மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு வியாதிகளைத் தடுக்க, இந்த டி.என்.ஏ. தொழில்நுட்பம் பெருமளவு உதவியாக இருக்கும்.


ஜெனிடிக் மருத்துவம் பற்றிய சர்வதேசக் கருத்தரங்கம் சென்னை அருகே உள்ள செட்டிநாடு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
செட்டிநாடு பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் பிரிவு இயக்குநர் டாக்டர் பிச்சப்பன் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக் கழக டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசுகையில், ''உடலில் மரபணு மாற்றம் காரணமாகப் பல்வேறு நோய்கள் வருகின்றன. மரபணு மாற்றம் ஏற்படுவதை மியூட்டேஷன் என்று கூறுவோம். உதாரணத்துக்கு, உடலில் இன்சுலின் (சர்க்கரை) உற்பத்தி செய்யும் ஜீனில் மரபணு மாற்றம் ஏற்பட்டது என்றால், இன்சுலின் சுரக்காமல் போய்விடும். சிலருக்கு 40 வயது வரை இன்சுலின் சுரக்கும், திடீரென்று நின்றுவிடும்.
நீரிழிவு நோயைப் பொறுத்த வரை தற்போது ரத்தத்தில் பரிசோதனை செய்யப்படுகிறதே தவிர, ஜீன் வரை சென்று ஆராய்வது இல்லை. அதாவது அந்த நோயின் மூலத்தை ஆராய்வது இல்லை. நமது உடலில் ஆஞ்சியோடென்சைன் கன்வர்ட்டிங் என்ஸைம் (சுருக்கமாக ஏஸ் ஜீன்) என்று ஒரு ஜீன் உள்ளது. இந்த ஜீன், ஆஞ்ஜியோ டென்சைன் 1-ஐ ஆஞ்ஜியோ டென்சைன் 2-ஆக மாற்றிவிடுகிறது.
பொதுவாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு கண் மற்றும் இதயத்தில் பிரச்னைகள் ஏற்படுவது உண்டு. இந்த ஏஸ் ஜீன் என்பது நம் உடலில் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கிறது. அந்த குறிப்பிட்ட ஜீனில் மாற்றம் ஏற்படும்போது, ரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. அதனால், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த ஏஸ் ஜீனில் ஐடி, ஐஐ, டிடி என்று மூன்று வகைகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐடி அல்லது டிடி ஜீன் ஒருவருக்கு அதிகமாக இருந்தால், அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம். இவர்களுக்கு 30 முதல் 40 வயது வரை பெரும்பாலும் பிரச்னைகள் இருக்காது, ஆனால், அதற்குப் பிறகு நிச்சயமாக கண், இதயப் பிரச்னைக்கு ஆளாவார்கள். ஐஐ பிரிவில் உள்ளவர்களுக்கு பிரச்னை குறைவாகத்தான் வரும்.
இதைக் கண்டுபிடிப்பதற்கு ஒருவரின் ரத்தத்தில் இருந்து டி.என்.ஏ-வை தனியாகப் பிரித்து எடுப்போம். பி.சி.ஆர் தெர்மல் சைக்ளர் என்னும் உபகரணத்தைப் பயன்படுத்தி என்ன வகையான 'ஜீனோ டைப்’ இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம். இந்தக் கருவி ஒரே ஒரு ஜீனை பல லட்சங்களாகப் பெருக்கிக்காட்டும். இதை சில மணி நேரங்களில் செய்து முடித்து, ரிசல்ட்டைக் கையில் கொடுத்துவிடுவோம். ஏஸ் ஐடி, டிடி... இருந்தால் என்ன மாதிரியான நோய் தாக்குதல் ஏற்படலாம், அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தலாம். இதை அவர்கள் முறையாகப் பின்பற்றினால், எதிர்காலத்தில் குறிப்பிட்ட நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். இந்த பரிசோதனையை யார் வேண்டுமானாலும், எந்த வயதிலும் பார்த்துக்கொள்ளலாம்.
தற்போது குழந்தை பிறக்கும் முன்பே அதாவது கருவில் இருக்கும்போதே ஏதேனும் பிறவிக் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் புற்றுநோய், இதய செயல் இழப்பு, நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எதிர்காலத்தில் வருமா என்பதைக் கண்டறியும் வசதியும் வந்துவிட்டது. அயல் நாடுகளில் இது பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்தாலும், இந்தியாவில் சில இடங்களில்தான் இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன. எதிர்காலத்தில், டி.என்.ஏ. தொழில்நுட்பத்தை வைத்து பரிசோதனை செய்வதன் மூலம் மரபணு வியாதிகளின் தாக்கத்தைக் குறைக்கவும், தடுக்கவும் முடியும்.
மருத்துவ சமுதாயத்தினர் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதன் மூலமும், டி.என்.ஏ. டெஸ்ட் செய்யும் வசதியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமைப்படுத்துவதன் மூலமும், ஒருவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். இதன் மூலம் சிகிச்சைக்கான கால அளவு, செலவு மற்றும் வலி குறைந்துவிடும். மனிதர்களின் வாழ்க்கைத் தரம் எதிர்பாராத அளவுக்கு உயரும்!'' என்றனர்.
