Tuesday, April 26, 2011

வள்ளலார் அறிவுரை

1.வள்ளலார் அறிவுரை

சன்மார்க்க அன்பர்களே ! நினைமின்கள் "நான் உரைக்கும் வார்த்தையெல்லா

நாயகன் தன் வார்த்தை நம்புமினோர் நம்மவர்களே நற்தருணமிதுவே, வான் உரைத்த்

மணிமன்றில் நடம்புரியும் எம்பெருமான் வர எதிர் கொண்டு அவனருளால் வரங்கள்

எல்லாம் பெறவே."
ஆதி அந்தம் இல்லாதோர் அம்பலத்தாடும் ஜோதி தன்னையே நினைமின்கள்,சுகம்

பெற விழைவீர், நீதி கொண்டுரைத்தேன், இது நீவீர் மேலேறும் வீதி, மற்றைய வீதிகள்

கீழ்ச்செல்லும் வீதி.
எட்டும் இரண்டும் அறியீர்

எப்படி கரையேறுவீர் நினைமின்கள்!

எட்டு என்ற அகாரமாகிய சந்திரனையும்.இரண்டு என்ற உலகமாகிய சூரியனையும்,

அறியாத மூடர்கள் சூரிய சந்திரனால் ஏற்படும் இன்பத்தை அறியவில்லை, சூரிய

சந்திரர் ஒன்றுபடுவதே பத்து எனப்பட்டதாகிய யகாரமாகும். அதாவது ஆறு

ஆதாரங்களும், (இரு மூன்று = ஆறு) நான்கு அந்தக்கரணங்களும் சேர்ந்ததே பத்தாகும்

(மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்) ஆகும்.
இப்பத்தாகிய யகார ஸ்தானத்தைக் குறிக்க ஆறு என்பது வழி. அது இங்கு

இறைவனை அடையும் வழியைக் குறிக்கும். அவ்விடத்தில் அந்தக்கரணங்களை

ஒன்று படுத்துதலே சித்தாந்த சன்மார்க்கமாகும் என்பது உணர்த்தப்படுகின்றது .
"எட்டும் இரண்டும் அறியாத என்னை

எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்."

------ திருமந்திரம்.

எட்டாகிய புரியட்டகாயமும் (சூக்கும சரீரம்) இரண்டாகிய ஆன்மாவும்,

பத்தாகிய பதியும் இது என்று அறியாதிருந்த எனக்கு எனது குருவாகிய நந்தி

தேவர் பக்குவத்தைச் சோதித்து எட்டும் வகையில். எட்டும், இரண்டும் ஆகிய

அப்பத்தை உபதேசம் மூலம் அவிழ்த்தருளினார். இதனை குருவருளால் அறிந்த

பின் அப்பத்தையும் நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அப்பத்தே பதியாகிவிடும்.
(அ+உ=ய) இதுவே ஆன்மாவாகிய இலிங்கமாகும்.

வேதாத்திரிய ஞானச் சூடி

வேதாத்திரிய ஞானச் சூடி
அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி
ஆணவம் இல்லையேல் ஆதி நிலை உணர்த்திடுவாய்
இறைஉணர்வு பெற்றால் மன துறவு தானாக ஏற்படும்
ஈகை பிறர் நலத்திற்கும் செய்தே வாழ்வோம்
உறவிலே கண்ட உண்மை நிலை தெளிவே துறவு
ஊரெல்லாம் மெட்சியபடி வாழ், உயர்வு நிச்சயம்
எண்ணத்தில் எண்ணமாய், இருப்பது யோகம்
ஏழு நிலை உணர்த்திடுவாய், ஏற்றம் பெற உணர்த்திடுவாய்
ஒத்துப்போக பழகிக்கொள், ஒதுங்கி போக பழகாதே
ஓதி உணர்த்தும், பிறர்க்குரைத்தும் தானடங்க பேதமையே
ஒவ்வை குரல் ஒவ்ஷத விருந்து
ag என்பது முப்புள்ளி, அகத்தே இணைந்தால் அறமே
(ஒழுக்கம், கடமை, ஈகை)
வாழ்க வளமுடன்

நன்றி : பேராசிரியர் சரஸ்வதி, ஹோசூர்

அழகென்ற சொல்லுக்கு குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே

அழகென்ற சொல்லுக்கு குருவே

அறிவு சுடராக வந்த ஓர் குருவே
அறுகுணம் வென்ற நீ குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே

ஆண்டியாய் நின்ற ஓர் குருவே
உன்னை அண்டினோர் இன்பமே குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே

ஞானப்பழம் நீ தந்த ஓர் குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே

அழகென்ற சொல்லுக்கு குருவே

அன்பர் மனதிலே குடிகொண்ட குருவே
அன்பர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ குருவே

மனித சக்திக்கு எட்டாத தத்துவம் விளங்கவைத்த குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே

அன்பிற்கு எல்லையோ குருவே
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே குருவே

அன்பிற்கு எல்லையோ குருவே
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே குருவே

கண்கண்ட தெய்வமே குருவே
கண்கண்ட தெய்வமே குருவே
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே

ப்ரணவப்பொருள் கண்ட ஓர் குருவே

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே

அழகென்ற சொல்லுக்கு குருவே - அருள்நிதி

Monday, April 25, 2011

திருமந்திரம்

திருமந்திரம்

உடம்பைமுன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோயில்கொண்டேன் என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே - திருமூலர்

உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தவர்க்குச் சீவன் சிவலிங்கம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
கள்ளப்புலன் ஐந்தும் காளாமணி விளக்கே - திருமூலர்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - திருமூலர்

Saturday, April 23, 2011

புத்தர் கூறிய கதை

புத்தர் கூறிய கதை
1931 ஆம் ஆண்டு பீகார் மானிலத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து 1953 ஆம் ஆண்டு சன்யாச தீட்சை பெற்றவர் ஸ்வாமி ஜோதிர்மயா நந்தா அவர்கள். அமெரிக்காவில் மியாமி என்ற மானிலத்தில் 1969 ஆம் ஆண்டு யோக ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆசிரமம் ஒன்றை நிறுவி யோக வழி முறைகளைக் கற்றுக் கொடுக்கும் அவர் பல்வேறு புத்தகங்கள் எழுதி உள்ளார். அவர் எழுதிய சிறு கதைகள் மனதை சிந்திக்க வைப்பவை )



ஒரு முறை புத்தருடைய சீடர்களில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அவர்களுடைய அறியாமையை விலக்கி, அஹிம்சா வழியை போதிக்க எண்ணிய புத்தபிரான் அவர்களுக்கு கீழ் கண்ட கதையைக் கூறினார்.



முன்னொரு காலத்தில் பனாரஸ் என்ற ( வாரணாசி) பகுதியில் கௌசலா என்ற பகுதியை திர்கதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஆனால் பக்கத்து நாட்டு அரசனான பிரும்மதத்தா என்ற மன்னன் எல்லா நாடுகளின் மீதும் படையெடுத்தபடி கௌசலா நாட்டையும் கைப்பற்றிய பின் அந்த அரசனையும், அரசியையும் கொன்று விட்டால் பிறகு வேறு எவரும் தலை தூக்க முடியாது என எண்ணியதால் அவர்களைத் தேடத் துவங்கினான். ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் தப்பி ஓடி மாறு வேடத்தில் தங்கி இருந்து தமது நண்பனான ஒரு குயவன் வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது ஒரு குழந்தையும் பிறந்து பெரியவனாகியது. ஆனாலும் பிரும்மதத்தா அவர்களை கொன்று விட வேண்டும் என்ற கவலையில் அவர்களை தேடிக் கொண்டு இருந்தான்.



ஒரு நாள் திர்கதியின் மகன் திர்காயு வெளியில் சென்று இருந்த பொழுது மாறு வேடத்தில் இருந்த மன்னனை அடையாளம் கண்டு கொண்ட முடி வெட்டுபவன் காசுக்கு ஆசைப்பட்டு அவர்களை அரசனிடம் காட்டிக் கொடுத்துவிட அவர்களை கைது செய்த அரசன் அவர்களை மக்கள் முன் சிரச்சேதம் செய்து கொல்ல ஏற்பாடு செய்தான். அந்த கொடுமை நடக்க இருந்த இடத்தில் கூடி இருந்த மக்கள் மத்தியில் திர்காயுவும் இருந்தான். மரணம் அடைய இருந்த திர்கதியோ எங்கே தன்னுடைய மகன் கோபப்பட்டு கூட்டத்தில் இருந்து வந்து சண்டையிடத் துவங்கி விடுவானோ, அப்படி வந்தால் அவனையும் அல்லவா மன்னன் கொண்று விடுவான் என பயந்து, உரத்த குரலில் கூவினான் ‘ மகனே, நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே, வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது, அஹிம்சையே சிறந்த வழி’ அதைக் கேட்ட மன்னன் அதன் அர்த்தம் தெரியாமல் குழம்பினான். ஆனால் அவன் புரிந்து கொண்டான் கூட்டத்தில் திர்கதியின் மகனும் உள்ளான். ஆகவே திர்கதியையும், அவன் மனைவியையும் கொன்ற பின் திர்காயுவைத் தேடினான், அவன் கிடைக்கவில்லை. திர்காயுவின் மனதில் ஆத்திரம் நிறைந்து இருந்தது. தன் பெற்றோரைக் கொன்ற மன்னனை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருந்தான்.



திர்காயு யானைகளை அடக்குவதில் சிறந்து இருந்ததினால் அவனுக்கு அரண்மணையில் யானைக் கொட்டத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய சாதூர்யத்தை பலமுறை கண்ட மன்னன் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனை தன் காவல் பணியில் வைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு திர்காயு யார் என்பது தெரியாது. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற பொழுது அவர்கள் இருவரைத் தவிற மற்றவர்கள் எங்கோ போய் விட்டனர். களைப்படைந்த மன்னனை ஒரு மர நிழலில் தன் தொடை மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உறங்குமாறும், அதன் பின் கிளம்பிப் போகலாம் எனவும் திர்காயு கூற மன்னனும் உறங்கத் துவங்கினான். தான் எதிர் பார்த்து வந்த தருமணம் வந்து விட்டது என எண்ணிய திர்காயு மன்னனைக் கொல்ல வாளை கையில் எடுத்த பொழுது, தன் தந்தை கூறிய அறிவுறை மனதில் தோன்ற தனது முடிவை மாற்றிக் கொண்டு வாளை உறையில் வைக்க, திடுக்கிட்டு எழுந்த மன்னன் கூறினான் ‘எனக்கு பயமாக உள்ளது. என்னைக் கொல்ல எவனோ என் அருகில் வாளை எடுத்துக் கொண்டு வந்ததைப் போல இருந்தது.’ .அதற்கு திர்காயு பதிலளித்தான் ‘ அது நான்தான்’. மன்னன் கதறினான், கெஞ்சினான் ‘ ஐயோ என்னைக் கொன்று விடாதே, விட்டுவிடு’. திர்காயு அமைதியாகக் கூறினான் ‘உன்னை நான் விட்டு விடுகின்றேன். என்னையும் நீ கொல்ல மாட்டேன் என வாக்குறுதி கொடு’. உடனேயே மன்னனும் வாக்குறுதி அளிக்க தான் யார் என்பதை வெளிப்படுத்தினான் திர்காயு.



அதன் பின் சற்று நேரம் கழித்து மன்னன் திர்காயுவிடம் அவனுடைய தந்தை தான் மரணம் அடையும் முன் கூறிய ‘ நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே,’ என்ன கூறினாரே அதன் பொருள் என்ன என்பதை விளக்குமாறு கேட்க திர்காயு கூறினான் ‘நீண்ட தூரம் பார்க்காதே என்றால் உன் வெறுப்பை வளர்த்துக் கொண்டே இருக்காதே என்று பொருள், குறைந்த தூரத்தையும் பார்க்காதே என்றால் அவசரப்பட்டு இப்போது எதுவும் செய்து விடாதே என்ற அர்த்தம். அன்று அவசரப்பட்டு நான் ஓடி வந்து உங்களை கொன்று இருந்தால் மக்கள் என்னைக் கொன்று இருப்பார்கள். அதன் பின் என் ஆட்கள் என்னைக் கொன்றவர்களை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டும் தொடர் கதையாகி இருக்கும். இப்போது நாம் இருவரும் ஆத்திரத்தை விட்டுவிட்டு அஹிம்சையை பின் பற்றினால் அனைவருக்கும் நல்லது அல்லவா, என்று கூற விரோதிகள் இருவரும் இணைந்தனர்.