- பா.பிரவீன்குமார்

அருட்பெருஞ்ஜோதி அகவல்

அருட்பெருஞ்ஜோதி அகவல்


அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி(1)
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ் (3)
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
ஆகம முடிமேல் ஆரண முடிமேல் (5)
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய் (7)
அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி
ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய் (9)
ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல் (11)
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும் (13)
ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி
எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென் (15)
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே (17)
ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி
ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள் (19)
ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை (21)
யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி
ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே (23)
ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி
ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர் (25)
அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர் (27)
அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி
சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும் (29)
அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு (31)
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி
தூயக லாந்த சுகந்தரு வெளியெனும் (33)
ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும் (35)
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும் (37)
அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும் (39)
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும் (41)
அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும் (43)
அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும் (45)
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி
தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும் (47)
அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும் (49)
அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும் (51)
ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
காரண காரியங் காட்டிடு வெளியெனும் (53)
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
ஏக மனேக மெனப்பகர் வெளியெனும் (55)
ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம் (57)
ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
என்றா தியசுடர்க் கியனிலை யாயது (59)
வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய் (61)
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள் (63)
அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும் (65)
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள் (67)
அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம் (69)
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை (71)
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும் (73)
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய் (75)
அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய (77)
அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம் (79)
ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
மனாதிகட் கரிய மதாதீத வெளியாம் (81)
அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம் (83)
ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
வாரமு மழியா வரமுந் தருந்திரு (85)
வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
இழியாப் பெருநல மெல்லா மளித்தருள் (87)
அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
கற்பம் பலபல கழியினு மழிவுறா (89)
அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய (91)
வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி (93)
ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி (95)
அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி
தம்பர ஞான சிதம்பர மெனுமோர் (97)
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள் (99)
அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி
வாடுத னீக்கிய மணிமன் றிடையே (101)
ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி
நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே (103)
ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி
கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர் (105)
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய (107)
வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங் (109)
கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி
எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா (111)
தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி
பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென் (113)
னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி
சாதியு மதமுஞ் சமயமுங் காணா (115)
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர் (117)
அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி
உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த (119)
அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி
பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே (121)
அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி
உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின் (123)
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி
என்னையும் பணிகொண் டிறவா வரமளித் (125)
தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி
ஓதியோ தாம லுறவெனக் களித்த (127)
ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
படியடி வான்முடி பற்றினுந் தோற்றா (129)
அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி
பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும் (131)
அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி
திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும் (133)
அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி
மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும் (135)
அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி
எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல் (137)
அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி
வல்லதா யெல்லா மாகியெல் லாமும் (139)
அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி
எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோ ர் (141)
அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி
தாங்ககி லாண்ட சராசர நிலைநின் (143)
றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத் (145)
தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும் (147)
அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும் (149)
ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய் (151)
அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி
காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும் (153)
ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென் (155)
றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
இறவா வரமளித் தென்னைமே லேற்றிய (157)
அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
நானந்த மில்லா நலம்பெற வெனக்கே (159)
ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி
எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை (161)
யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது (163)
வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென (165)
அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி (167)
லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும் (169)
அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி
சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம் (171)
அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி
சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும் (173)
அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
உபரச வேதியி னுபயமும் பரமும் (175)
அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
மந்தண மிதுவென மறுவிலா மதியால் (177)
அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய (179)
வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி
செடியறுத் தேதிட தேகமும் போகமும் (181)
அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை (183)
அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
பொதுவது சிறப்பது புதியது பழயதென் (185)
றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி
சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை (187)
யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி
ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக் (189)
காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி
எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக் (191)
கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி
எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக் (193)
கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி
இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக் (195)
கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி
பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென் (197)
ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி
தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென (199)
தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம் (201)
அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள் (203)
ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி
சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே (205)
ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி
சத்திய மாஞ்சிவ சத்த்஢யை யீந்தெனக் (207)
கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி
சாவா நிலையிது தந்தன முனக்கே (209)
ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி
சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென (211)
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல் (213)
அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல் (215)
ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி
காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின் (217)
ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி
எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா (219)
றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள் (221)
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
கூறிய கருநிலை குலவிய கீழ்மேல் (223)
ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி
எண்டர முடியா திலங்கிய பற்பல (225)
அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை (227)
யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி
வாழிநீ டூழி வாழியென் றோங்குபே (229)
ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி
மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை (231)
யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி
எச்சநி னக்கிலை யெல்லாம் பெருகவென்று (233)
அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி
நீடுக நீயே நீளுல கனைத்தும்நின் (235)
றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு (237)
மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும் (239)
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
கருமசித் திகளின் கலைபல கோடியும் (241)
அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
யோகசித் திகள்வகை யுறுபல கோடியும் (243)
ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும் (245)
ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை (247)
அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம் (249)
அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம் (251)
அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி
ஏகசிற் சித்தியே யியலுற வனேகம் (253)
ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
இன்பசித் தியினிய லேக மனேகம் (255)
அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி
எட்டிரண் டென்பன வியலுமுற் படியென (257)
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி
இப்படி கண்டனை யினியுறு படியெலாம் (259)
அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி
படிமுடி கடந்தனை பாரிது பாரென (261)
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி
ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த (263)
மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி (265)
யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
ஆதியு மந்தமு மறிந்தனை நீயே (267)
ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென் (269)
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே (271)
அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே (273)
அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே (275)
அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி
பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே (277)
அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
வல்லப சத்திகள் வகையெலா மளித்தென (279)
தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம் (281)
ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென் (283)
றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி
பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம் (285)
மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி
எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும் (287)
அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
மாண்டுழ லாவகை வந்திளங் காலையே (289)
ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி
பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென (291)
தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த (293)
அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால் (295)
ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி
எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை (297)
யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி
நவையிலா வுளத்தி னாடிய நாடிய (299)
வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி
கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண் (301)
டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி
நன்றறி வறியா நாயினேன் றனையும் (303)
அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி
நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன் (305)
ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன் (307)
ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி
எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே (309)
அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி
ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண் (311)
டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி
தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா (313)
ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே (315)
யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி
உருவமு மருவமு முபயமு மாகிய (317)
அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி
இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி (319)
அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி
தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள (321)
அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய (323)
அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி
உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை (325)
அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி
வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள் (327)
அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி
சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே (329)
அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி
விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே (331)
அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி
அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட (333)
அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி
உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே (335)
அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி
விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய் (337)
அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி
விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய் (339)
அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய் (341)
ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி
காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய் (343)
ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
அனலினு ளனலா யனனடு வனலாய் (345)
அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
அனலுறு மனலா யனனிலை யனலாய் (347)
அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி
புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய் (349)
அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி
புனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய் (351)
அனையெனப் பெருகு மருட்பெஞ் ஜோதி
புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய் (353)
அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி
புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய் (355)
அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி
விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி (357)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி (359)
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி (361)
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி (363)
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி (365)
அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை (367)
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை (369)
யண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம் (371)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை (373)
அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல் (375)
அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன் (377)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை (379)
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண் (381)
டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள் (383)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள் (385)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள் (387)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்கணச் சத்திகள் வகைபல பலவும் (389)
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும் (391)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா (393)
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே (395)
றண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல (397)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல (399)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும் (401)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும் (403)
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல (405)
வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல் (407)
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை (409)
ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல (411)
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல (413)
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை யடிநடு நிலையுற வகுத்தன (415)
லார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல் (417)
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல (419)
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை (421)
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல (423)
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல (425)
ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல (427)
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும் (429)
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல் (431)
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயினில் வெண்மைத் திகழியல் பலவா (433)
வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம் (435)
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யொளியே திகழுற வமைத்ததில் (437)
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யருநிலை திருநிலை கருநிலை (439)
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல (441)
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை (443)
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல (445)
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும் (447)
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள் (449)
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல (451)
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன் (453)
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம் (455)
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல் (457)
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயியல் பலபல செறித்ததிற் பலவும் (459)
ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல் (461)
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல் (463)
ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினி லூறியல் காட்டுறு பலபல (465)
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில (467)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல (469)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம் (471)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல (473)
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில (475)
ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன (477)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல (479)
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும் (481)
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யுணரியல் கருதிய லாதிய (483)
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம் (485)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித் (487)
தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம் (489)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும் (491)
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல் (493)
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம் (495)
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும் (497)
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை (499)
அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே (501)
அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள் (503)
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல (505)
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல (507)
அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல் (509)
அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும் (511)
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல் (513)
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை (515)
அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல் (517)
அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை (519)
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
கருதக நடுவொடு கடையணைந் தகமுதல் (521)
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தணியக நடுவொடு தலையணைந் தகக்கடை (523)
அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல் (525)
அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை (527)
அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு வதனா லகப்புற நடுவை (529)
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுவா லணிபுற நடுவை (531)
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
புறநடு வதனாற் புறப்புற நடுவை (533)
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புகலரு மகண்ட பூரண நடுவால் (535)
அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற (537)
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும் (539)
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம் (541)
அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம் (543)
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும் (545)
ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும் (547)
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும் (549)
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும் (551)
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத (553)
வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி (555)
அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில் (557)
அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த (559)
அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி (561)
அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரவெளி யதனைப் பரம்பர வெளியில் (563)
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரம்பர வெளியைப் பராபர வெளியில் (565)
அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பராபர வெளியைப் பகர்பெரு வெளியில் (567)
அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில் (569)
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில் (571)
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை (573)
அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காலமே முதலிய கருவிகள் கலைவெளி (575)
ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை (577)
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள் (579)
அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர் (581)
ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை (583)
அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை (585)
ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை (587)
அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை (589)
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை (591)
அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை (593)
அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை (595)
ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை (597)
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை (599)
ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும் (601)
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை (603)
அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை (605)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை (607)
அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில (609)
அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
களவில கடல்வகை கங்கில கரையில (611)
அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற (613)
அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி
கடல்களு மலைகளுங் கதிகளு நதிகளும் (615)
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர் (617)
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர் (619)
அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம் (621)
அன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி
பத்திடை யாயிரம் பகரதிற் கோடி (623)
அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம் (625)
ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கோடியி லனந்த கோடிபல் கோடி (627)
ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வித்திய லொன்றா விளைவியல் பலவா (629)
அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க (631)
அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்தும் பதமும் விளையுப கரிப்பும் (633)
அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்திடை முளையும் முளையிடை விளைவும் (635)
அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும் (637)
அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும் (639)
அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
முளையதின் முளையும் முளையினுண் முளையும் (641)
அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும் (643)
அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும் (645)
அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும் (647)
அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய (649)
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உறவினி லுறவும் உறவினிற் பகையும் (651)
அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பகையினிற் பகையும் பகையினி லுறவும் (653)
அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பாதியு முழுதும் பதிசெயு மந்தமும் (655)
ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும் (657)
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உருவதி னுருவும் உருவினுள் ளுருவும் (659)
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
அருவினுள் ளருவும் மருவதி லருவும் (661)
அருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி
கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர் (663)
அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உருவதி லருவும் மருவதி லுருவும் (665)
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வண்ணமு வடிவு மயங்கிய வகைபல (667)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும் (669)
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும் (671)
அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும் (673)
அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும் (675)
அன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி
அடியினுள் ளடியும் மடியிடை யடியும் (677)
அடியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும் (679)
அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
முடியினுண் முடியும் முடியினின் முடியும் (681)
அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை (683)
அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட (685)
அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட (687)
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற (689)
அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில் (691)
ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி
ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன (693)
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல (695)
அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அறிவொரு வகைமுத லைவகை யறுவகை (697)
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற (699)
அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல (701)
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும் (703)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும் (705)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும் (707)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும் (709)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும் (711)
அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணியன் மனமு மாணிய லறிவும் (713)
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல் (715)
அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உனற்கரு முயிருள வுடலுள வுலகுள (717)
வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும் (719)
ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில் (721)
ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை (723)
ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை (725)
அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும் (727)
அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை (729)
ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை (731)
அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை (733)
அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
உயிருறு முடலையு முடலுறு முயிரையும் (735)
அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை (737)
ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
முச்சுட ராதியா லெச்சக வுயிரையும் (739)
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர் (741)
ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
இன்புறு சத்தியா லெழின்மழை பொழிவித் (743)
தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும் (745)
அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர் (747)
அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித் (749)
தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
அகப்புற வமுதளித் தைவரா திகளை (751)
அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