இந்த கதையைக் கூறிய புத்தர் தம் சீடர்களுக்கு வெறுப்பை வளர்த்துக் கொள்வது ஒருவருக்கொருவர் அழிய அவரவர்களே காரணமாகி விடுவதினால், ஆத்திரத்தை அடக்கி, அமைதியாக எதற்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.
by Vethathiriyam for World Peace

Thursday, April 21, 2011

SKY friends - e-mails

jaya lakshmi , sitabala94@yahoo.in, Karthik Narayanan , priasundar , KANIMOZHI K , Yogeshwar Vajravelu , "gulali.murthy" , Nathiya VC , yamuna A , shivaranjani sivanesan , பெருஞ்சித்திரன் ╰» ρєяυη¢нιтнιяαη , "Thulasi Raman. R" , தமிழ் அருவி , Kals S , Revathy krishnan , umanathanma , Vinothkumar Vethathiri , sarevati@rediffmail.com, "prakash ." , RAMesh Kumar S , Rajasekar , "Dr V Gopinath B.A.M.S.," , "gowthaman.rv" , "PADMANABAN K.A." , Venkataraman R , Sri nivasan , Sarvajit KR , Divya Loganathan , Arun T , Sasi Kumar , Shivakumar வாழ்க வளமுடன் , anuja nair , MageshRaman Venkatesan , "Jo.Su.RAM KUDANTHAI" , utshiva , Jothimani T , ★ Thanigai vel★ , boopathy rajagopal , Vasanth Kumar , shalini shalini , bhagya bala , nandhakumar9 , parthaa sarathi வாழ்க வளமுடன் , "oshonithi.. ..." , UMARAMANAN S , Sundararajan R , bpr783 , Narmadha Kathir , kavitha s

முழுமை நல வாழ்விற்கு எளிய முறை யோகப் பயிற்சிகள்

வாழ்க வளமுடன் குருவே துணை வாழ்க வையகம்
வேதாத்திரி மகரிஷின்
முழுமை நல வாழ்விற்கு எளிய முறை யோகப் பயிற்சிகள்
1 . எளிய முறை உடற் பயிற்சி
நோய்கள் குணமாக
நோய்கள் வராமல் தடுக்க
உடல் வலுப்பெற
2 . எளிய முறை யோகாசன்கள்
உடலுக்கு அழகான வடிவத்தை பெற
இளமை காத்து வயோகிதத்தை தள்ளி போட
சர்க்கரை, இதய நோய்களுக்கு சிறப்பு ஆசான்கள் பெற
3 . எளிய முறை மூச்சுப் பயிற்சிகள்
மூளை செல்கள் புத்துணர்ச்சி பெற
நரம்பு மண்டலம் உறுதிப் படுத்த
மூச்சு தொந்தரவு நோய்கள் நீங்க
4 . எளிய முறை காயகல்பப் பயிற்சி
ஞாபக சக்தி அதிகரிக்க
அறிவு கூர்மை கிட்ட
ஒழுக்க உணர்வு மேலூங்க
5 . எளிய முறை தியானப் பயிற்சிகள்
மன அமைதி பெற
மன ஓர்மை நிலை கிட்ட
ஆன்மீக மேம்பாடு அடைய
கோடை விடுமுறையை பயனுள்ளதாக்குங்கள்
தகுதி :
14 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும்
பயிற்சி காலம் :
தினசரி 1 மணி நேரம்
பெண்களுக்கு :
பெண் ஆசிரியர்களால் தனி வகுப்பு நடத்தப்படும்.
இலவச அறிமுக வகுப்பு :
1 -5 -2011 - மாலை 6.00௦௦ மணி
பயிற்சி நடை பெரும் இடங்கள் :
துணை பேராசிரியர் பூங்குழலி
பெண்கள் தவ மையம்
M -283 , புதிய வீட்டு வசதி வாரியம் - முதல் தொகுதி
மகளிர் காவல் நிலையம் பின்புறம்
கிருஷ்ணகிரி
984148902 .
மேலும் தகவல் பெற
மனவளக்களை மன்ற அறக்கட்டளை
64 /35 , இரண்டாவது குறுக்கு தெரு,
கோ - ஆப்பாரடிவ் காலனி
கிருஷ்ணகிரி
9843690051
தினசரி பயிற்சிகள்
காலை 6 .30 - 7 .30
தியானம், உடற் பயிற்சி
மாலை 6 .30 - 7 .30
கூட்டு தியானம்
சிந்தனை விருந்து நடைபெறும்

Wednesday, April 20, 2011

சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

ஆறாம் திருமுறை

அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே
( 4080 )
ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத279 அருட்சோதி என்கையுறல் வேண்டும்
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே
( 4081 )
அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கண்வத்தல் வேண்டும்
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே
( 4082 )
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே
( 4083 )
அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே
( 4084 )
அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே
( 4085 )
அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே
( 4086 )
அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே
( 4087 )
அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே
( 4088 )
அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே
( 4089 )
அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
கமையாதி280 அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே

Sunday, April 17, 2011

ஆய்வுக் கூடத்தில் வளர்கிறது சிறுநீரகம்!

ஆய்வுக் கூடத்தில் வளர்கிறது சிறுநீரகம்!
-ஆச்சர்ய மருத்துவம்
சிறுநீரகக் கோளாறுகளில் தவிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 'மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லை வைத்து, செயற்கை முறையில் சிறுநீரகத்தை வளர்த்தெடுக்க முடியும்’ என்று இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் கண்டறிந்து உள்ளனர். இப்போது, தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு இருப்பதுபோன்று அரை செ.மீ. நீளத்துக்கு சிறுநீரகத்தை வளர்த்து உள்ளனர். இதை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அளவுக்கு வளர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

'இந்தியாவில் ஆண்டுதோறும் 90,000 பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 10,000 பேர் இருக்கின்றனர். இவர்களில் 22.5 சதவிகிதம் நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெறுகின்றனர். சுமார் 2.5 சதவிகிதம் நபர்களுக்குத்தான் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடக்கிறது. சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுக்கப் பலர் முன் வந்தாலும், அதில் 25 சதவிகிதம் பேரின் சிறுநீரகங்கள்தான் தானமாகப் பெறத் தகுதியுடையதாக உள்ளன!’ என்று நேஷனல் கிட்னி ஃபவுண்டேஷன் இந்தியா தகவல் தெரிவிக்கிறது.
தானமாகப் பெறும் சிறுநீரகத்தை உடல் ஏற்றுக்கொள்வதிலும் பிரச்னை உள்ளது. உடலுக்கு சம்பந்தம் இல்லாத பொருள் என்று பெரும்பாலான நேரங்களில் தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகத்தை நிராகரித்துவிடுகிறது. இந்தக் குறைபாடு புதிய ஸ்டெம்செல் தொழில்நுட்பம் காரணமாக நீக்கப்படுகிறது. அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்லில் இருந்தே சிறுநீரகம் வளர்க்கப்படுவதால், உடலால் நிராகரிக்கப்படும் பிரச்னை இருக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த டாக்டர் ஜெமி டேவிஸ் கூறுகையில். ''உடல் உறுப்பு செயற்கையாக உருவாக்குவதை அறிவியல் உலகின் கற்பனை என்று முன்னர் சொல்வார்கள், ஆனால், அது இப்போது சாத்தியமாகிவிட்டது. தாயின் கருவறையில் உருவாவதுபோன்றே, சிக்கலான சிறுநீரகத்தை உருவாக்குவதில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். தாயின் கருவறையில் குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீரில் உள்ள ஸ்டெம் செல் மற்றும் விலங்கின் திசுக்களைப் பயன்படுத்தி, சிறுநீரகத்தை உருவாக்கி, வளர்த்து வருகிறோம். இந்த ஆராய்ச்சி முழுமையாக முடிவடைந்து, மனிதர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்ற அளவுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஆனால், இதற்கு அதிகச் செலவாகும் என்று கருத வேண்டாம். சிறுநீரக நோயாளி ஒருவர் ஆயுள் முழுக்க டயாலிசிஸ் செய்துகொண்டே இருப்பதைக் காட்டிலும் செலவு குறைவாகத்தான் இருக்கும்!'' என்றார்.
இந்தியாவில் இதன் சாத்தியம் குறித்து லைஃப் செல் இன்டர்நேஷனல் முதன்மை விஞ்ஞானி டாக்டர் அஜித்குமார் கூறுகையில், ''ஸ்டெம் செல் மூலம் சிறுநீரகம் போன்று பல்வேறு உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாக நடந்து வருகின்றன. மனித சமுதாயத்தின் எதிர்கால நம்பிக்கையாக, இந்தத் தொழில்நுட்பம் விளங்கும். ஸ்டெம் செல் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் எலும்பு மஜ்ஜையில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்லுக்கே முக்கியத்துவம் இருந்தது. தற்போது, தொப்புள்கொடி, பனிக்குட நீர் என்று முன்னேற்றம் கண்டுள்ளது.

இங்கிலாந்தில், கருநீர் என்று சொல்லப்படும் பனிக்குட நீரில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம்

செல் மற்றும் விலங்குகளின் திசுவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லைக்கொண்டு, சிறுநீரகத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள். இதுவே, மனிதனின் தொப்புள்கொடி திசு மற்றும் பனிக்குட நீர் இரண்டையும் சேர்த்துச் செய்யும்போது, ரிசல்ட் இன்னும் நன்றாக இருக்கும். இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, உறுப்பு கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் காத்துக்கிடக்கின்றனர். இந்த புதிய தொழில்நுட்பம் வெளிநாட்டில் அறிமுகமான உடனேயே, இங்கேயும் வந்துவிடும். இந்திய அரசும் இதற்கு ஆதரவு அளிக்கும். எப்படி தொலைத் தொடர்புத் துறைக்கு டிராய், பங்குச் சந்தைக்கு செபி உள்ளதோ, அதே போன்று ஸ்டெம் செல் ஆராய்ச்சியை ஒழுங்குபடுத்த ஓர் அமைப்பை மத்திய அரசு உருவாக்க உள்ளது. இதன் பிறகு, இந்தியாவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மேலும் மேம்படும். சிறுநீரகம் வளர்த்து எடுக்கும் தொழில்நுட்பம், நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக டிசெல்லுலாரைசேஷன் என்று புதிய முறை வந்துவிடும் என்றே நாங்கள் கருதுகிறோம். டிசெல்லுலாரைசேஷன் என்பது இதய நோயாளிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும். இந்த முறையில், நோயாளியின் பழுதுபட்ட இதயத்தில் உள்ள செல்லை செயல் இழக்கச் செய்துவிட்டு, அவரது எலும்பு மஜ்ஜையில் இருந்து ஸ்டெம் செல் எடுத்து, இதயத்தில் செலுத்தி செயல்படவைக்க முடியும். அவர் உடலில் ஸ்டெம் செல் கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கு பொருந்தக்கூடிய நன்கொடையாளரிடம் இருந்து ஸ்டெம் செல் எடுத்தும் செயல்படுத்த முடியும். இதனால், நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் குறைவு!'' என்றார்.
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் போதிய அளவு உடல் உறுப்புகள் தானமாகக் கிடைக்காததால், பல நாட்டு மருத்துவ விஞ்ஞானிகளும் உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டனர். அமெரிக்காவில் மனித இதயத்தை உருவாக்கும் முயற்சியிலும், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்ணின் கருவிழியை உருவாக்கும் முயற்சியிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்!
- பா.பிரவீன்குமார்

நன்றி--விகடன்

Saturday, April 9, 2011

நம் உடலில் ஒன்பது முக்கிய இயக்க மண்டலங்கள்.

நம் உடலில் ஒன்பது முக்கிய இயக்க மண்டலங்கள்.

எலும்புகளுடன் இயங்கும் நம் எலும்பு மண்டலம்.---Skeletal System.

+ நம் உடலின் எடையைக் கொண்டுள்ள கனத்த தசை மண்டலம். ---Muscular System.

+ மூளையிலிருந்து தொடங்கித் தண்டுவடம் வழியே உடலின் ஒவ்வொரு செல்லுடனும்

செய்தித் தொடர்பு வைத்திருக்கும் மத்திய நரம்பு மண்டலம்.---Central Nervous System.

+ வாயில் தொடங்கி கழிவுத் துளை வரை செல்லும் நீண்ட

உணவுப் பாதை மண்டலம்.---Digestive System.

+ மூக்குத் துளையில் தொடங்கி நுரையிரல் வரை செல்லும்

மூச்சுப் பாதை மண்டலம்.---Respiratory System.

+ இதயத்தில் தொடங்கி உடல் முழுதும் சுற்றி இதயத்திலேயே முடியும்

குருதி ஓட்ட மண்டலம்.---Blood Circulation System.

+ நீர்க்கழிவை வெளியேற்றும் தோல், சிறுநீரகம் உள்ளிட்ட கழிவு

வெளியேற்ற மண்டலம்.---Excretory System.

+ சூழ்நிலைகளுக்கும் பருவ மாறுதல்களுக்கும் ஏற்ப, ஒவ்வொரு நொடியும், நம் ஒவ்வொரு உறுப்பையும் கண்காணிப்பில் வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பி மண்டலம்.---Glands System.