தருமக வமுதாற் சத்திசத் தர்களை (753)
அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி
காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும் (755)
ஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
விச்சையை யிச்சையை விளைவித் துயிர்களை (757)
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை (759)
ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி
கலையறி வளித்துக் களிப்பினி லுயிரெலாம் (761)
அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும் (763)
அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை (765)
அன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை (767)
அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க் (769)
கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க் (771)
கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன (773)
ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி
சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை (775)
அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின் (777)
அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின் (779)
ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின (781)
அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
அண்டத் துரிசையு மகிலத் துரிசையும் (783)
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும் (785)
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும் (787)
அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும் (789)
அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை (791)
ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
பொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம் (793)
அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மதம்புரை மோகமு மற்றவு மாங்காங் (795)
கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும் (797)
அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை (799)
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
நால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில் (801)
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும் (803)
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில் (805)
ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி
மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில் (807)
ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி
தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும் (809)
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை (811)
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் (813)
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை யதனால் (815)
ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையாற் பரவெளி யதனை (817)
அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையாற் சித்துறு வெளியை (819)
அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை (821)
அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை (823)
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திரையாற் கருதனு பவங்களை (825)
அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால் (827)
அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால் (829)
அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே (831)
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி (833)
னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை (835)
அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே (837)
அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி
விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை (839)
அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை (841)
அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி
மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே (843)
அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே (845)
அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம் (847)
அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் (849)
அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் (851)
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை (853)
அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி
காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை (855)
ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி
அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும் (857)
அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை (859)
அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை (861)
அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை (863)
ஐந்தொழி லாதிசெய் யருட்பெருஞ் ஜோதி
இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில் (865)
அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி
செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல் (867)
அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட (869)
அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட (871)
அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே (873)
அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி
ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது (875)
ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே
ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல (877)
ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே
ஒன்றினி லொன்றுள வொன்றினி லொன்றில (879)
ஒன்றற வொன்றிய வொன்றெனு மொன்றே
களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி (881)
விளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே
மூவிரு நிலையின் முடிநடு முடிமேல் (883)
ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே
எழுநிலை மிசையே யின்புரு வாகி (885)
வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே
நவநிலை மிசையே நடுவுறு நடுவே (887)
சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே
ஏகா தசநிலை யாததி னடுவே (889)
ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே
திரையோ தசநிலை சிவவெளி நடுவே (891)
வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே
ஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற் (893)
பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே
எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே (895)
எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே
மனாதிகள் பொருந்தா வானடு வானாய் (897)
அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே
தானொரு தானாய்த் தானே தானாய் (899)
ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே
அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப் (901)
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா (903)
உயலுற விளங்கு மொருதனிப் பொருளே
அருவினு ளருவா யருவரு வருவாய் (905)
உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே
அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய் (907)
உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே
பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா (909)
யொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே
ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு (911)
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே
கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும் (913)
ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே
அறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும் (915)
பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே
வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க (917)
ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே
பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க (919)
உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே
பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே (921)
பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே
பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே (923)
பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே
பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே (925)
பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே
பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே (927)
தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே
வரம்பரா பரமே வணம்பரா பரமே (929)
பரம்பரா பரமே பதம்பரா பரமே
சத்திய பதமே சத்துவ பதமே (931)
நித்திய பதமே நிற்குண பதமே
தத்துவ பதமே தற்பத பதமே (933)
சித்துறு பதமே சிற்சுக பதமே
தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே (935)
அம்பரம் பதமே யருட்பரம் பதமே
தந்திர பதமே சந்திர பதமே (937)
மந்திர பதமே மந்தண பதமே
நவந்தரு பதமே நடந்தரு பதமே (939)
சிவந்தரு பதமே சிவசிவ பதமே
பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே (941)
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே
பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும் (943)
பரமமே பரம பதந்தருஞ் சிவமே
அவனோ டவளா யதுவா யலவாய் (945)
நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ் (947)
செம்பொரு ளாகிய சிவமே சிவமே
ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு (949)
திருநிலை மேவிய சிவமே சிவமே
மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு (951)
தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே
புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச் (953)
சிரமுற நாட்டிய சிவமே சிவமே
கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச் (955)
செல்வமு மளித்த சிவமே சிவமே
அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த் (957)
தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ் (959)
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
எங்கே கருணை யியற்கையி னுள்ளன (961)
அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே
யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச் (963)
சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே
பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட் (965)
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
கொல்லா நெறியே குருவரு ணெறியெனப் (967)
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக (969)
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே
பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல (971)
உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே
உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே (973)
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே
இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம் (975)
உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
அருளலா தணுவு மசைந்திடா ததனால் (977)
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
அருளுறி னெல்லா மாகுமீ துண்மை (979)
அருளுற முயல்கவென் றருளிய சிவமே
அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம் (981)
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந் (983)
தெருளிது வெனவே செப்பிய சிவமே
அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம் (985)
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம் (987)
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே (989)
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே
அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய் (991)
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
அருளறி யார்தமை யறியார் எம்மையும் (993)
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை (995)
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
அருள்வடி வதுவே யழியாத் தனிவடி (997)
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
அருளே நம்மிய லருளே நம்முரு (999)
அருளே நம்வடி வாமென்ற சிவமே
அருளே நம்மடி யருளே நம்முடி (1001)
அருளே நம்நடு வாமென்ற சிவமே
அருளே நம்மறி வருளே நம்மனம் (1003)
அருளே நங்குண மாமென்ற சிவமே
அருளே நம்பதி யருளே நம்பதம் (1005)
அருளே நம்மிட மாமென்ற சிவமே
அருளே நந்துணை யருளே நந்தொழில் (1007)
அருளே நம்விருப் பாமென்ற சிவமே
அருளே நம்பொரு ளருளே நம்மொளி (1009)
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளே நங்குல மருளே நம்மினம் (1011)
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளே நஞ்சுக மருளே நம்பெயர் (1013)
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை (1015)
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை (1017)
அருளர சியற்றுகென் றருளிய சிவமே
உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள் (1019)
வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே
நிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனைத் (1021)
தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே
சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச் (1023)
சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே
ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென் (1025)
கைவரப் புரிந்த கதிசிவ பதியே
துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த (1027)
இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே
சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை (1029)
ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே
கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி (1031)
வையமேல் வைத்த மாசிவ பதியே
இன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ (1033)
றன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே
பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை (1035)
மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே
உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது (1037)
குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத் (1039)
திரமுற வருளிய திருவருட் குருவே
மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின் (1041)
றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே
கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங் (1043)
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம் (1045)
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
பிரம ரகசியம் பேசியென் னுளத்தே (1047)
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே (1049)
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே (1051)
நவநிலை காட்டிய ஞானசற் குருவே
சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும் (1053)
அத்தகை தெரித்த வருட்சிவ குருவே
அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே (1055)
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே (1057)
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே (1059)
மாண்பத மளித்து வயங்குசற் குருவே
செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே (1061)
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள் (1063)
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித் (1065)
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும் (1067)
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம் (1069)
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே
சீருற வருளாந் தேசுற வழியாப் (1071)
பேருற வென்னைப் பெற்றநற் றாயே
பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப் (1073)
பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே
ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான் (1075)
ஈன்றமு தளித்த வினியநற் றாயே
பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால் (1077)
வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே
தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை (1079)
உளந்தெளி வித்த வொருமைநற் றாயே
அருளமு தேமுத லைவகை யமுதமும் (1081)
தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே
இயலமு தேமுத லெழுவகை யமுதமும் (1083)
உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே
நண்புறு மெண்வகை நவவகை யமுதமும் (1085)
பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே
மற்றுள வமுத வகையெலா மெனக்கே (1087)
உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே
கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே (1089)
அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே
துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக் (1091)
கெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே
சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே (1093)
சத்தியை யளித்த தயவுடைத் தாயே
சத்திநி பாதந் தனையளித் தெனைமேல் (1095)
வைத்தமு தளித்த மரபுடைத் தாயே
சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய் (1097)
சித்தியை யளித்த தெய்வநற் றாயே
தன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே (1099)
என்னைமே லேற்றிய வினியநற் றாயே
வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே (1101)
யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே
எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங் (1103)
கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே
இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந் (1105)
தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே
என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம் (1107)
தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே
தெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத் (1109)
தரியா தணைத்த தயவுடைத் தாயே
சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங் (1111)
கனவினும் பிரியாக் கருணைநற் றாயே
தூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும் (1113)
ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே
துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப (1115)
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே
எல்லா நன்மையு மென்றனக் களித்த (1117)
எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே
நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய (1119)
தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே
அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே (1121)
பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே
புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த (1123)
தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே
அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி (1125)
சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே
இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே (1127)
துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே
ஆதியீ றறியா வருளர சாட்சியிற் (1129)
ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே
எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப் (1131)
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
தங்கோ லளவது தந்தருட் ஜோதிச் (1133)
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே
தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில் (1135)
என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே
தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில் (1137)
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே
தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில் (1139)
என்சித் தாக்கிய என்றனித் தந்தையே
தன்வச மாகிய தத்துவ மனைத்தையும் (1141)
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே
தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை (1143)
என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே
தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும் (1145)
என்னையு மொன்றென வியற்றிய தந்தையே
தன்னிய லென்னியல் தன்செய லென்செயல் (1147)
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை (1149)
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென் (1151)
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே
மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே (1153)
இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே
உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை (1155)
யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும் (1157)
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த (1159)
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே
எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம் (1161)
அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே
இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய (1163)
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே
பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச் (1165)
சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட் (1167)
கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே
துறையிது வழியிது துணிவிது நீசெயும் (1169)
முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே
எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை (1171)
கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே
வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே (1173)
யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே
இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா (1175)
தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே
அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென் (1177)
னுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே
அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே (1179)
இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே
நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே (1181)
வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே
உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண் (1183)
டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே
செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த (1185)
குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே
குணங்குறி முதலிய குறித்திடா தெனையே (1187)
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல் (1189)
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே
சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும் (1191)
கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே
களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக் (1193)
கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே
தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா (1195)
வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே
மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும் (1197)
எனக்குற வாகிய என்னுயி ருறவே
துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா (1199)
தென்னுற வாகிய வென்னுயி ருறவே
என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய் (1201)
என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே
அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும் (1203)
இனைத்தென வறியா வென்றனிச் சத்தே
பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும் (1205)
இதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே
ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும் (1207)
ஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே
சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே (1209)
இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே
துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென (1211)
உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
அன்றத னப்பா லதன்பரத் ததுதான் (1213)
என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே
என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய் (1215)
என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே
சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய் (1217)
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய் (1219)
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய் (1221)
இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் (1223)
ஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே
உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய் (1225)
இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே
அறிவவை பலவா யறிவன பலவாய் (1227)
எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே
நினைவவை பலவாய் நினைவன பலவாய் (1229)
இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே
காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய் (1231)
ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே
செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய் (1233)
எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே
அண்ட சராசர மனைத்தையும் பிறவையும் (1235)
எண்டற விளக்கு மென்றனிச் சித்தே
எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட (1237)
எல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே
ஒன்றதி லொன்றன் றுரைக்கவும் படாதாய் (1239)
என்றுமோர் படித்தா மென்றனி யின்பே
இதுவது வென்னா வியலுடை யதுவாய் (1241)
எதிரற நிறைந்த வென்றனி யின்பே
ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல் (1243)
ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே
அறிவுக் கறிவினி லதுவது வதுவாய் (1245)
எறிவற் றோங்கிய வென்றனி யின்பே
விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை (1247)
யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே
இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும் (1249)
எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் (1251)
எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே
எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும் (1253)
எல்லா வின்புமா மென்றனி யின்பே
கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின் (1255)
விரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்
குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி (1257)
மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய
உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா (1259)
வணமுறு மின்ப மயமே யதுவாய்க்
கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய் (1261)
நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்
உள்ளதா யென்று முள்ளதா யென்னுள் (1263)
உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்
எல்லா மினிப்ப வியலுறு சுவையளித் (1265)
தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்
சாகா வரமுந் தனித்தபே ரறிவும் (1267)
மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்
செயற்கரு மனந்த சித்தியு மின்பமும் (1269)
மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்
பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி (1271)
ஆரண முடியுட னாகம முடியுங்
கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு (1273)
நடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே
சத்திய வமுதே தனித்திரு வமுதே (1275)
நித்திய வமுதே நிறைசிவ வமுதே
சச்சிதா னந்தத் தனிமுத லமுதே (1277)
மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே
ஆனந்த வமுதே யருளொளி யமுதே (1279)
தானந்த மில்லாத் தத்துவ வமுதே
நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே (1281)
சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே (1283)
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே
அகம்புற மகப்புற மாகிய புறப்புறம் (1285)
உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே
பனிமுத னீக்கிய பரம்பர வமுதே (1287)
தனிமுத லாய சிதம்பர வமுதே
உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே (1289)
அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே
அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள (1291)
பண்டமுங் காட்டிய பரம்பர மணியே
பிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள (1293)
பண்டமுங் காட்டிய பராபர மணியே
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற (1295)
அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே
விண்பத மனைத்து மேற்பத முழுவதுங் (1297)
கண்பெற நடத்துங் ககனமா மணியே
பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ் (1299)
சார்புற நடத்துஞ் சரவொளி மணியே
அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக் (1301)
கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும் (1303)
விராவியுள் விளங்கும் வித்தக மணியே
மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந் (1305)
தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே
தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா (1307)
வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
நவமணி முதலிய நலமெலாந் தருமொரு (1309)
சிவமணி யெனுமருட் செல்வமா மணியே
வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து (1311)
நான்பெற வளித்த நாதமந் திரமே
கற்பம் பலபல கழியினு மழியாப் (1313)
பொற்புற வளித்த புனிதமந் திரமே
அகரமு முகரமு மழியாச் சிகரமும் (1315)
வகரமு மாகிய வாய்மைமந் திரமே
ஐந்தென வெட்டென வாறென நான்கென (1317)
முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
வேதமு மாகம விரிவுக ளனைத்தும் (1319)
ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு (1321)
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந் (1323)
தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ் (1325)
சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு (1327)
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும் (1329)
உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே
என்றே யென்னினு மிளமையோ டிருக்க (1331)
நன்றே தருமொரு ஞானமா மருந்தே
மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர் (1333)
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
சிற்சபை நடுவே திருநடம் புரியும் (1335)
அற்புத மருந்தெனு மானந்த மருந்தே
இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த் (1337)
தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்
மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய் (1339)
ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க்
காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய் (1341)
ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்
கைதவர் கனவினுங் காண்டற் கரிதாய்ச் (1343)
செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்
உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே (1345)
வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும் (1347)
வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே
மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய் (1349)
இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே
எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா (1351)
தடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே
தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக் (1353)
கிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே
எண்ணிய தோறு மியற்றுக வென்றனை (1355)
யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே
நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப் (1357)
போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே
எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப் (1359)
பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே
விண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப் (1361)
புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே
நால்வகை நெறியினு நாட்டுக வெனவே (1363)
பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே
எழுவகை நெறியினு மியற்றுக வெனவே (1365)
முழுவகை காட்டி முயங்கிய பொன்னே
எண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப் (1367)
புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே
ஊழிதோ று஖ழி யுலப்புறா தோங்கி (1369)
வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே
இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க் (1371)
குதவினு முலவா தோங்குநன் னிதியே
இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற் (1373)
றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே
எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை (1375)
அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே
அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே (1377)
கற்பனை கடந்த கருணைமா நிதியே
நற்குண நிதியே சற்குண நிதியே (1379)
நிற்குண நிதியே சிற்குண நிதியே
பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே (1381)
வளமெலா நிறைந்த மாணிக்க மலையே
மதியுற விளங்கு மரகத மலையே (1383)
வதிதரு பேரொளி வச்சிர மலையே
உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே (1385)
துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே
புற்புதந் திரைநுரை புரைமுத லிலதோர் (1387)
அற்புதக் கடலே யமுதத்தண் கடலே
இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய (1389)
அருட்பெருங் கடலே யானந்தக் கடலே
பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே (1391)