+ நம் ஏழு தலைமுறை வரலாற்றை அடக்கி வைத்து, புதிய தலைமுறையைப்

பற்றித் தீர்மானித்து வடிவமைக்கும் இனப்பெருக்க மண்டலம்.---Reproductive System.

நன்றி, திருக்குறள். இரா. கனகசுப்புரத்தினம். வாழ்க வளமுடன்.

Friday, April 8, 2011

இறைவனோடு உரையாடினோம் !

இறைவனோடு உரையாடினோம் !

வள்ளல் பெருமான், அப்பரடிகள், மணிவாசகர் இவர்கள் எல்லாம் உலகத்தை விட்டுப் போன பிறகுதான் மனிதகுலம் கடவுளைக் கண்டவர்கள் பட்டியலில் சேர்த்திருப்பார்கள் போலும். ஏனெனில் உலகில் யார் கடவுளைக் கண்டாலும் அவர்களை மனநோயாளி பட்டியலில் வைத்துப் பார்க்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, கனவில் கடவுளைக் கண்டேன், பேசினேன், என்று பலரும் பிதற்றித் திரியும் நிலையும் ஒருபுறம் இருக்க, கண்டவர் விண்டிலர்( மயங்கிலர்) என்பது போல கடவுளைக் கண்டாலும் காணாதது போல மௌனமாகிவிட்டவர்கள் பலர். என்றாலும், இறைவனோடு பேசியதால் ஏற்பட்ட பலன்களைச் சொல்லும்போது அனைவருக்கும் இறைலயம் ஏற்பட ஏதுவாகும் என்ற நோக்கில் இக்கட்டுரையை எழுதுகிறோம்.


நாம் 2007 பிப்ரவரி 23 அன்று இறைதரிசனம் பெற்றபோது இறைவன் கூறிய வார்த்தைகளை இங்கு மெய்ப்பிக்கவே விரும்புகிறோம். "1992 முதல் இதுவரை நடந்து வந்த உள்போராட்டம் இனி முடிவுக்கு வந்துவிட்டது. இனி தவத்தில் சலிப்பு இல்லாமல் தொடரலாம்" என்றார் இறைவன். அதாவது இறைவனைக் காண்பதற்கு முன் தவம் தொடங்கிய சில நாளிலேயே சலிப்பு வந்துவிடும், அப்புறம் தவத்தை நினைத்தாலே பயம் வந்துவிடும். பிறகு ஆறு மாதம் போராடிவிட்டு மீண்டும் தவம் தொடர்வோம். மீண்டும் மீண்டும் தோல்வி! எவ்வளவுதான் மனதிற்கு தைரியம் கூறினாலும் தவம் கலைவதைத் தடுக்க முடியாது. 2003 ல் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் முடித்து விட்டுதான் வெளியே வருவோம் எனக் கூறிவிட்டுத் தவம் செய்தால் இரண்டரை வருடத்திலேயே முடிக்க வேண்டிய கட்டாயம் வந்தது. 1992 முதல் 2006 வரை ஒரு வருடத் தவம் என்றால் மூன்று மாதத்தில் முடியும். மூன்று வருட தவம் என்றால் ஒருவருடத்தில் முடியும். ஆனாலும் விடுவதில்லை! அடைந்தே தீருவது! எத்தனை தோல்விகள் வந்தாலும் பரவாயில்லை என மேலும் மேலும் முயன்றவண்ணம் இருந்தோம். சாதாரண பாமர மக்கள் கூட, "சாமி அப்படிதான் ஐந்துவருடம் என்பார், ஐந்து மாதத்தில் வந்துவிடுவார்" எனக் கேலி பேசும் அளவுக்கு எமது நிலைமை இருந்தது.


கதவு அடைத்து வைத்த இரண்டு நாள் ஆனதுமே மனம் பேசும். கதவைத் திறந்து வை! நாம் முடியாது என்போம். உடனே மனம் நீ முடியாது என்றால் சிறிது நேரத்தில் பைத்தியம் ஆகிவிடுவாய் என மிரட்டும். வேறு வழியில்லாமல் கதவைத் திறந்து வைத்து விட்டு மௌனமாகக் கண்களை மூடி தவம் செய்வோம். பிறகு ஒரு மாதத்தில் அந்த அறையிலும் தங்கவிடாது. அப்புறம் மேலே மொட்டைமாடியிலும் தவம் செய்தோம். இந்த மனதோடு நான் பட்ட சித்ரவதையை எழுத்தில் கூட வடிக்க முடியாது. அறைகளின் சன்னல்களை மூடினால் கூட காற்றே வராமல் மூச்சு முட்டுவது போன்ற ஒரு பிரமையை உண்டாக்கும். பிறகு தவம் கலைந்து மொட்டைமாடிக்கு ஓடுவது போலச் செய்யும். இதை விவரித்து வெளியே சொல்லவும் முடியாது, சொன்னால் பைத்தியம் என்பார்கள். தவம் செய்ய சூழ்நிலை வாய்க்கவில்லை அதனால் கலைத்துவிட்டோம் என்போம்.


இதெல்லாம் ஏன் நடந்தது? என்பது இப்போதுதான் தெரிய வருகிறது. ஒளவை அகவலில் ஒரு செய்தி வரும்,

"மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால்
எழுப்பும் கருத்தை அறிவித்து "


என்ற வரியில் யோக ரகசியத்தை இறைவன் அறிவித்த பிறகுதான் அதைச் செய்ய முடியும். மாறாக நாம் ஆசைப்படுவதால் அது நடக்காது. வள்ளலார் கூறுவாரே,
"துன்றுமல வெம்மாயை அற்ற வெளிக்குள்
வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம்"


" இன்று வருமோ! நாளைக்கு வருமோ!
மற்று என்று வருமோ அறியேன் "


என்றாரே! சும்மா இருக்க நினைத்தால் உட்கார வேண்டியதுதானே ! முடியாது. சும்மா இருக்கிற சுகம் இறைவன் அறிவித்தால் மட்டுமே கைகூடும். புத்தர் செய்த தியானம் என்பது உள்ளேயே கவனம் வைத்தல், இதை எல்லோரும் செய்யலாம். அதனால்தான் புத்தருக்குக் கடவுள் தரிசனம் தரவில்லை. சும்மா இருப்பது என்பது மனத்தைக் கொல்லும் வித்தையாகும். இந்த விபரம் தெரியாமல் மனதோடு போராடி போராடி களைத்து ஓய்ந்து 14 வருடத்திற்குப் பின் இறைதரிசனம் கிடைத்தப் பிறகு, இப்போது இரண்டு ஆண்டுகளாகக் அதவை அடைக்கிறோம், சன்னலை அடைத்துவிட்டோம். கண்களை 20 மணி நேரத்திற்கு மேல் மூடியே இருந்தாலும் தவத்தில் சலிப்பு இல்லை. நூறாண்டுகள் கண்களை மூடியே நீடிப்பதுதான் ஆச்சரியம். இந்தப் பேற்றுக்கு இணையாக இந்திரப் பதவியே இணையாகாது.


திருமூலர் கூறுவார்,

"ஈராறு கால்கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிதும் உண்ண வல்லீரேல்
நீராயித்தாண்டு நிலம் ஆயிரத்தாண்டு
பேராது காயம்பிரான் நந்தி ஆணையே "


இதன் மூலம் நீருக்குள் ஆயிரம் ஆண்டுகள் மூழ்கியும், நிலத்தில் ஆயிரம் ஆண்டுகள்புதைந்தும் இருக்கலாம் என்றால் எப்படி சலிப்பு இல்லாமல் இருக்க முடியும்? இன்றைக்கும் பல சித்தர்கள் புதைந்து தவம் செய்கிறார்கள். இதுதான் இறையருள் ரகசியம் என்பது.


உலகம் இதுவரை அறிந்திராத பல ஆன்மீக ரகசியங்களில் இதுவும் ஓன்று. பல மேதாவிகளுக்கு ஒரு சவால், கடவுளின் துணையின்றி 48 நாட்கள் கண்களை மூடி ஒரு இருக்கை நிலையைக் கடைப்பிடித்து தவம் செய்ய முடியுமா? இறையருள் இருந்தால் மட்டுமே முடியும், இல்லைஎன்றால் மனம் புலம்பித் தவித்து விடும். பேசாமல், அசையாமல் நாள்கணக்கில் மனம் இருக்க விடாது. சித்தப் பிரமை உண்டாக்கிப் பயம்கொள்ள வைத்துவிடும். இது எமது 14 வருட கடும் முயற்சி அனுபவம். இன்று எத்தனை மாதங்கள் வருடங்கள் கூட கண்களை மூடியே தவம் செய்ய முடியும். இது அவசியமா? எனப் பலரும் கேட்கலாம். நிச்சயம் அவசியமே! ஏனென்றால்


"மூலநெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தே
பாலை இறக்கி உண்டு பசியாருவது எக்காலம்"


என்று பத்திரகிரியார் ஏங்கித் தவித்தார். பலநாட்கள் கண்களை மூடி மூலக்கனலை எரித்து உச்சந்தலை வழியாகப் பாலை(அமிர்தம்) சாப்பிட்டால்தான் மரணத்தை வெல்ல முடியும். உடம்பு காயசித்தி ஆகும். இதற்குப் பெரிய தடை மனம்தான்.


இப்படி 14 வருடம் செய்ய முடியாத தடையானது இப்போது எப்படி விலகியது? இறைவன் சொன்ன ஒரு வார்த்தை எமக்கு வாழ்வானது. நாம் இறைவனோடு பேசியதை உலகம் ஏற்கலாம் அல்லது ஏற்காமல் மறுக்கலாம். அது எமக்கு முக்கியமல்ல. ஆனால் பல ஆண்டுகளாகச் செய்ய முடியாத சாதனை இப்போது செய்ய முடிகிறது. பல நாட்களாக சூரிய, சந்திர, நட்சத்திரங்களை பார்க்காமல் தவம் செய்ய முடிகிறது. அதோடு சலிப்பில்லாமல் கரும்பு தின்னக் கூலி எதற்கு? என்பது போல ஓராண்டு கண்களை மூடித் தவத்தில் இருந்தாலும் ஆனந்தமாக லயமாகி செய்ய முடிகிறது. இது ஒன்றே இப்பிறவிக்குப் போதுமானது.


" உறக்கம், உணர்வு, பசி கெடப்பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு"


என்பார் ஒளவை. கண்களை மூடி கனலை எழுப்பச் செய்யும், தவத்தினால் தூங்க முடியாது, உடல்வலி ஏற்படாது, பசி வராது. இதைவிட எண்ணப் பெரும்பேறு தேவை! எனவே கடவுளைக் கண்டேன் அவர் கோவிலை கட்டு, குளத்தை வெட்டு என்றார் என்று அற்பமாகப் புலம்பாமல், மனமே கனவில் கடவுளாகப் பேசி ஏமாற்றுவதையும் நம்பாமல், உண்மையாகவே கடவுள் உங்கள் ஆன்மாவில் வந்து பேசினால் அதன்பிறகு, வாழ்வில் வசந்தம், தெளிவான கோட்பாடு, தவம் பற்றி இறைவன் ரகசியங்கள் சொல்வார். மூப்பு, மரணத்தை வெல்லும் யுக்தியைக் கூறுவார்.


கட்டாயம் கடவுளை அனைவரும் காண முடியும், பேச முடியும். இதைவிடுத்து மனப்பிராந்தியாக உளறக் கூடாது. இப்படிதான் ஒரு அம்மையார் இரவில் கனவில் முருகன் வந்தார், உங்களுக்கு வெற்றிலை பாக்கு வாங்கி கொடுக்கச் சொன்னார், வாங்கி வந்துள்ளேன் என்றார்கள். உடனே முருகப் பெருமானுக்கு நாம் வெற்றிலைப் பாக்கு போடமாட்டேன் என்கிற ரகசியம் தெரியாமல் போய்விட்டது, எனவே, இன்று இரவு கனவில் வருவார், அவரிடமே இதனை ஒப்படைத்து விடவும் என்றோம். அந்த அம்மையாருக்கு ஒருமாதிரியாகி விட்டது. இப்படிப் பல பேர்கள் வாழ்வதினால்தான் உண்மையில் கடவுளைப் பார்ப்பவர்களையும் பகுத்தறிவு உலகம் மறுத்துப் பேசுகிறது.


கடவுள் அருள் பெறாதவர்கள் சர்வ நிச்சயமாக செய்ய முடியாத அமானுஷ்ய சாதனைகளை நிகழ்த்த முடிகிறது. இறைவன் என்னென்ன கூறினாரோ அது அப்படியே நிகழ்ந்தும் வருகிறது. இறைவனோடு உரையாடினோம் என்றால் அது அந்த நேரம் மட்டும் இன்பம் தந்துவிட்டு மறைந்துப் போகிற செயலாக இல்லை. ஒருபிறவி முழுவதும் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள், உலகியலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நுட்பங்கள் எல்லாவற்றையும் போதனையாகப் பெற்றோம்.


"குருவே சிவமெனக் கூறினன் நந்தி " என்பார் திருமூலர். இவை அனைத்துமே சத்தியப்பூர்வ வசனங்கள். இறைவன் குருவாக வராதவரை தவத்தில் ஒருபடியைக் கூட கடக்க முடியாது. இறைவனை சிலர் மின்சாரத்தைப் போல இயக்கப் பொருளாகப் பார்க்கிறார்கள், மற்றும் சிலர் கோவிலில் சிலையாக மட்டுமே பார்க்கிறார்கள். என்றாலும் இறைவனே நம் நேரில் வரும்வரை நாம் ஏதாவது ஒருவகையில் முட்டாளாகவே பிணத்திக் கொண்டு திரிவோம். இறைவனே வந்து இதுதான் இறைத்தன்மை என உணர்த்தாதவரை சந்தேகம் தொடர்ந்து வாழும்.


நாங்கள் சொல்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம், தவறில்லை, தொடர்ந்து இறைலயம் பற்றிக் கேட்டுக் கொண்டே வாருங்கள், என்றாவது ஒருநாள் சிவலயம் உண்டாகும், பிறகு நீங்களே குருமார்கள் ஆவீர்கள்.
"கனலேறிக் கொண்டிருந்தால் எல்லாம் உண்டு
காற்றை வெளிவிட்டாக்கால் கர்மம் தீதாகும் "
என்று ரோமரிஷி கூறியதை 1992 லேயே படித்துள்ளோம். ஆனால் அனுபவத்திற்குக் கொண்டுவர 14 வருடங்கள் ஆகிவிட்டது. அதுவும் இறைதரிசனம் வந்த பிறகுதான் கைகூடியது. இதுதான் உண்மை எனத் தெரிந்தால் மட்டும் போதாது, அந்த உண்மையை எப்படி நிலைநாட்டுவது என்பதுதான் முக்கியம். கனலை தினசரி 16 மணிநேரம் உச்சந்த்தலையில் நிறுத்தினால் அமிர்தம் வரும். நாளைக்கே உங்களால் நடைமுறைப் படுத்த முடியுமா? முடியாது. இது உண்மைச் செய்தி அவ்வளவுதான். 16 மணிநேரம் கனலை நிறுத்த இறையருள் தேவை என்கிறார் மணிவாசகர்.
"அவன் அருளாலே அவன் தாள் பணிந்து" என்கிறார். இறைவன் பாதம் என்பதே கனல்தான். கனல் உச்சிக்கு வராமல் யாரும் யோகியாக முடியாது. கனலே! கனலே! எனக் கத்தினால்தான் வருமா என்ன? சாதனை வேண்டும்.
அதனால்தான் " தண்ணி தண்ணி எனக் கத்தினால் தாகம் தீருமா" என்றார் காகப்புசுண்டர். எனவே சாதிக்க வேண்டும். ஆர்வம் இருந்தால் அந்த நிலைமையை அடையப் பெரிதும் உதவியாக இருப்போம். நிச்சயம் அடைய முடியும்.


எனவே இறைவன் பேசியது ஓரிரு வரிச் செய்திதான் இனி சலிப்பு வராது என்றார். இதில் ஆயிரம் வருடத்திற்கு உள்ள அனுபவமுறை அடங்கி உள்ளது. இப்படி இறைவன் சொன்னதும், அது அனுபவம் ஆகும் விதமும், நடைமுறையாகும் பக்குவமும் அதிசயமானது. இறைலயம் தொடரும்...........




------ தவயோகி ஞான தேவ பாரதி சுவாமிகள்

Wednesday, April 6, 2011

மனதின் இயல்பும் கையாளும் நுட்பமும்

மனதின் இயல்பும் கையாளும் நுட்பமும்
வழி தெரியாத ஊருக்கு பயணம் போகும் போது ஒரு வழிப்போக்கனிடம் வழி கேட்டால், இணக்கமான அன்போடு வழி காட்டுபவர்களும் உள்ளார்கள், சிலருக்கு நாம் கேட்கிற ஊர் தெரிந்திருந்தாலும் எமக்கு தெரியாது என்று கூறுபவர்களும் உள்ளார்கள். இப்படிப்பட்ட வித்தியாசமான மனிதர்கள் வாழ்க்கைத் தரம் அமைவதற்கு என்ன காரணம் என்பதை அறிவது தான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.


சிலருடைய வீடுகளில் சமையல் பாத்திரம் முதல் சாம்பிராணி பாட்டில் ஈறாக, படிக்கிற நூல்கள் முதல் துடைக்கிற துடைப்பம் வரை ஒரே இடத்தை குப்பையாக்கி வைத்தது போல வாழ்வார்கள். சிலபேர்கள் மட்டும், படிக்கிற நூல்கள் ஒருபுறம், பழமைவாய்ந்த பொருள்கள் ஒருபுறம் என அடுக்கி வைத்து வீட்டை அழகுபடுத்துவார்கள். இதே போன்று தான் நமது மனது என்கிற வீட்டை சுத்தமாக வைப்பதும், கண்ட கண்ட பொருட்களைச் சேர்த்து குப்பையாக்குவது அவரவது இயல்பாக இருப்பதால் உலகத்தில் பாவங்கள் அதிகரித்து பரிதாப மரணம் அடைகிற நோயாளிகளாக பலர் வாழ்கிறார்கள். பீரோவில் எதை வைக்க வேண்டும், அலமாரியில் எதை அடுக்க வேண்டும் என்கிற அனுபவம் இல்லாதவன் வாழ்வு குப்பையாவது போல, மேல் மனதில் எதை அடுக்க வேண்டும், நடுமனதில் எது வைப்பதை தடுக்க வேண்டும், ஆழ் மனதில் எதையெல்லாம் வைக்க வேண்டும் என்பதை போதிப்பது தான் ஆன்மீகத்தின் போதனையாகும்.


வள்ளுவர் கடவுள் வாழ்த்து வைக்கவே இல்லை என வாய் வக்கணையாக பேசும் வையகம் இது. வள்ளுவர் குறளை எந்த மனதில் வைப்பது எனத் தெரியாத மூடர்கள். வெளி மனதில் திருக்குறளைப் பதிய வைத்து தெருப் பொறுக்கிகளாக வாழ்நாள் முழுவதும் வடிகட்டிய பதராக வாழ்வியல் நடத்துவதை அன்றாடம் காண்கிறோம். நெறிப்படுத்தாத குறை வள்ளுவத்திடம் இல்லை, தறிகெட்ட மனிதனிடம் மனதில் அமைந்த சூது தான் காரணம். வள்ளுவம் வகைப்படுத்தி மானுட நெறியை வழங்கி இருக்கிறது.


கடவுள் வாழ்த்து முதலாக அறத்துப்பாலை மனிதன் தனது ஆழ்னிலை அடிமனதில் முதலில் பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக பொருட்பாலை மனிதன் தனது நடு மனதில் பதிவு செய்ய வேண்டும், காமத்துபாலை மனிதன் தனது மேல் மனதில் பதிவு செய்ய வேண்டும். இதுதான் முறையான ஆன்மீகப் பாடமாகும். காசு, பணம் வைக்க வேண்டிய பெட்டியில் காலணியை வைத்தவன் கதி போல, ஆழ்மனதில் காமத்தை வைத்துவிட்டு அறத்துப்பாலை மேல் மனதில் வைத்தால், அடுத்தவனுக்கு உபதேசம் செய்வதற்கு மட்டும் தான் திருக்குறள் பயன்படும். எமக்குத் தெரிந்த ஒருவருக்கு திருக்குறள் அத்தனையும் அத்துபடியாகத் தெரியும், தலைகீழாக கேட்டாலும் நிலைமாறாமல் ஒப்பிப்பார், ஆனால் தனிமனித ஒழுக்கம், அறவே இல்லாத, திருக்குறள் போதனைக்கு எதிர்மாறாக வாழும் சமுதாய உத்தமர். காரணம் என்ன? ஆழ்ந்து யோசித்தால் அவரது ஆழ்மனதில் காமமே ஆட்சி செய்கிறது. வெளிமனதில் திருக்குறள் மணம் வீசுகிறது. என்ன புண்ணியம்? காசு பணம் திரட்டவும், கடைத்தேறா வழிகாட்டவும், அக்கரை பச்சைதேடும் ஆவலான மாடுகளைப் போன்ற மடையர்கள் கூட்டத்தை சேர்க்கவும் திருக்குறள் பேராயுதமாக அன்னவருக்குப் பயன்படுகிறது. அது போகட்டும்.


மனம் என்பது மின்சாரம் மாதிரி, பயன்படுத்தும் விதத்தில் பலன்களை அள்ளிக் கொடுக்கும். மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் நமது உயிரையே குடித்துவிடும். அது போல ஆழ் மனதில் தவறான பதிவுகளை உண்டாக்கி விட்டால் நமது அழிவுக்கு அதுவே காரணமாகிவிடும். மனிதனை அழிப்பது வெளிப்புற காரணியே அல்ல, உள்ளே தவறாக பதிவு செய்யப்பட்ட, அதே சமயம் வைக்கக்கூடாத ஆழ்மன பதிவே தவறாளியாக தடம்புரண்டு விடுகிறது மனிதத் தன்மை.


ஆழ்மனம் என்பது ஆபத்து நிறைந்த களம் என்பதும் உண்மைதான். அங்கே ஆன்ம வாழ்வு தரும் அருளரசு செலுத்தும் ஆண்டவன் உறைவிடமும் அதுதான். காமவேட்கை வெகுவாக ஈர்க்கப்படும் இடமும் ஆழ்மனம் தான். தெரிந்தோ, தெரியாமலோ ஆழ்மனதில் படிந்த கறைகளைத் துடைப்பது தான் தியானமும் தவமும் ஆகும். ஆழ்மனதை ஆலயமாக வைத்திருப்பவர்களை அண்டி வாழும் போது ஆழ்மன கசடுகள் அப்புறப்படுத்தப்படும். திருக்குறளைப் படித்துவிட்டு அனைவருமே அறிவாளிகளாக வர முடியாததற்குக் காரணமே! ஆழ்மனதை துப்புறவு செய்யாமல் ஆழ்மனதின் களிம்புகள் அகற்றப்படாமல் எவ்வளவு தூரம் படித்து நிரப்பினாலும் பயன் விளையாது. திருக்குறளார் என்கிற சமுதாய உத்தமர் பட்டம் வாங்கலாமே தவிர, ஆன்மீக சம்மேளனப்பதவி அமையாது. அடிமாடுகளைத் திரட்டியது போல பல ஆன்மீகப் பயிலரங்குகள் ஆங்காங்கே அரங்கேறுகிறது. ஆனாலும், மனிதம் புனிதமாக பயனிப்பதாக புலப்படவில்லை. ஆழ்மனதை துப்புறவு செய்யத் தெரியாத தொழிலாளியால் ஆன்மீக முன்னேற்றம் கொடுக்கவே முடியாது. துப்புறவுக்கு உடன்படாதவன் துப்பு கெட்டவன் என்பதில் ஐயமே இல்லை.


ஒவ்வொரு மனதிற்கும் ஒரு வீரியசக்தி உள்ளது. ஆழ் மனதின் வீரிய சக்தி, மிகமிக அதிகமாகும். உதாரணமாக புலால் சாப்பிடுவது தவறு என்கிற பதிவை மேல் மனதிலும் பதிவு செய்யலாம். நடுமனதிலும் பதிவு செய்யலாம், ஆழ்மனதிலும் பதிவு செய்யலாம். ஆழ்மனதில் பதிவு செய்தால் புலால் வாடை உண்டாக்கும் கசாப்புக் கடையைப் பார்த்தாலும் உடம்பு நடுக்கம் உண்டாகும், அருவருப்பு உண்டாகும். நடுமனதில் பதிவு செய்தால், புலால் சுவையானது தான் என்றாலும் மருத்துவர்களே சாப்பிடக்கூடாது என்கிறார்கள் வள்ளுவரும், திருமூலரும் கூட வெறுக்கிறார்கள் எனவே சாப்பிடக்கூடாது என ஒரு பாதுகாப்பு அணையை எழுப்பி உள்விவாதம் நடத்தி புலால் சாப்பிடுவதை வெறுப்பார்கள். மேல் மனதில் பதிவாகி இருந்தால், புலால் சப்பிடுவது தவறு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் உடம்பில் பலம் குறைவாகத் தெரிகிறது, உடலுழைப்பு செய்ய முடியவில்லை. எனவே சிறிது சிறிதாக விடுவதற்கு முயற்சி செய்கிறேன் என்பார்கள். இது தான் வாழ்வியல் நெறியாகும். சிலர் ஆடம்பரமாக வாழ்வதை ஆழ்மனப் பதிவாக்கி விடுவார்கள். இவர்களுக்கு வறுமை வந்தால் கூட கடன்வாங்கியாவது வாழ்ந்து விடத்துடித்து கெட்டுப்போவார்கள்.


ஒரு ஞானி நடந்து போகும் போது ஒரு வழிப்போக்கன் காலை மிதித்துவிடுகிறார், வழிப்போக்கன் தாறுமாறாக அடித்து மயக்கம் வந்து வீழ்ந்து கிடப்பது போல ஞானியை துன்பப்படுத்தி விட்டு செல்கிறான். அந்த வழியாக வந்த சீடர்க ஞானியின் நிலை தெரிந்து தண்ணீர் தெளித்து சுய நினைவுக்கு வர வைத்தார்கள். சுயநினைவு உள்ளதா? என சோதித்துப்பார்க்க குருவே உங்களுக்கு பணிவிடை செய்பவர்கள் யார் என்பது தெரிகிறதா? எனக் கேட்டார்கள். அதற்கு அந்த ஞானி என்னை அடித்துத் துன்புறுத்திய அதே கைகள்தான் பணிவிடை செய்கிறது என்றார். எதனால் இந்த பக்குவம் வந்தது என்றால் கொடியவனின் கொடுமைத்தனமும் தனது ஆழ்மனதில் புகாத வண்ணம் மேல்மனதிலேயே அந்த ஞானி வைத்துப் பழகி விட்டார். மறப்பது மன்னிப்பது மேல்மனதின் சிறப்பான குணமாகும், அழிப்பதும், ஆக்குவதும், ஆழ்மனதின் சிறப்பான குணமாகும்.


ஞானிகளின் ஆழ்மனதில் சாபங்கள் தங்கி இருக்கும். ஞானிகள் ஆழ்மனதை இரண்டு சந்தர்பத்தில் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஒன்று கடவுள் அருளை நிரப்பும் கூடமாக ஆழ்ந்து தவம் செய்யும் போது ஆழ்மனப்பதிவுகள் அதிகமாகும். இதுவே அருள் என்பதாகும். அடுத்து தனக்கும் தன்னை சார்ந்த சமூகத்திற்கும் இடையூறாக உள்ள கொடியவர்கள் அழிந்துபோக சாபமிட்டு அழிக்க ஆழ்மனதை பயன்படுத்துவார்கள்.


இறைவன் பலபேரை பரதேசி ஆக்கும் போது ஆழ்மனப்பதிவை அழித்துவிட்ட பிறகே ஆட்கொள்வார். பட்டினத்தாரின் ஆழ்மனதில் பணம் சம்பாதிக்கும் வெறி இருந்தது. அந்த வெறியை இறைவன் துடைத்தார். லீலாசுகரின் அடிமனதில் காமவெறி இருந்தது. இறைவன் துடைத்து ஞானியாக்கினார். கடவுள் தானே காமத்தைப் படைத்தார். பிறகு எதற்காக கடவுள் நெறிக்கு காமம் தடையாக உள்ளது? என்கிற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள், ஆன்மீக வாழ்விற்கு காமம் எந்த வகையிலும் தடையாக இருக்காது. ஆனாலும், காமத்தை கையாளும் போது, ஆழ்மனதில் உள்ள நல்ல பதிவுகளை விரட்டி விட்டு காமம் தஞ்சம் புகுந்துவிடும். அதன்பிறகு வெறிச்செயலாக மனிதன் மாறிவிடுவான். இது தான் தடையாக போய்விடுகிறது. மாறாக கயிற்றில் நடக்கிற சாகசவீரனைப் போல மனதை சாகசமாக்கி விளையாடத் தெரிந்து விட்டால் காமம் மனிதனை கட்டழிக்க முடியாது.


பல முன் கோபக்காரர்களைப் பார்த்திருக்கலாம். ஏன் அவர்கள் அருவருப்பாக நடந்து கொள்கிறார்கள் என்றால் அனைத்து எளிதான சம்பவங்களையும் அடிமனதில் பதிவு செய்து பழகிவிட்டார்கள். அதன்விளைவு அடிமனம் கொந்தளிப்பாகவே மாறிவிட்டது. நகைச்சுவையாக ஒரு சம்பவத்தைக் கூறுவார்கள். கேள்விப்பட்ட செய்தியைக் கூறுகிறோம். புலால் சாப்பிடுகிற ஒரு முன்கோபக்காரர் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். ஒரு சமயம் மெய்வழிச்சாலை ஆசிரமத்தில் கணக்கு தணிக்கை செய்ய வந்துள்ளார். அங்குள்ள ஆசிரமத்தார் இவர் புலால் சாப்பிடுபவர் என கருதி புலால் உணவு சமைத்து போட்டார்களாம். முங்கோபக்காரர் புரட்டாசி மாதத்தில் புலால் சாப்பிட மாட்டாராம். இதன் விளைவு ஆசிரமத்தில் புலால் உணவா! என எரிமலையாக வெடித்தாராம். உடனே ஆசிரமவாசிகள் இது சாதாரண உணவு அல்ல, மெய்வழி ஆண்டவர் இஸ்லாம் முறைப்படி ஓதி சமைத்த புலால் என்றார்களாம். உடனே இன்னும் கோபம் அதிகமாகி அசைவம் சமைத்ததே குற்றம். அதிலும் எச்சிலைத் துப்பி ஓதிய சமையலா? என கடிந்து கொண்டாராம். முன்கோபக்காரர்களுக்கு எதார்த்தமே வினையாக விபரீதமாகப் புலப்படும்.


பலரது வாழ்வு நிம்மதியாக வாழ முடியாததற்கு காரணம், ஆழ்மனதை பயன்படுத்த தெரியாமை தான் காரணம். அந்த அபாயகரமான ஆழ்மனதை பக்குவப்படுத்த ஆன்மீகம் மட்டுமே சிறந்த பாடமாக அமையும். வீட்டில் எந்த எந்த இடத்தில் எந்த எந்த பொருளை அடுக்குவது என்பது மட்டும் புரிந்து வைத்திருந்தால் போதாது. மேல் மனதில் வைக்க வேண்டிய பொருள்கள் எவை எவை! நடுமனதில் இருப்பது எவை எவை!, ஆழ்மனதில் இருக்க வேண்டியவை எவை என்பது அறிந்தால் மட்டுமே வாழ்வியல் சிறப்பாக இருக்கும். ரசத்தில் உப்பு போடவில்லை என்பதற்காக ராஜாத்தி போன்ற மனைவியை விரட்டிவிட்டு வீதியில் கிடப்பவர்கள் எராளம். வாழ்வியல் கெட்டு போவதற்கு உமது மனமே பிரதானக் காரணம், தொடர்ந்து படியுங்கள் வாழ்வியல் புனிதமாகும், நெறியான ஆன்மீகம் முறையாக வழிநடத்தும். தொடர்ந்து உங்கள் உணர்வில் மணம் பரப்புவோம். -

Tuesday, April 5, 2011

மனதின் இயல்பும் கையாளும் நுட்பமும்

மனதின் இயல்பும் கையாளும் நுட்பமும்

வழி தெரியாத ஊருக்கு பயணம் போகும் போது ஒரு வழிப்போக்கனிடம் வழி கேட்டால், இணக்கமான அன்போடு வழி காட்டுபவர்களும் உள்ளார்கள், சிலருக்கு நாம் கேட்கிற ஊர் தெரிந்திருந்தாலும் எமக்கு தெரியாது என்று கூறுபவர்களும் உள்ளார்கள். இப்படிப்பட்ட வித்தியாசமான மனிதர்கள் வாழ்க்கைத் தரம் அமைவதற்கு என்ன காரணம் என்பதை அறிவது தான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.


சிலருடைய வீடுகளில் சமையல் பாத்திரம் முதல் சாம்பிராணி பாட்டில் ஈறாக, படிக்கிற நூல்கள் முதல் துடைக்கிற துடைப்பம் வரை ஒரே இடத்தை குப்பையாக்கி வைத்தது போல வாழ்வார்கள். சிலபேர்கள் மட்டும், படிக்கிற நூல்கள் ஒருபுறம், பழமைவாய்ந்த பொருள்கள் ஒருபுறம் என அடுக்கி வைத்து வீட்டை அழகுபடுத்துவார்கள். இதே போன்று தான் நமது மனது என்கிற வீட்டை சுத்தமாக வைப்பதும், கண்ட கண்ட பொருட்களைச் சேர்த்து குப்பையாக்குவது அவரவது இயல்பாக இருப்பதால் உலகத்தில் பாவங்கள் அதிகரித்து பரிதாப மரணம் அடைகிற நோயாளிகளாக பலர் வாழ்கிறார்கள். பீரோவில் எதை வைக்க வேண்டும், அலமாரியில் எதை அடுக்க வேண்டும் என்கிற அனுபவம் இல்லாதவன் வாழ்வு குப்பையாவது போல, மேல் மனதில் எதை அடுக்க வேண்டும், நடுமனதில் எது வைப்பதை தடுக்க வேண்டும், ஆழ் மனதில் எதையெல்லாம் வைக்க வேண்டும் என்பதை போதிப்பது தான் ஆன்மீகத்தின் போதனையாகும்.


வள்ளுவர் கடவுள் வாழ்த்து வைக்கவே இல்லை என வாய் வக்கணையாக பேசும் வையகம் இது. வள்ளுவர் குறளை எந்த மனதில் வைப்பது எனத் தெரியாத மூடர்கள். வெளி மனதில் திருக்குறளைப் பதிய வைத்து தெருப் பொறுக்கிகளாக வாழ்நாள் முழுவதும் வடிகட்டிய பதராக வாழ்வியல் நடத்துவதை அன்றாடம் காண்கிறோம். நெறிப்படுத்தாத குறை வள்ளுவத்திடம் இல்லை, தறிகெட்ட மனிதனிடம் மனதில் அமைந்த சூது தான் காரணம். வள்ளுவம் வகைப்படுத்தி மானுட நெறியை வழங்கி இருக்கிறது.


கடவுள் வாழ்த்து முதலாக அறத்துப்பாலை மனிதன் தனது ஆழ்னிலை அடிமனதில் முதலில் பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக பொருட்பாலை மனிதன் தனது நடு மனதில் பதிவு செய்ய வேண்டும், காமத்துபாலை மனிதன் தனது மேல் மனதில் பதிவு செய்ய வேண்டும். இதுதான் முறையான ஆன்மீகப் பாடமாகும். காசு, பணம் வைக்க வேண்டிய பெட்டியில் காலணியை வைத்தவன் கதி போல, ஆழ்மனதில் காமத்தை வைத்துவிட்டு அறத்துப்பாலை மேல் மனதில் வைத்தால், அடுத்தவனுக்கு உபதேசம் செய்வதற்கு மட்டும் தான் திருக்குறள் பயன்படும். எமக்குத் தெரிந்த ஒருவருக்கு திருக்குறள் அத்தனையும் அத்துபடியாகத் தெரியும், தலைகீழாக கேட்டாலும் நிலைமாறாமல் ஒப்பிப்பார், ஆனால் தனிமனித ஒழுக்கம், அறவே இல்லாத, திருக்குறள் போதனைக்கு எதிர்மாறாக வாழும் சமுதாய உத்தமர். காரணம் என்ன? ஆழ்ந்து யோசித்தால் அவரது ஆழ்மனதில் காமமே ஆட்சி செய்கிறது. வெளிமனதில் திருக்குறள் மணம் வீசுகிறது. என்ன புண்ணியம்? காசு பணம் திரட்டவும், கடைத்தேறா வழிகாட்டவும், அக்கரை பச்சைதேடும் ஆவலான மாடுகளைப் போன்ற மடையர்கள் கூட்டத்தை சேர்க்கவும் திருக்குறள் பேராயுதமாக அன்னவருக்குப் பயன்படுகிறது. அது போகட்டும்.


மனம் என்பது மின்சாரம் மாதிரி, பயன்படுத்தும் விதத்தில் பலன்களை அள்ளிக் கொடுக்கும். மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் நமது உயிரையே குடித்துவிடும். அது போல ஆழ் மனதில் தவறான பதிவுகளை உண்டாக்கி விட்டால் நமது அழிவுக்கு அதுவே காரணமாகிவிடும். மனிதனை அழிப்பது வெளிப்புற காரணியே அல்ல, உள்ளே தவறாக பதிவு செய்யப்பட்ட, அதே சமயம் வைக்கக்கூடாத ஆழ்மன பதிவே தவறாளியாக தடம்புரண்டு விடுகிறது மனிதத் தன்மை.


ஆழ்மனம் என்பது ஆபத்து நிறைந்த களம் என்பதும் உண்மைதான். அங்கே ஆன்ம வாழ்வு தரும் அருளரசு செலுத்தும் ஆண்டவன் உறைவிடமும் அதுதான். காமவேட்கை வெகுவாக ஈர்க்கப்படும் இடமும் ஆழ்மனம் தான். தெரிந்தோ, தெரியாமலோ ஆழ்மனதில் படிந்த கறைகளைத் துடைப்பது தான் தியானமும் தவமும் ஆகும். ஆழ்மனதை ஆலயமாக வைத்திருப்பவர்களை அண்டி வாழும் போது ஆழ்மன கசடுகள் அப்புறப்படுத்தப்படும். திருக்குறளைப் படித்துவிட்டு அனைவருமே அறிவாளிகளாக வர முடியாததற்குக் காரணமே! ஆழ்மனதை துப்புறவு செய்யாமல் ஆழ்மனதின் களிம்புகள் அகற்றப்படாமல் எவ்வளவு தூரம் படித்து நிரப்பினாலும் பயன் விளையாது. திருக்குறளார் என்கிற சமுதாய உத்தமர் பட்டம் வாங்கலாமே தவிர, ஆன்மீக சம்மேளனப்பதவி அமையாது. அடிமாடுகளைத் திரட்டியது போல பல ஆன்மீகப் பயிலரங்குகள் ஆங்காங்கே அரங்கேறுகிறது. ஆனாலும், மனிதம் புனிதமாக பயனிப்பதாக புலப்படவில்லை. ஆழ்மனதை துப்புறவு செய்யத் தெரியாத தொழிலாளியால் ஆன்மீக முன்னேற்றம் கொடுக்கவே முடியாது. துப்புறவுக்கு உடன்படாதவன் துப்பு கெட்டவன் என்பதில் ஐயமே இல்லை.


ஒவ்வொரு மனதிற்கும் ஒரு வீரியசக்தி உள்ளது. ஆழ் மனதின் வீரிய சக்தி, மிகமிக அதிகமாகும். உதாரணமாக புலால் சாப்பிடுவது தவறு என்கிற பதிவை மேல் மனதிலும் பதிவு செய்யலாம். நடுமனதிலும் பதிவு செய்யலாம், ஆழ்மனதிலும் பதிவு செய்யலாம். ஆழ்மனதில் பதிவு செய்தால் புலால் வாடை உண்டாக்கும் கசாப்புக் கடையைப் பார்த்தாலும் உடம்பு நடுக்கம் உண்டாகும், அருவருப்பு உண்டாகும். நடுமனதில் பதிவு செய்தால், புலால் சுவையானது தான் என்றாலும் மருத்துவர்களே சாப்பிடக்கூடாது என்கிறார்கள் வள்ளுவரும், திருமூலரும் கூட வெறுக்கிறார்கள் எனவே சாப்பிடக்கூடாது என ஒரு பாதுகாப்பு அணையை எழுப்பி உள்விவாதம் நடத்தி புலால் சாப்பிடுவதை வெறுப்பார்கள். மேல் மனதில் பதிவாகி இருந்தால், புலால் சப்பிடுவது தவறு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் உடம்பில் பலம் குறைவாகத் தெரிகிறது, உடலுழைப்பு செய்ய முடியவில்லை. எனவே சிறிது சிறிதாக விடுவதற்கு முயற்சி செய்கிறேன் என்பார்கள். இது தான் வாழ்வியல் நெறியாகும். சிலர் ஆடம்பரமாக வாழ்வதை ஆழ்மனப் பதிவாக்கி விடுவார்கள். இவர்களுக்கு வறுமை வந்தால் கூட கடன்வாங்கியாவது வாழ்ந்து விடத்துடித்து கெட்டுப்போவார்கள்.


ஒரு ஞானி நடந்து போகும் போது ஒரு வழிப்போக்கன் காலை மிதித்துவிடுகிறார், வழிப்போக்கன் தாறுமாறாக அடித்து மயக்கம் வந்து வீழ்ந்து கிடப்பது போல ஞானியை துன்பப்படுத்தி விட்டு செல்கிறான். அந்த வழியாக வந்த சீடர்க ஞானியின் நிலை தெரிந்து தண்ணீர் தெளித்து சுய நினைவுக்கு வர வைத்தார்கள். சுயநினைவு உள்ளதா? என சோதித்துப்பார்க்க குருவே உங்களுக்கு பணிவிடை செய்பவர்கள் யார் என்பது தெரிகிறதா? எனக் கேட்டார்கள். அதற்கு அந்த ஞானி என்னை அடித்துத் துன்புறுத்திய அதே கைகள்தான் பணிவிடை செய்கிறது என்றார். எதனால் இந்த பக்குவம் வந்தது என்றால் கொடியவனின் கொடுமைத்தனமும் தனது ஆழ்மனதில் புகாத வண்ணம் மேல்மனதிலேயே அந்த ஞானி வைத்துப் பழகி விட்டார். மறப்பது மன்னிப்பது மேல்மனதின் சிறப்பான குணமாகும், அழிப்பதும், ஆக்குவதும், ஆழ்மனதின் சிறப்பான குணமாகும்.


ஞானிகளின் ஆழ்மனதில் சாபங்கள் தங்கி இருக்கும். ஞானிகள் ஆழ்மனதை இரண்டு சந்தர்பத்தில் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஒன்று கடவுள் அருளை நிரப்பும் கூடமாக ஆழ்ந்து தவம் செய்யும் போது ஆழ்மனப்பதிவுகள் அதிகமாகும். இதுவே அருள் என்பதாகும். அடுத்து தனக்கும் தன்னை சார்ந்த சமூகத்திற்கும் இடையூறாக உள்ள கொடியவர்கள் அழிந்துபோக சாபமிட்டு அழிக்க ஆழ்மனதை பயன்படுத்துவார்கள்.


இறைவன் பலபேரை பரதேசி ஆக்கும் போது ஆழ்மனப்பதிவை அழித்துவிட்ட பிறகே ஆட்கொள்வார். பட்டினத்தாரின் ஆழ்மனதில் பணம் சம்பாதிக்கும் வெறி இருந்தது. அந்த வெறியை இறைவன் துடைத்தார். லீலாசுகரின் அடிமனதில் காமவெறி இருந்தது. இறைவன் துடைத்து ஞானியாக்கினார். கடவுள் தானே காமத்தைப் படைத்தார். பிறகு எதற்காக கடவுள் நெறிக்கு காமம் தடையாக உள்ளது? என்கிற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள், ஆன்மீக வாழ்விற்கு காமம் எந்த வகையிலும் தடையாக இருக்காது. ஆனாலும், காமத்தை கையாளும் போது, ஆழ்மனதில் உள்ள நல்ல பதிவுகளை விரட்டி விட்டு காமம் தஞ்சம் புகுந்துவிடும். அதன்பிறகு வெறிச்செயலாக மனிதன் மாறிவிடுவான். இது தான் தடையாக போய்விடுகிறது. மாறாக கயிற்றில் நடக்கிற சாகசவீரனைப் போல மனதை சாகசமாக்கி விளையாடத் தெரிந்து விட்டால் காமம் மனிதனை கட்டழிக்க முடியாது.


பல முன் கோபக்காரர்களைப் பார்த்திருக்கலாம். ஏன் அவர்கள் அருவருப்பாக நடந்து கொள்கிறார்கள் என்றால் அனைத்து எளிதான சம்பவங்களையும் அடிமனதில் பதிவு செய்து பழகிவிட்டார்கள். அதன்விளைவு அடிமனம் கொந்தளிப்பாகவே மாறிவிட்டது. நகைச்சுவையாக ஒரு சம்பவத்தைக் கூறுவார்கள். கேள்விப்பட்ட செய்தியைக் கூறுகிறோம். புலால் சாப்பிடுகிற ஒரு முன்கோபக்காரர் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். ஒரு சமயம் மெய்வழிச்சாலை ஆசிரமத்தில் கணக்கு தணிக்கை செய்ய வந்துள்ளார். அங்குள்ள ஆசிரமத்தார் இவர் புலால் சாப்பிடுபவர் என கருதி புலால் உணவு சமைத்து போட்டார்களாம். முங்கோபக்காரர் புரட்டாசி மாதத்தில் புலால் சாப்பிட மாட்டாராம். இதன் விளைவு ஆசிரமத்தில் புலால் உணவா! என எரிமலையாக வெடித்தாராம். உடனே ஆசிரமவாசிகள் இது சாதாரண உணவு அல்ல, மெய்வழி ஆண்டவர் இஸ்லாம் முறைப்படி ஓதி சமைத்த புலால் என்றார்களாம். உடனே இன்னும் கோபம் அதிகமாகி அசைவம் சமைத்ததே குற்றம். அதிலும் எச்சிலைத் துப்பி ஓதிய சமையலா? என கடிந்து கொண்டாராம். முன்கோபக்காரர்களுக்கு எதார்த்தமே வினையாக விபரீதமாகப் புலப்படும்.


பலரது வாழ்வு நிம்மதியாக வாழ முடியாததற்கு காரணம், ஆழ்மனதை பயன்படுத்த தெரியாமை தான் காரணம். அந்த அபாயகரமான ஆழ்மனதை பக்குவப்படுத்த ஆன்மீகம் மட்டுமே சிறந்த பாடமாக அமையும். வீட்டில் எந்த எந்த இடத்தில் எந்த எந்த பொருளை அடுக்குவது என்பது மட்டும் புரிந்து வைத்திருந்தால் போதாது. மேல் மனதில் வைக்க வேண்டிய பொருள்கள் எவை எவை! நடுமனதில் இருப்பது எவை எவை!, ஆழ்மனதில் இருக்க வேண்டியவை எவை என்பது அறிந்தால் மட்டுமே வாழ்வியல் சிறப்பாக இருக்கும். ரசத்தில் உப்பு போடவில்லை என்பதற்காக ராஜாத்தி போன்ற மனைவியை விரட்டிவிட்டு வீதியில் கிடப்பவர்கள் எராளம். வாழ்வியல் கெட்டு போவதற்கு உமது மனமே பிரதானக் காரணம், தொடர்ந்து படியுங்கள் வாழ்வியல் புனிதமாகும், நெறியான ஆன்மீகம் முறையாக வழிநடத்தும். தொடர்ந்து உங்கள் உணர்வில் மணம் பரப்புவோம். -


--------- தொடரும்..............

Monday, April 4, 2011

இதயத்துக்குள் மின்சாரத் தடங்கல்!

இதயத்துக்குள் மின்சாரத் தடங்கல்!
- சிக்கல் தீர்க்கும் புதிய தொழில்நுட்பம்
தாயின் கருவறையில் இருக்கும்போதே, இதயத் துடிப்பு ஆரம்பிக்கிறது.



நம் இதயம் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் முறை துடிக்கிறது. அதாவது, நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை. அப்படி ஓய்வே இல்லாமல் துடிப்பதால்தான், ரத்தமும் ஆக்சிஜனும் உடல் முழுமைக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. இதயம் தானாகத் துடிப்பது இல்லை, இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவை. அது இல்லை என்றால், இதயம் துடிப்பது நின்றுவிடும். இதயத்தை இயங்கவைக்கும் மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் வலது அறையில் உள்ளது. இந்த அறையில் உள்ள சைனஸ் நோட் என்பதுதான், இதயம் இயங்கத் தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்த 'சைனஸ் நோட்’டை மனிதனின் ஜெனரேட்டர் என்று சொல்லலாம். இதில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பு குறைகிறது. சிலருக்கு இதயத்தின் பல பகுதிகளில் இருந்தும் மின் சக்தி உற்பத்தியாகும். இதனால் திடீர் திடீரென்று இதயத் துடிப்பு அதிகரித்து, மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு!
சென்னை அப்போலோ மருத்துவமனையின் எலக்ட்ரோ பிசியாலஜி டாக்டர் ஏ.எம்.கார்த்திகேசனிடம் பேசினோம். ''இதயம் என்பது மின் உற்பத்தி மூலமும், ரத்தக் குழாய்களில் ஊட்டச் சத்துகள் இதயத் தசைக்குக் கொண்டுசெல்லப்படுவதன் மூலமும் இயங்குகிறது. இதயத்தில் அடைப்புகள் ஏற்படும்போது, ஊட்டச் சத்து கொண்டுசெல்லப்படுவது பாதிக்கப்பட்டு, இதயம் செயல் இழக்கிறது. இதயம் துடிக்கத் தேவையான மின் சக்தி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதும், மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்தப் பிரச்னைக்கு ஆளானாலும், இதுபற்றி போதிய விழிப்பு உணர்வு இன்னமும் ஏற்படவில்லை.


இதயம் துடிக்கத் தேவையான மின் சக்தி, முதலில் வலது புறம் உள்ள மேல் அறையில் உற்பத்தியாகி, இடது புறம் மேல் அறைக்கு சென்று, அங்கிருந்து கீழ் அறைகளுக்குப் பாய்கிறது. இந்த சைனஸ் நோட் எப்போதும் ஒரே அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யாது. மனித உடலின் செயல்பாட்டுக்கு ஏற்ப உற்பத்தி மாறுபடும். அதாவது தூங்கும்போது குறைவாகவும், ஓடுதல், மாடிப் படி ஏறுதல், பயம் ஏற்படும்போது என சமயங்களில் அதிகமாகவும் உற்பத்தியாகி இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்கிறது.
இந்த இதயத் துடிப்பில் ஏற்படும் மாறுபாட்டை அரித்​மியா என்போம். இதில் பாதிப்பு ஏற்பட்டு சாதாரண நேரத்திலும் இதயம் வேகமாகத் துடிப்பதை, டாக்கி அரித்மியா என்போம். அதாவது, இதயத்தின் எந்த ஒரு திசுவில் இருந்தும் தேவை இல்லாமல் மின்சாரம் உற்பத்தி​யாகத் தொடங்கிவிடுவது. மேல் பகுதியில் இப்படி உற்பத்தியானால், உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், திடீர் படபடப்பு, வியத்துக்கொட்டுதல், மயக்கம், மூச்சு வாங்குதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். இதயக் கீழ் அறைகளில் மின் உற்பத்தி ஏற்படுமானால், உயிருக்கு ஆபத்து நேரிடும்.
இந்த அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டால், சிலர் மருத்துவரை அணுகி மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், மருந்து மாத்திரைகளால் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு அளிக்க முடியாது. நாளுக்கு நாள் பிரச்னையின் தீவிரம் அதிகரிக்கும்போது, ஸ்ட்ராங் டோஸ் எடுத்துக்கொள்வார்கள். வாழ்நாள் இறுதி வரை மருந்து, மாத்திரைகள் எடுக்கவேண்டும்.
இந்த பிரச்னை கருவில் இருக்கும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். வயதானவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வர வாய்ப்பு உள்ளது. இது தவிர உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய வால்வு பிரச்னை, தைராய்டு, ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்களுக்கும், புகையிலை, மதுப் பழக்கம் உள்ளவர்​களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். இதை ஈ.சி.ஜி. எடுப்பதன் மூலம் கண்டுபிடிக்கலாம். இதில் தெரியவில்லை என்றால், எலக்ட்ரோ பிசியாலஜி ஸ்டடி மூலம் கண்டறியலாம்.
இதயத்தின் எந்தப் பகுதியில் தேவை இல்லாத மின் சக்தி உற்பத்தியாகிறது என்பதைக் கண்டறிந்து, குறிப்பிட்ட திசுவை ரேடியோ ஃப்ரீக்வன்ஸி எனர்ஜி மூலம் அழித்துவிட முடியும். 1 மி.மீ. அளவுக்கு அந்தத் திசுவை அழிக்கும்போது, கூடுதல் மின் உற்பத்தி தடுக்கப்படுகிறது. இதற்காக 3டி எலக்ட்ரோ அனாடமிகல் மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். தற்போது கார்ட்டோ 3 தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன் முறையாகப் பயன்படுத்துகிறோம். இந்தியா​வில் ஒன்றிரண்டு இடங்களில்தான் இந்தத் தொழில்நுட்பம் உள்ளது.
இதன்படி, இதயத்தின் நான்கு அறைகளும் தனித் தனியாக மேப்பிங் செய்யப்படும். இதயத்தைச் சுற்றி காந்த புலன்கள் உருவாக்கப்படும். இந்தத் தொழில்நுட்பம் ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு, எந்த இடத்தில் பிரச்னை உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிடும். கால் தொடையில் உள்ள ரத்தக் குழாய் வழியாக ஒயர் போன்ற ஒன்றை உள்ளேவிடுவோம். (ஆஞ்ஜியோகிராம் செய்யப்படுவதுபோல) அந்த ஒயரின் முனையும் காந்தத் தன்மையுடன் இருக்கும். அது பிரச்னைக்குரிய இடத்தில் உள்ள செல்லை அழித்துவிடும். இதனால் வலி இல்லை, தழும்புகள் இல்லை, அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே வீட்டுக்குச் செல்லலாம். இதனால், ஆயுள் முழுக்க மருந்து மாத்திரை சாப்பிடும் தொல்லையில் இருந்தும் விடுபட​லாம்!'' என்கிறார்.
கவனமாக இருப்போம்!
நன்றி - பா.பிரவீன்குமார்

Friday, April 1, 2011

மனதின் இயல்பும் கையாளும் நுட்பமும்

மனதின் இயல்பும் கையாளும் நுட்பமும்

வழி தெரியாத ஊருக்கு பயணம் போகும் போது ஒரு வழிப்போக்கனிடம் வழி கேட்டால், இணக்கமான அன்போடு வழி காட்டுபவர்களும் உள்ளார்கள், சிலருக்கு நாம் கேட்கிற ஊர் தெரிந்திருந்தாலும் எமக்கு தெரியாது என்று கூறுபவர்களும் உள்ளார்கள். இப்படிப்பட்ட வித்தியாசமான மனிதர்கள் வாழ்க்கைத் தரம் அமைவதற்கு என்ன காரணம் என்பதை அறிவது தான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.


சிலருடைய வீடுகளில் சமையல் பாத்திரம் முதல் சாம்பிராணி பாட்டில் ஈறாக, படிக்கிற நூல்கள் முதல் துடைக்கிற துடைப்பம் வரை ஒரே இடத்தை குப்பையாக்கி வைத்தது போல வாழ்வார்கள். சிலபேர்கள் மட்டும், படிக்கிற நூல்கள் ஒருபுறம், பழமைவாய்ந்த பொருள்கள் ஒருபுறம் என அடுக்கி வைத்து வீட்டை அழகுபடுத்துவார்கள். இதே போன்று தான் நமது மனது என்கிற வீட்டை சுத்தமாக வைப்பதும், கண்ட கண்ட பொருட்களைச் சேர்த்து குப்பையாக்குவது அவரவது இயல்பாக இருப்பதால் உலகத்தில் பாவங்கள் அதிகரித்து பரிதாப மரணம் அடைகிற நோயாளிகளாக பலர் வாழ்கிறார்கள். பீரோவில் எதை வைக்க வேண்டும், அலமாரியில் எதை அடுக்க வேண்டும் என்கிற அனுபவம் இல்லாதவன் வாழ்வு குப்பையாவது போல, மேல் மனதில் எதை அடுக்க வேண்டும், நடுமனதில் எது வைப்பதை தடுக்க வேண்டும், ஆழ் மனதில் எதையெல்லாம் வைக்க வேண்டும் என்பதை போதிப்பது தான் ஆன்மீகத்தின் போதனையாகும்.


வள்ளுவர் கடவுள் வாழ்த்து வைக்கவே இல்லை என வாய் வக்கணையாக பேசும் வையகம் இது. வள்ளுவர் குறளை எந்த மனதில் வைப்பது எனத் தெரியாத மூடர்கள். வெளி மனதில் திருக்குறளைப் பதிய வைத்து தெருப் பொறுக்கிகளாக வாழ்நாள் முழுவதும் வடிகட்டிய பதராக வாழ்வியல் நடத்துவதை அன்றாடம் காண்கிறோம். நெறிப்படுத்தாத குறை வள்ளுவத்திடம் இல்லை, தறிகெட்ட மனிதனிடம் மனதில் அமைந்த சூது தான் காரணம். வள்ளுவம் வகைப்படுத்தி மானுட நெறியை வழங்கி இருக்கிறது.


கடவுள் வாழ்த்து முதலாக அறத்துப்பாலை மனிதன் தனது ஆழ்னிலை அடிமனதில் முதலில் பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக பொருட்பாலை மனிதன் தனது நடு மனதில் பதிவு செய்ய வேண்டும், காமத்துபாலை மனிதன் தனது மேல் மனதில் பதிவு செய்ய வேண்டும். இதுதான் முறையான ஆன்மீகப் பாடமாகும். காசு, பணம் வைக்க வேண்டிய பெட்டியில் காலணியை வைத்தவன் கதி போல, ஆழ்மனதில் காமத்தை வைத்துவிட்டு அறத்துப்பாலை மேல் மனதில் வைத்தால், அடுத்தவனுக்கு உபதேசம் செய்வதற்கு மட்டும் தான் திருக்குறள் பயன்படும். எமக்குத் தெரிந்த ஒருவருக்கு திருக்குறள் அத்தனையும் அத்துபடியாகத் தெரியும், தலைகீழாக கேட்டாலும் நிலைமாறாமல் ஒப்பிப்பார், ஆனால் தனிமனித ஒழுக்கம், அறவே இல்லாத, திருக்குறள் போதனைக்கு எதிர்மாறாக வாழும் சமுதாய உத்தமர். காரணம் என்ன? ஆழ்ந்து யோசித்தால் அவரது ஆழ்மனதில் காமமே ஆட்சி செய்கிறது. வெளிமனதில் திருக்குறள் மணம் வீசுகிறது. என்ன புண்ணியம்? காசு பணம் திரட்டவும், கடைத்தேறா வழிகாட்டவும், அக்கரை பச்சைதேடும் ஆவலான மாடுகளைப் போன்ற மடையர்கள் கூட்டத்தை சேர்க்கவும் திருக்குறள் பேராயுதமாக அன்னவருக்குப் பயன்படுகிறது. அது போகட்டும்.


மனம் என்பது மின்சாரம் மாதிரி, பயன்படுத்தும் விதத்தில் பலன்களை அள்ளிக் கொடுக்கும். மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் நமது உயிரையே குடித்துவிடும். அது போல ஆழ் மனதில் தவறான பதிவுகளை உண்டாக்கி விட்டால் நமது அழிவுக்கு அதுவே காரணமாகிவிடும். மனிதனை அழிப்பது வெளிப்புற காரணியே அல்ல, உள்ளே தவறாக பதிவு செய்யப்பட்ட, அதே சமயம் வைக்கக்கூடாத ஆழ்மன பதிவே தவறாளியாக தடம்புரண்டு விடுகிறது மனிதத் தன்மை.


ஆழ்மனம் என்பது ஆபத்து நிறைந்த களம் என்பதும் உண்மைதான். அங்கே ஆன்ம வாழ்வு தரும் அருளரசு செலுத்தும் ஆண்டவன் உறைவிடமும் அதுதான். காமவேட்கை வெகுவாக ஈர்க்கப்படும் இடமும் ஆழ்மனம் தான். தெரிந்தோ, தெரியாமலோ ஆழ்மனதில் படிந்த கறைகளைத் துடைப்பது தான் தியானமும் தவமும் ஆகும். ஆழ்மனதை ஆலயமாக வைத்திருப்பவர்களை அண்டி வாழும் போது ஆழ்மன கசடுகள் அப்புறப்படுத்தப்படும். திருக்குறளைப் படித்துவிட்டு அனைவருமே அறிவாளிகளாக வர முடியாததற்குக் காரணமே! ஆழ்மனதை துப்புறவு செய்யாமல் ஆழ்மனதின் களிம்புகள் அகற்றப்படாமல் எவ்வளவு தூரம் படித்து நிரப்பினாலும் பயன் விளையாது. திருக்குறளார் என்கிற சமுதாய உத்தமர் பட்டம் வாங்கலாமே தவிர, ஆன்மீக சம்மேளனப்பதவி அமையாது. அடிமாடுகளைத் திரட்டியது போல பல ஆன்மீகப் பயிலரங்குகள் ஆங்காங்கே அரங்கேறுகிறது. ஆனாலும், மனிதம் புனிதமாக பயனிப்பதாக புலப்படவில்லை. ஆழ்மனதை துப்புறவு செய்யத் தெரியாத தொழிலாளியால் ஆன்மீக முன்னேற்றம் கொடுக்கவே முடியாது. துப்புறவுக்கு உடன்படாதவன் துப்பு கெட்டவன் என்பதில் ஐயமே இல்லை.


ஒவ்வொரு மனதிற்கும் ஒரு வீரியசக்தி உள்ளது. ஆழ் மனதின் வீரிய சக்தி, மிகமிக அதிகமாகும். உதாரணமாக புலால் சாப்பிடுவது தவறு என்கிற பதிவை மேல் மனதிலும் பதிவு செய்யலாம். நடுமனதிலும் பதிவு செய்யலாம், ஆழ்மனதிலும் பதிவு செய்யலாம். ஆழ்மனதில் பதிவு செய்தால் புலால் வாடை உண்டாக்கும் கசாப்புக் கடையைப் பார்த்தாலும் உடம்பு நடுக்கம் உண்டாகும், அருவருப்பு உண்டாகும். நடுமனதில் பதிவு செய்தால், புலால் சுவையானது தான் என்றாலும் மருத்துவர்களே சாப்பிடக்கூடாது என்கிறார்கள் வள்ளுவரும், திருமூலரும் கூட வெறுக்கிறார்கள் எனவே சாப்பிடக்கூடாது என ஒரு பாதுகாப்பு அணையை எழுப்பி உள்விவாதம் நடத்தி புலால் சாப்பிடுவதை வெறுப்பார்கள். மேல் மனதில் பதிவாகி இருந்தால், புலால் சப்பிடுவது தவறு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் உடம்பில் பலம் குறைவாகத் தெரிகிறது, உடலுழைப்பு செய்ய முடியவில்லை. எனவே சிறிது சிறிதாக விடுவதற்கு முயற்சி செய்கிறேன் என்பார்கள். இது தான் வாழ்வியல் நெறியாகும். சிலர் ஆடம்பரமாக வாழ்வதை ஆழ்மனப் பதிவாக்கி விடுவார்கள். இவர்களுக்கு வறுமை வந்தால் கூட கடன்வாங்கியாவது வாழ்ந்து விடத்துடித்து கெட்டுப்போவார்கள்.


ஒரு ஞானி நடந்து போகும் போது ஒரு வழிப்போக்கன் காலை மிதித்துவிடுகிறார், வழிப்போக்கன் தாறுமாறாக அடித்து மயக்கம் வந்து வீழ்ந்து கிடப்பது போல ஞானியை துன்பப்படுத்தி விட்டு செல்கிறான். அந்த வழியாக வந்த சீடர்க ஞானியின் நிலை தெரிந்து தண்ணீர் தெளித்து சுய நினைவுக்கு வர வைத்தார்கள். சுயநினைவு உள்ளதா? என சோதித்துப்பார்க்க குருவே உங்களுக்கு பணிவிடை செய்பவர்கள் யார் என்பது தெரிகிறதா? எனக் கேட்டார்கள். அதற்கு அந்த ஞானி என்னை அடித்துத் துன்புறுத்திய அதே கைகள்தான் பணிவிடை செய்கிறது என்றார். எதனால் இந்த பக்குவம் வந்தது என்றால் கொடியவனின் கொடுமைத்தனமும் தனது ஆழ்மனதில் புகாத வண்ணம் மேல்மனதிலேயே அந்த ஞானி வைத்துப் பழகி விட்டார். மறப்பது மன்னிப்பது மேல்மனதின் சிறப்பான குணமாகும், அழிப்பதும், ஆக்குவதும், ஆழ்மனதின் சிறப்பான குணமாகும்.


ஞானிகளின் ஆழ்மனதில் சாபங்கள் தங்கி இருக்கும். ஞானிகள் ஆழ்மனதை இரண்டு சந்தர்பத்தில் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஒன்று கடவுள் அருளை நிரப்பும் கூடமாக ஆழ்ந்து தவம் செய்யும் போது ஆழ்மனப்பதிவுகள் அதிகமாகும். இதுவே அருள் என்பதாகும். அடுத்து தனக்கும் தன்னை சார்ந்த சமூகத்திற்கும் இடையூறாக உள்ள கொடியவர்கள் அழிந்துபோக சாபமிட்டு அழிக்க ஆழ்மனதை பயன்படுத்துவார்கள்.


இறைவன் பலபேரை பரதேசி ஆக்கும் போது ஆழ்மனப்பதிவை அழித்துவிட்ட பிறகே ஆட்கொள்வார். பட்டினத்தாரின் ஆழ்மனதில் பணம் சம்பாதிக்கும் வெறி இருந்தது. அந்த வெறியை இறைவன் துடைத்தார். லீலாசுகரின் அடிமனதில் காமவெறி இருந்தது. இறைவன் துடைத்து ஞானியாக்கினார். கடவுள் தானே காமத்தைப் படைத்தார். பிறகு எதற்காக கடவுள் நெறிக்கு காமம் தடையாக உள்ளது? என்கிற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள், ஆன்மீக வாழ்விற்கு காமம் எந்த வகையிலும் தடையாக இருக்காது. ஆனாலும், காமத்தை கையாளும் போது, ஆழ்மனதில் உள்ள நல்ல பதிவுகளை விரட்டி விட்டு காமம் தஞ்சம் புகுந்துவிடும். அதன்பிறகு வெறிச்செயலாக மனிதன் மாறிவிடுவான். இது தான் தடையாக போய்விடுகிறது. மாறாக கயிற்றில் நடக்கிற சாகசவீரனைப் போல மனதை சாகசமாக்கி விளையாடத் தெரிந்து விட்டால் காமம் மனிதனை கட்டழிக்க முடியாது.


பல முன் கோபக்காரர்களைப் பார்த்திருக்கலாம். ஏன் அவர்கள் அருவருப்பாக நடந்து கொள்கிறார்கள் என்றால் அனைத்து எளிதான சம்பவங்களையும் அடிமனதில் பதிவு செய்து பழகிவிட்டார்கள். அதன்விளைவு அடிமனம் கொந்தளிப்பாகவே மாறிவிட்டது. நகைச்சுவையாக ஒரு சம்பவத்தைக் கூறுவார்கள். கேள்விப்பட்ட செய்தியைக் கூறுகிறோம். புலால் சாப்பிடுகிற ஒரு முன்கோபக்காரர் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். ஒரு சமயம் மெய்வழிச்சாலை ஆசிரமத்தில் கணக்கு தணிக்கை செய்ய வந்துள்ளார். அங்குள்ள ஆசிரமத்தார் இவர் புலால் சாப்பிடுபவர் என கருதி புலால் உணவு சமைத்து போட்டார்களாம். முங்கோபக்காரர் புரட்டாசி மாதத்தில் புலால் சாப்பிட மாட்டாராம். இதன் விளைவு ஆசிரமத்தில் புலால் உணவா! என எரிமலையாக வெடித்தாராம். உடனே ஆசிரமவாசிகள் இது சாதாரண உணவு அல்ல, மெய்வழி ஆண்டவர் இஸ்லாம் முறைப்படி ஓதி சமைத்த புலால் என்றார்களாம். உடனே இன்னும் கோபம் அதிகமாகி அசைவம் சமைத்ததே குற்றம். அதிலும் எச்சிலைத் துப்பி ஓதிய சமையலா? என கடிந்து கொண்டாராம். முன்கோபக்காரர்களுக்கு எதார்த்தமே வினையாக விபரீதமாகப் புலப்படும்.


பலரது வாழ்வு நிம்மதியாக வாழ முடியாததற்கு காரணம், ஆழ்மனதை பயன்படுத்த தெரியாமை தான் காரணம். அந்த அபாயகரமான ஆழ்மனதை பக்குவப்படுத்த ஆன்மீகம் மட்டுமே சிறந்த பாடமாக அமையும். வீட்டில் எந்த எந்த இடத்தில் எந்த எந்த பொருளை அடுக்குவது என்பது மட்டும் புரிந்து வைத்திருந்தால் போதாது. மேல் மனதில் வைக்க வேண்டிய பொருள்கள் எவை எவை! நடுமனதில் இருப்பது எவை எவை!, ஆழ்மனதில் இருக்க வேண்டியவை எவை என்பது அறிந்தால் மட்டுமே வாழ்வியல் சிறப்பாக இருக்கும். ரசத்தில் உப்பு போடவில்லை என்பதற்காக ராஜாத்தி போன்ற மனைவியை விரட்டிவிட்டு வீதியில் கிடப்பவர்கள் எராளம். வாழ்வியல் கெட்டு போவதற்கு உமது மனமே பிரதானக் காரணம், தொடர்ந்து படியுங்கள் வாழ்வியல் புனிதமாகும், நெறியான ஆன்மீகம் முறையாக வழிநடத்தும். தொடர்ந்து உங்கள் உணர்வில் மணம் பரப்புவோம். -


--------- தொடரும்..............

உணவை உண்ணும் முறை

உணவை உண்ணும் முறை:



மென்று சாப்பிடுதல் :

தேவையான அளவு உணவை நன்றாக மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடுவது முறை. கடினமான உணவை நீர்த்தன்மையாக்கி உட்செலுத்த எச்சில் உதவுகிறது. மென்று சாப்பிடும்போது உணவோடு எச்சில் சேருகிறது. வெளியிலிருந்து வரக்கூடிய உணவு உள்ளே வந்து கலப்பதற்கு, உணவோடு உணவு சேருவதற்கு எச்சில் உதவியாக இருக்கிறது.



கடைபிடிக்க வேண்டியவை :

பழக்கமற்ற உணவை உண்பது, காலம் தவறி உண்பது, அளவு மீறியும் முறை மாறியும் உண்பது கூடாது. பசித்தவர்கள் முன்னிலையிலும் உணவு உண்ணக் கூடாது. பசித்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் முன்னிலையில் உண்பதால் அவர்களது பார்வையில் உள்ள விஷம் நான் உண்ணும் உணவையும் விசமாக்கும். அத்தகைய உணவு உள்ளே போய் குடற்புண்ணை உண்டு பண்டும்.



உணவு உண்டவுடனேயே சைக்கிளில் பயணம் செய்வதோ, வேகமாக ஓடுவதோ, கடினமான வேலை செய்வதோ, ஆண் பெண் உடலிணைப்பு கொள்வதோ, நீச்சல் அடிப்பதோ கூடாது.



திருமணமான வாலிபர்கள் உண்டவுடன் அதவாது உணவு செரிமானம் ஆகுவதற்கு முன் உடலுறவு கொள்வதாலும், உண்டவுடன் உறங்குவதும், வயற்றுப்புண்ணை( Peptic Ulcer ) உண்டாக்கும். அது குன்மம் என்ற நோயாக வழங்கப் பெறுகின்றது.



உண்ணும்போது செய்யக் கூடாதவை :



உணவு உண்ணும் பொது பேசுவது, சிரிப்பது, உணவை உருண்டையாகப் பிடிப்பது, சிந்துவது, ஒரு விரலை நீக்கிக் கொண்டு உண்பது, மயிர், நரம்பு, எலும்பு, இறந்துபட்ட உயிர்கள் உள்ள உணவை உண்பது, பருகுவதற்காக வைத்துள்ள நீரில் எச்சில் உமிழ்வது ஆகியவை கூடாதவை.



வாய் நாற்றம் :

சில அன்பர்கள் வயிறு கோளறு காரணமாக வாயில் கொஞ்சம் துர்நாற்றம் வீசும். பக்கத்தில் நெருங்குபவர்கள் அருவருப்பு கொள்வார்கள். இவர்கள் போதிய கவனம் எடுத்துகொள்ள வேண்டும். பலரோடு நெருங்கி வார்த்தையாட முடியாது. துர்நாற்றம் வீசுவதற்கு என்ன காரணம் என்றால் பல்லில் இருக்கக்கூடிய எனாமல் கெட்டுப் போகிற இடத்திலிருந்து ஒரு திரவம் வர ஆரம்பிக்கும். அந்தத் திரவம் உணவுப் பொருட்களோடு சேர்ந்து துர்நாற்றதை ஏற்படுதுகிறது.



அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும். சாப்பிட்ட உடனே வாயைக் கொப்பளித்துவிட்டு, பருக்கை முதலியன பல்லிடுக்கில் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த இனிப்பு சாப்பிட்டாலும் அது பல்லில் நீண்ட நேரம் தேங்கி நின்றால் எனாமல் போய்விடும். இனிப்பைச் சாப்பிட்ட உடனேயே வாய்க் கொப்பளிக்க வேண்டும். காபி சாப்பிட்டுவிட்டு அப்படியே விட்டுவிடாமல், உடனடியாக பல்லிலிருந்து அந்த இனிப்பை நீக்கிவிட வேண்டும். அது அமிலம்போல அரித்து அரித்து எனாமலை எடுத்துவிடும். இரவில் படுக்கப் போகும் போது நன்றாகப் பல் தேய்த்து வாய்க் கொப்பளித்து விட்டுப் படுக்கப் போக வேண்டும்.



தண்ணீர் :

தண்ணீரைக் குனிந்து குடிப்பதோ, அண்ணாந்து கொண்டு மடமடவென்று(வெடுக்கு வெடுக்கென்று) குடிக்கக் கூடாது. தண்ணீர் உள்ளே போகும்போது இறங்குகிற இடங்களில் உள்ள காற்று சமப்பட(Adjust) வேண்டும். அதற்காக நாம் கொஞ்ச நேரம் கொடுத்தால் தான் நல்லது. அதற்காக ஒவ்வொரு விழுங்காக(Sip) சாப்பிட வேண்டும். "உணவைக் குடி, நீரை உண்" என்பது முதுமொழி.



மலச்சிக்கல் :

சிலருக்கு மலச்சிக்கல் இருப்பதுண்டு. மைதா போன்ற மாவுப் பொருட்களை அதிகமாக உண்பதாலும் மலச்சிக்கல் உண்டாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவு உணவைச் சற்றுக் குறைத்துச் சாப்பிட வேண்டும். கீரை சாப்பிட வேண்டும். தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர வேண்டும். உடற்பயிற்சி செய்து வர வேண்டும்