உவப்புறு வளங்கொண் டோ ங்கிய கரையே
என்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள (1393)
நன்றுற விளங்கிய நந்தனக் காவே
சேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர் (1395)
ஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே
கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே (1397)
மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே
களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே (1399)
இளைப்பற வாய்த்த வின்சுவை யுணவே
தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே (1401)
தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே
நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே (1403)
வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே
கட்டுமாம் பழமே கதலிவான் பழமே (1405)
இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே
புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே (1407)
கனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே
இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே (1409)
பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே
சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே (1411)
ஏலவே நாவுக் கினியகற் கண்டே
உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே (1413)
கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே
நவையிலா தெனக்கு நண்ணிய நறவே (1415)
சுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே
பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே (1417)
இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே
உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி (1419)
மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே
இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும் (1421)
உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே
யாழுறு மிசையே யினியவின் னிசையே (1423)
ஏழுறு மிசையே யியலரு ளிசையே
திவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே (1425)
அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே
நாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே (1427)
வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே
நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே (1429)
சன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே
நம்புறு மாகம நவிற்றிய பாட்டே (1431)
எம்பல மாகிய வம்பலப் பாட்டே
என்மனக் கண்ணே என்னருட் கண்ணே (1433)
என்னிரு கண்ணே யென்கணுண் மணியே
என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே (1435)
என்பெருந் திறலே யென்பெருஞ் செயலே
என்பெருந் தவமே என்றவப் பலனே (1437)
என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே )
என்பெரு வாழ்வே யென்றென்வாழ் முதலே (1439)
என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே
என்பெரு நலமே யென்பெருங் குலமே (1441)
என்பெரு வலமே யென்பெரும் புலமே
என்பெரு வரமே யென்பெருந் தரமே (1443)
என்பெரு நெறியே யென்பெரு நிலையே
என்பெருங் குணமே என்பெருங் கருத்தே (1445)
என்பெருந் தயவே யென்பெருங் கதியே
என்பெரும் பதியே யென்னுயி ரியலே (1447)
என்பெரு நிறைவே யென்றனி யறிவே
தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும் (1449)
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட
என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட (1451)
மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட
இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம் (1453)
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட
மடலெலா மூளை மலர்ந்திட வமுதம் (1455)
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட (1457)
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட
உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக் (1459)
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட
வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற் (1461)
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட
மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக் (1463)
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட
மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட (1465)
இனம்பெறு சித்த மியைந்து களித்திட
அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச் (1467)
சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட
அறிவுரு வனைத்து மானந்த மாயிடப் (1469)
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்
தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச் (1471)
சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட
உலகெலாம் விடய முளவெலா மறைந்திட (1473)
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட (1475)
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே
பொன்னடி கண்டருட் புத்தமு துணவே (1477)
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே
தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால் (1479)
என்னைவே தித்த என்றனி யன்பே
என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து (1481)
என்னுளே விரிந்த என்னுடை யன்பே
என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து (1483)
என்னுளே கனிந்த வென்னுடை யன்பே
தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே (1485)
என்னுளே நிறைந்த என்றனி யன்பே
துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை (1487)
யின்புறு வாக்கிய என்னுடை யன்பே
பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா (1489)
என்னுளங் கலந்த என்றனி யன்பே
தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி (1491)
என்வசங் கடந்த என்னுடை யன்பே
தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே (1493)
என்னுளே பொங்கிய என்றனி யன்பே
அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர் (1495)
இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே
துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல் (1497)
லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே
மயலற வழியா வாழ்வுமேன் மேலும் (1499)
இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே
இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட (1501)
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட (1503)
உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே
தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட (1505)
ஏற்றிய ஞான வியலொளி விளக்கே
ஆகம முடிமே லருளொளி விளங்கிட (1507)
வேகம தறவே விளங்கொளி விளக்கே
ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி (1509)
காரியம் விளக்குமோர் காரண விளக்கே
தண்ணிய வமுதே தந்தென துளத்தே (1511)
புண்ணியம் பலித்த பூரண மதியே
உய்தர வமுத முதவியென் னுளத்தே (1513)
செய்தவம் பலித்த திருவளர் மதியே
பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத (1515)
நிதியெலா மளித்த நிறைதிரு மதியே
பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று (1517)
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட (1519)
வயங்கிய கருணை மழைபொழி மழையே
என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப (1521)
மன்னிய கருணை மழைபொழி மழையே
உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி (1523)
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
நலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே (1525)
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே
தூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல் (1527)
வாய்மையாற் கருணை மழைபொழி மழையே
வெம்மல விரவது விடிதரு ணந்தனிற் (1529)
செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே
திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே (1531)
வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே
அலகிலாத் தலைவர்க ளரசுசெய் தத்துவ (1533)
உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே
முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே (1535)
என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே
ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த (1537)
ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே
உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட (1539)
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே
நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை (1541)
வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
வேதமு மாகம விரிவும் பரம்பர (1543)
நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே
எண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள் (1545)
நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே
வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு (1547)
நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே
இரவொடு பகலிலா வியல்பொது நடமிடு (1549)
பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே
வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி (1551)
பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே
சமரச சத்தியச் சபையி னடம்புரி (1553)
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே
சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே (1555)
அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி
மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே (1557)
அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி
வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர் (1559)
ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி
என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே (1561)
அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
உலகியல் சிறிது முளம்பிடி யாவகை (1563)
அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா (1565)
துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச் (1567)
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால் (1569)
இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்
ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ் (1571)
சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா
அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை (1573)
அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர் (1575)
அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட (1577)
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (1579)
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும் (1581)
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (1583)
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே (1585)
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (1587)
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம் (1589)
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க
சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக (1591)
உத்தம னாகுக வோங்குக வென்றனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (1593)
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி (1595)
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி