Thursday, July 28, 2011

அன்பே சிவம்

அன்பே சிவம்



குற்றம் செய்யினும் குணமாக கொண்டு

அற்றம் தவிர்க்கும் நம் அப்பர் பதத்திற்கே

அபயம்! அபயம்!! அபயம்!!!


ஆத்மாவாகிய பிரம்மத்திற்கு நான்கு நிலைகள் உள்ளன்...


1. விழிப்பு நிலை - சாக்கிரம்

2. சொப்பன நிலை - கனவு

3. சுழுத்தி நிலை - நித்திரை

4. துரியநிலை - தன்னுடைய சுயநிலையாகிய ஆன்மா


துரிய நிலையில் உள்ள ஆத்மாவுக்கு மற்ற மூன்று நிலைகளும் சொப்பன நிலையாகும்.


இந்த மூன்று நிலைக்குள் உலகம் முழுவதும் அகப்பட்டுள்ளது. ஆகவே எல்லாம் பிரம்மம்.


பிரம்மம் - அத்மா - பிராணன் - கடவுள்


அத்மாவே பிராணனாகவும், மனமாகவும், புத்தியாகவும், சித்தமாகவும், அகங்காரமாகவும், பஞ்சேந்திரியங்களாகவும்,

இவைகள் அனுபவிக்கும் உலகங்களாகவும் ஆகின்றது.


மனம் நான்கு விதமாக திகழ்கின்றது.


1. பஞ்சேந்திரியங்களோடு வியாபாரத்தில் ஈடுபடும் மனம்.

[பஞ்ச இந்திரியங்கள் - கண், காது, மூக்கு, வாய், மெய்]


2. மனத்தை அடக்கியாளும் புத்தி


3. எப்பொருளையும் தனதாகக் கொள்ளும் அகங்காரம்.


4. அதன் சுத்த நிலையாகிய சித்தம்


இச்சித்தம் தான் இதயத்தில் பிராணனின் உறைவிடம்.


1. காற்றாடி விடுபவன் நூலைப்பற்றியிருப்பது போலும்,


2. மூலையில் மாடு கயிற்றினால் கட்டப்பட்டது போலும்,


3. தாயில் முந்தாணியைப் பிடித்துக் கொண்டே செல்லும் குழந்தை போலும் பிராணனும் மனமும் இணைக்கப்பட்டிருக்கின்றன.


பிராணன் மனதை தாய்போல காக்கிறது.


விழிப்பு நேரத்தில் குழந்தையாகிய மனதை இந்திரியங்களோடு விளையாட விடுகிறாள்.


அந்திப்பொழுதானதும் மனதை உள்ளே இழுத்துத் தூங்க பண்ண முயற்சி செய்கிறாள்.


மனது தன் நண்பர்களாகிய பஞ்சேந்திரியங்கள் இல்லாமல் தனக்குத்தானே விளையாடிக் கொள்கிறது..


பிறகு இதயத்துக்குள்ளே இழுத்து மடியிற்போட்டு தூங்கப் பண்ணுகிறாள். இங்கே சித்தாக இருந்து கொண்டு மனம் சுகத்தை அனுபவிக்கிறது.

[சூக்கும காரண உடலை கடந்த போது ஆத்மாவே இதயம்]


பிராணன் விழித்துக் கொண்டிருந்து குழந்தையாகிய மனதின் விளையாட்டு சாமாங்களாகிய உடலையும், ஞாபக சக்தியையும், புத்தியையும், அகங்காரத்தையும், ஜாக்கிரதையாய் வைத்துக் கொண்டு விழித்தவுடன் அதனிடம் கொடுத்து விடுகிறது.


சுழுத்தி : தூக்க நிலையில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மனிதன் கடவுளோடு இதயத்தில் ஒன்றியிருக்கிறான்.


மனது சுதந்தரமின்றி பிராண சக்தியால் இழுக்கப்பட்டு தூக்க நிலைக்கு போவதால் அங்கிருந்து கடவுள் அறிவை கொண்டு வர முடியவில்லை.


ஆனால் தானாகவே உலகத்தை உதறி தள்ளிவிட்டு புத்தி கூர்மையால் அகங்காரத்தையும், தள்ளிவிட்டு இதயக்குகையில் இருக்கும் தன்னுடைய சுயவீடாகிய சித்தத்தில் குடிக்கொண்டிருக்கும் கடவுளிடம் செல்லுவோமானால் விசித்திர அனுபவம் ஏற்படுகிறது. கடவுளின் அருள் ஏற்படுகிறது.


இதுதான் உண்மை ஞான அறிவு. இந்த அறிவால் பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம். எல்லா தத்துவங்களையும் எளிதாக அறியலாம். மனம் எப்படி அடிக்கடி கடவுளிடம் போக்குவரத்து வைத்துக் கொண்டு இருக்குமானால் பேரின்பம் உண்டாகும். இதனை அடையச் செய்யும் சாதனையே பிராணாயாமம் ஆகும்.


பிராணாயாமம் பற்றி ஞானிகள் கூறும் மெய்ஞான விளக்கம் வருமாறு


நாதவிந்து என்றும் நடுவனையிலே இருந்த

போதமென்று மீண்டும் புகன்றதெல்லாம் - ஓதரிய

வாசிக்கே சொன்ன வகையல்லால் வேறன்று

நேசித்து நீ முனையில் நில்


நாசிவரும் வாசி நடுவனையிலே மறித்து

ஊசித்துளை வழியே உள்ளேற்றிப் பேசும்

இடமறிந்து சென்றே எல்லாமும் நீயதுவாய்த்

திடமறிந்து கண்டு தெளி


கண்டதுண்டந் தானறிந்து காரணராஞ் சற்குருவைத்

தெண்டனிட்டு நின்று தெரிசித்தாற் - துண்டமதிற்

காலைமே லேற்றுங் கருத்தனைக் காட்டுவார்

[வேல் முனையைக் கண்டுமே லேற்று]


வாசி என்பது பிரமரந்திரம் நோக்கிச் செல்லும் பிராணனுக்கு பெயர்.

ஊசி என்பது சுழுமுனைக்கு பெயர்.


"ஊசி துளையில் பாம்பு அடைப்போம்" - என்றார். ஒரு பெரியோர்.


அதன்செயல் கீழ்முகமாகச் செல்லும் அபானனது கதியை மேல் நோக்க செய்தல்.


இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்

துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்

உறக்கத்தை நீக்கி உணரவல்லார் கட்கு

இறக்கவும் வேண்டாம் இருக்கலுமாமே


இடகலை, பிங்கலை நாடிகளின் வழிப் பிராணன் இயங்குவதை மாற்றி சுழுமுனை வழியாகப் பிராணனை செலுத்த வல்லார்க்குத் தளர்ச்சி இராது. உறங்கும் காலத்தில் விழித்திருந்து, பயில்வார்க்கு இறப்பின்றி அழியாது இருக்கக்கூடும்.


சுழுமுனைத் தியானத்தை அதிகாலையில் தொடங்குவார்க்கு அழிவில்லை என்று திருமூல நாயனார் அருளியுள்ளார்கள்.


[நன்றி : ஜோதியும் திருவடியும்]

Tuesday, July 26, 2011

மூலிகை பதிமுகம்

இந்த வார மூலிகை அறிமுகம் 1 - பதிமுகம்


பதிமுகம்

1. வேறுபெயர்கள்- சப்பான் மரம்,. பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா.
2. தாவரப்பெயர்- சிசால்பினேசப்பான், CAESALPINIA SAPPAN சிசால்பினேசி எனும் தாவரக் குடும்பம்.
3. வளரும் தன்மை- இந்தியா மற்றும் மலேசியாவைத் தாயகமாக் கொண்டது பதிமுகம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு செம்புறை மன் உகந்தது.முட்களுடன் பத்து மீட்டர் உயரம் வளரும் குறு மரம். இதன் குறுக்களவு சுமார் 15.30 செ.மீ. விட்டமாகும். ஒரு வருடத்தில் செடிகள் 3-5 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் இளம் பச்சை நிறமுடைய கூட்டிலைகளாக முதல் வருடத்திலேயே பூக்க ஆரம்பிக்கும்.

கவர்ச்சியான இளமஞ்சள் நிறமுடைய பூக்கள், காய்கள் 15 நாட்களில் தோன்ற ஆரம்பிக்கும். மூன்று மாதங்களில் முற்றுகின்றன. ஒவ்வொரு காயிலும் கரும்பழுப்பு நிறமுடைய 3-4 விதைகள் இருக்கும். இது வறட்சியைத் தாங்கி பல் வேறுபட்ட கால நிலையிலும் வளரும். இது வறண்ட வெப்ப மண்டலம், மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளரும். இந்த மரம் முதிரவடைவதற்கு 8 வருடமாகும். இது விதை வழி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

4. பயன் படும் உறுப்புக்கள்- இலை,பட்டை, மரத்தண்டு, பூக்கள், மற்றும் வேர்பாகங்கள். (சமூலம்).

5. பயன்கள்- இதன் மரக்கட்டைத் தூளை உபயோகித்து மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பானாக கேரள மாநிலத்தில் 95% வீட்டிலும் உணவகத்திலும் தினமும் குடிதண்ணீர் சுத்திகரிக்கப் படுகிறது அரிய மருத்துவ குணமிக்க இம்மரத்திலிருந்ந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகையான கேன்சர் குணமாகிறது.
சர்கரை நோய் கட்டுப்படுகிரது, இரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் படிகிறது. சிறுநீரகக் கோளாறுகள் சீரடைகிறது. மூலநொய் குணமடைகிறது. கொழுப்பு விகிதம் சமச் சீராகிறது. வயிறு சம்மந்தமான நோய்களுக்குச் சரியான பலனளிக் கின்றது. சரும நோய்சரியாறது.
பூ, இலைகள், ஒப்பனை அழகு சாதனப் பொருட்களாகிறது. இயற்கையான நிறமேற்றுப் பொருளுக்கான அதி அற்புத உற்பத்திப் பொருளாகிறது 1000 மடங்கு எதிர்கால தேவையை நிவர்தி செய்யும்திறன் மிக்கது. இதன் மையத்தண்டில்அடங்கியுள்ள 'பிரேசிலின்' என்ற சிகப்புச் சாயம் காற்றில்பிராணவாயுவுடன் சேரும் போது 'பிரேசிலியன்' வண்ணமாக மாறுகின்றது.
இச்சாயம் நீர், வெளிச்சம் மற்றும் வெப்பத்தால் பாதிப் படையாத, அறிப் புண்டாக்காத முகப் பூச்சுக்கள் தயாரிப்பில் பயன் படுகிறது. முதிர்ந்த மரத்தின் மையப்பகுதியினின்று பெறப்படும் சாயம் தோல்,பட்டு, பருத்தியிழை, கம்பளி, நார், காலிகோ, அச்சுத்தொழில், மரச்சாமான்கள் வீட்டுத்தரை, சிறகு, மருந்துகள் மற்றும் பல்வேறுபட்ட கைவினைப் பொருட்களை வண்ண மூட்டப் பயன் படுத்தப் படுகிறது. பத்தமடை கோரைப் பாய்கள் பதிமுக வண்ணத்தால் சாயமூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பதிமுக சாயம் 'கயா' என்னும்மரச் சாயமுடன் கலக்கும் போது கறுப்பு, ஊதா மற்றும் சிகப்பு வண்ணச் சாயங்கள் உருவாக்கப் பட்டு அவை பனைஒலை, மற்றும் தாழை, கைவினைப் பொருட்களை வண்ணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் பயன்படும் 'லூக்கோல்' என்னும் மருந்தில் பதிமுகம் பயன் படுத்தப்படுகின்றது. இது கற்பப்பையினுள் கருவி மூலம் சோதனை செய்யும் போது உதிரம் கொட்டுதல் போன்றவற்றை மட்டுப் படுத்திகிறது. இலைகளினின்று பிரித் தெடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம், போன்றவற்றிக்கு எதிராகப்பயன் படுகின்றது. மிக அதிக அளவில் கரியமில வாயுவை கிரகித்துக் கொள்வதுடன் மிக அதிக அளவில் பிராண வாயுவைவெளிப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை அற்புதமாக பாதுகாக்கிறது. மழை வளத்தைத்தூண்டுகிறது

காந்தத் தொடர்- நீங்கள் நினைத்ததை அடைய -பகுதி

காந்தத் தொடர்- நீங்கள் நினைத்ததை அடைய -பகுதி 4

நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , நாம் எப்போதும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் ,பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம் .

நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளையும் உற்று கவனித்து கொண்டே இருங்கள் , ஏன் என்றால் நீங்கள் உங்களுக்கு தேவையானதைவிட,எது தேவை இல்லையோ அதை பற்றிதான் யோசித்து கொண்டிருப்பதும், பேசிகொண்டிருப்பதும் தெரிய வரும், நீங்கள் ஒரு எண்ணத்தை நினைகிறீர்கள் என்றால் அது நல்லதா கேட்டதா என்றெல்லாம் ஈர்ப்பு விதி சட்டை செய்வதில்லை ,அது வெறுமனே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்குகிறது .
ஈர்ப்பு விதி ஒரு இயற்கை விதி ,அது உங்களது எண்ணங்களை பெற்றுக்கொண்டு அதையே உங்களது வாழ்க்கையின் அனுபவங்களாக உங்களுகே திருப்பி அனுப்பும் , நீங்கள் என்ன என்னிகொண்டிருகிறேர்களோ அதை அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கும் ஒரு விதியாகும் .

ஈர்ப்பு விதி என்பது மிகவும் கீழ்படிதல் உள்ள விதி
நான் இனி கடன் வாங்க மாட்டேன் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டிருந்தால் , உடனே விதியானது நீங்கள் எதை சிந்தித்து கொண்டு இருக்கீரீர்களோ ,அதை உங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் , அதற்கு நல்லது ,கேட்டது தெரியாது .

நீங்கள் தவறான எண்ணங்களை சிந்திக்கும்போது அது அப்படியே எடுத்து கொள்ளும் ,அதற்கு சில உதாரணம்

" நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போக மாட்டேன்
நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போவேன் "

" இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியாது
இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியும் "

"எனக்கு காய்ச்சல் வரகூடாது "
எனக்கு காய்ச்சல் வர வேண்டும்"


"நான் இனி எந்த விசயத்திலும் தோற்க மாட்டேன்
நான் இனி எந்த விசயத்திலும் தோர்ப்பேன் "

நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை ஈர்ப்பு விதி அப்படியே உங்களுக்கு திருப்பி அளிக்கிறது .

மொத்த பிரபஞ்சமுமே எண்ணத்திலிருந்து உதித்ததுதான் என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர் .

நாம் எல்லா சமயங்களிலும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறோம் ,நாம் பேசிக்கொண்டிருக்கும்போதும் ,டிவி பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போதும், கார் ஓட்டும்போதும் , வேலை செய்து கொண்டிருக்கும்போதும் ,நாம் சிந்திக்காத ஒரே நேரம் தூங்கும் நேரம் மட்டும்தான் ,ஆனால் நாம் தூங்க முயலும் பொது கடைசியாக நாம் சிந்தித்த வற்றை ஈர்ப்பு விதியானது , அசை போட்டு கொண்டிருக்கும் ,அதனால் நாம் தூங்க போகும் போது நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து விட்டு தூங்க வேண்டும்.

இன்றைய உங்கள் சிந்தனை நாளைய வாழ்க்கை ,நீங்கள் எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அவையே உங்களது வாழ்வாக மலரும் .நீங்கள் தான் உங்கள் வாழ்வை சிருஷ்டிகிறீர்கள் .நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள் .உங்களது எண்ணங்கள் தான் விதை .உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும்.

இன்னும் ஈர்க்கும்

மூலிகை - குப்பைமேனி

1) வேறுபெயர்கள் :- பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி.

2) தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.

3) குடும்பம் :- EUPHORBIACEAE.

4) வளரும் தன்மை :- இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. குப்பை மேனிக்கு அருகில் பூனை வராது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில்
ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட
குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குனான், ஸ்டீரால்ஸ் மற்றும், சைனோஜெனிக் க்ளைக்கோஸைடு போன்ற மிகவும் விஷம் வாய்ந்த வேதிப் பொருட்களையும் உடையது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். எரிப்புகுணமுடையது.வசீகரப்படுத்தும்இயலடையது.
மாந்திரீக மூலிகையாகும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது.

5) பயன்தரும் பாகங்கள் :- செடி முழுதும் மருத்துவப்பயனுடையது.

6)பயன்கள் :- நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலைஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும்.

வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிநீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவுகொடுக்கவும்.

இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும்.

இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும்
இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.

மூலநோய் :- மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள்நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும். பதினெட்டுவகை எனவும், கூறுவர். அவைஇவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலைசாப்பிடுக, 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்மோரில் சாப்பிடுக. புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

நாடாப்பூச்சி, புழு - குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகிய வற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

விடம் :- குப்பைமேனிச்சாற்றில் சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு, எலி, முதலியன வற்றில் கடி வாயில்தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.

படுக்கைப்புண் :- ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இழஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.

தலைவலி :- இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

சொறிசிரங்கு :- குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும்அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்துவர சொறி சிரங்கு படை குணமடையும்.

புண் :- எல்லாவகையான புண்களுக்கும் இதன்இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.

Read more: http://karurkirukkan.blogspot.com/2011/05/10.html#ixzz1TC4sU9R9

Monday, July 25, 2011

நால் வருணம்

நால் வருணம்

வானில் நாம் காணும் பலகோடி அண்டங்களையும் ஒன்று கூட்டி நினைத்து அதனை பிரபஞ்சம் என்று கூறுகிறோம்.
எல்லா அண்டகளையும் சேர்ந்த ஒரு பெரிய இயக்கமாக இருப்பதால் அதனைப் பேரியக்கமண்டலம்,என்று நாம்
கூறுகிறோம்.நாம் நட்சத்திரங்கலகக் காண்பது சுரியன்களே.அவற்றில் ஒன்று நாம் வாழும் நில உலகு இயங்கி வரும் சூரிய மண்டலம்.
நில உலகம் தோன்றிய பின் கணக்கிட முடியாத காலம் கடந்து ஓரறிவு உயிர் பொருளாகிய புல்,புண்டுசெடி,கொடி,மரங்கள் தோன்றின.
பிறகு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டறிவு,மூவறிவு,நான்கறிவு,ஐயறிவுஉயிகளென விலங்கினம் விரிந்தன.
சந்தர்ப்ப வசமாக இருவேறுபட்ட விலங்கினங்களின் உடலுறவில் இருந்து ஆதிகாலமனிதன் தோன்றினான். அந்தஒருமனிதனில் இருந்து கிளைத்து விரிந்தே மனிதசமுதாயம்.மனித இனம் விலங்கினங்களைப்போலவே இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக
துய்த்து ஆறாவது அறிவாகிய சிந்தனை சிறப்புப் பெறாது கழிந்த காலம் மிகநீளம்.
எப்போது பூமியைக் கிளறி வித்தித்டுப் பயிராகிஇருப்பு வைத்து தானும் உண்டு பிறக்கும் வழங்கி வாழத் தெரிந்து கொண்டானோ,
அதுவே மனிதன் ஆறாவது அறிவு ஒளிவிடத் தொடங்கியகாலம்.மனித இனம்தொடக்க காலத்தில்,ஆங்காங்குகிடைக்கும்.நிலவளம்,விளைபொருள்கள்,வாய்ப்பு இவற்றிர்கேற்பபொருட்களை உற்பத்தி செய்து பண்டமாற்றுமுறையில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வழ்ந்திரிந்தர்கள். பிறகு ஒரு குழுவினரோடு பிரகுழு கலப்புறுங்காலம்
வந்தது.ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினருக்கு தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் மாற்றிக்கொள்ளும் தேவையும் ஏற்பட்டது. இவ்வாறு பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மற்றும் ஒரு புதிய தொழில் உண்டாயிற்று.இந்ததொழில் திறன்படச்செய்தவர்கள் வணிகர்களானர்கள்.இவர்களே வைசியர்கள் எனப்ட்டர்கள்.
பொருள் மிச்சம்,இடம் மாற்றம்,வணிகதொழில் என்றமூன்று நிலைமைகளால் வரியவன் எளியவனைத் தக்கிப்பொருள் பறிப்பதும்,
உயிர்கொலை என்ற வன்முறைச்செயல்கள் உருவாயின.சமுதாயக்கூட்டாக இதைத்தடுத்து எளியவர்களையிம் அவர்கள் உடமைகளையும் பாதுக்காக பொதுக்கவல்முறை ஏற்பட்டது.அதற்காக மக்காளால் நியமிக்கப்பட்ட உடல்வலிவும் போர்த்திறமையும்
உள்ள தலைவன் தான் காவலன்.பிற்காலத்தில் ஏற்பட்ட பல மாறுதல்களையோட்டி காவலன் அரசன் எனப்பட்டான்.புலன் இன்ப வாழ்விலே மக்களில் பலர் நேறிதவறிய செயல்களாலும்,எண்ணங்களாலும் வாழ்வில் சிக்கல்கள் பலதோன்றின.
பின்னர் இயற்கையை ஆராயும் சிந்தனையாளர்கள் மனிதசமுதாயத்தில் உருவானார்கள்.அவர்கள் அறிவைஉட்செலுத்தி உடலுக்குள்
உயிரையும்,உயிரை நிலைக்கலனாகக் கொண்டுவிரிந்தது இயங்கும் அறிவையும் பேரியக்கமண்டல நிகழ்ச்சிகளுகுக்கெல்லாம் மூல
ஆற்றலான இறைநிளையும் உணர்ந்தார்கள்.இவ்வகையில் அறிவுவிரிந்தது இயற்கையை உணர்ந்ததெளிவுலே மக்களுக்கும்,அரசுக்கும்,வணிகருக்கும் ஏற்படக் கூடிய வாழ்க்கைச் சிக்கல்களை அவ்வப்போது ஆராய்ந்து சிக்கல் தீர்த்து சீராகவாழும்
முறைகளைப்போதனை செய்தார்கள்.இவர்கள் எல்லாவற்றையும் பர்ப்பவனாகிய அறிவு யார் என அறிவை நோக்கி உள்நோக்கிப்
பார்க்கும் அகத்தவ முறையைப் பயின்றதால் பார்பனர் என்று,முடிவாக பெரியக்கமண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் தனது அழுத்தம் எனும் ஒரேஆற்றலால் துல்லியமாக இய்ங்கிவரச்செய்யும் ஆதியும்அனதியுமான மெய்பொருளை பிரம்ம நிலையை
உணர்ந்தவர் என்ற உயர்கருத்தில் மெய்ஞானி,பிராமணர் என்றும்வழங்கப்பட்டனர். ஆழ்ந்து ஆராயுமிடத்து ஒரே சாதியானஉழைப்பாளி,
எல்லார் வாழ்வுக்கும் ஆதாரமானவனயிருப்பதனால் சூத்திரன் என்ற மதிப்பைப் பெற்ற உளைப்பளியிருந்து தான் தேவைக்கும்
காலத்திற்கும் ஏற்ப வணிகன்,அரசன்,மெய்ஞ்ஞானி என்ற மூன்று பிரிவுனரும் தோன்றியிருக்கிறார்கள்.
எந்தத் தொழிலையும் திறமையாக,சிறப்பாகவும் செய்யக்கற்றுக் கொள்ள கல்விக் கூடங்கள் இல்லாத காலத்தில்,தந்தை செய்த தொழிலையே மகனும் கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் அந்தத் தொழிலை ஒட்டி சூத்திரன்(உழைப்பாளி),வைசியன்(வணிகன்),அரசன்(சத்திரியன்),மெய்ஞ்ஞானி (பிராமணன்),என்று பிரித்து பேசப்பட்டது.தொடர்ந்து பழக்கத்திற்கும் வந்துவிட்டது.இனி
இன்றையநிலைமையைக் கவனிப்போம்.
விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு எவரும் எந்தத்தொளிளையும் கற்கலாம்,செய்யலாம் என்பதனால் தனியே சூத்திரன் என்பதுமறைந்துவிட்டது.
எவர் என்றாலும் எல்லாருமே வாணிபம் செய்யலாம் என்ற வாய்ப்பு ஏற்பட்டுச்செயலிலும் வந்து விட்டது வைசியன் என்ற தனிப்பிரிவு போய்விட்டது.
வக்குச்சீட்டுப் போட்டு எந்த குடிமகனையும் ஆட்சியாளனாகாக்கொண்டு வரலாம் என்ற நிலை ஆட்சிக்கு விட்டதால் சத்திரியன்
என்றதனிப்பிரிவு மனிதசமுதாயலித்திருந்து விடை பெற்றுக்கொண்டது.
விஞ்ஞானக் கல்வியால் எவரும் விண் அறிவும் நுண்ணறிவும் பெற வாய்ப்பும் அகத்தவ சாதனையால் எவர்முயன்றாலும்
பிரம்மத்தை அறிந்து அறிவில் முழுமைபெறலாம்.மெய்ஞ்ஞானியாகலாம் என்ற சமுதயநிலை உருவகிவிட்டதல் தனியே பார்ப்பான்
-பிராமணன் என்ற பிரிவு மறைந்து விட்டது.
உழைத்துப் பொருள் ஈட்டும் உளைப்பளியிலேயே, சூத்திரநிலேயே நான்கு ஜாதிகளும் ஒன்ருபட்டுவிட்டது. இந்த உண்மையை உணர்ந்து சாதியால் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு காணமல் உலகம் ஒன்று,மனிதசமுதாயம் ஒன்று அதில் நாம் அனைவரும் உடன்பிரந்தவ்ர்களே என்ற விரிந்த நோக்கில் ஒருவருக்கு ஒருவர் உதவியும் எவரும் பிறருக்கு எவ்வகையிலும் தீமை செய்யாமலும் அறவழியில் நின்று வாழ்வோம்.அமைதியும் இன்பமும் கூடிய வாழ்வை அனுபவிப்போம்."வாழ்க வளமுடன்" -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

எட்டும் இரண்டும்

நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்கி குரு எமக்கு சொல்லி குடுத்ததை இறைவனின் அருளால் நான் இந்த பதிவை இங்கு பதிவு செய்கிறேன். எழுத்து பிழை இருப்பின் திருத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே ---- திருமந்திரம் 986

எட்டும் இரண்டும் இனிதான பேரின்பத்தைக் கொடுக்கும் என்பதனை, எட்டையும் இரண்டையும் அறியாதவர்கள், பணம் உள்ளவன் பணக்காரன் இல்லாதவன் ஏழை. அதுபோல எட்டும் இரண்டும் அறிந்தவன் ஞானமாகிய செல்வம் பெற்ற பணக்காரன். எட்டும் இரண்டும் அறியாதவன் ஞானமாகிய செல்வம் இல்லாத ஏழைகள்.
அவர்கள் அதன் இன்பத்தை அறிய மாட்டார்கள். என்ற கூறுகிறார். மேலும் எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு அதாவது பத்து என்பதே சித்தாந்த சன்மார்க்க பாதம் என்கிறார் திருமூலர். இது என்னடா!? எட்டும் இரண்டும் பத்து என்பது முதல் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கே தெரியும் இதைச் சொல்ல திருமூலர் எதற்கு என்கிறீர்களா? ஞானிகள் கூற்று எல்லாமே எளியதான ஆனால் அதே சமயம் ஆழ்ந்த பொருள் உள்ளதாக ஞானத்தை விளக்கும் மறை பொருளாகவே இருக்கும்.

இனி திருமூலர் சொன்னதை பார்ப்போம்?

எட்டு என்பது " 8 " என்றும் தமிழில் "அ" என்றும், "சூரியன்" என்றும், வலது கண் என்றும் மறைபொருளாக உணர்த்தியதாகும்.

இரண்டு என்பது " 2 " என்றும், தமிழில் "உ" என்றும், "சந்திரன்" என்றும், இடது கண் என்றும் கூறுவர்.

இந்த எட்டும் இரண்டும் பத்து. 8 + 2 =10 , அ + உ = ய, சூரியனும் சந்திரனும் நம் சாதனையால் ஒன்று பட்டு உள்முகமாக சென்று பத்தாகிய. "ய" ஆகிய அக்னியோடு சேர்ந்தாலே திருவடியை. ஜோதியை, ஜீவனை பாதத்தை நாம் தரிசிக்க முடியும். இந்நிலையைத் தான் "முச்சுடரும் ஒன்றை முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காண அனந்தமாபாதம்" என சித்தர்கள் கூறுவர்.

யமுனையில் கண்ணன் காளிங்க நர்த்தனம் புரிந்தான் என்பது புராணம். இதன் தத்துவம் பற்றி கொஞ்சம் சிந்தித்து பார்போம்.

"ய" - முனை "ய" என்ற கலை சேர்ந்த எழுத்தில் மூன்று முனை - சூரியன் சந்திரன் அக்னி என மூன்று கலை சேர்ந்த இடத்தில் - விஷத்தைக் கக்கும் காளிங்கன் - காம குரோதாதிகளை கொடுக்கும் பஞ்சேந்திரியங்களை வென்று அதன் மேல் ஏறி - ஒளியாகிய இறைவன் - கண்ணின் ஒளி - கண்ணன் ஆனந்த நடனமாடினான் என்பதே மெய்ஞான விளக்கம். "ய" - முனை மூன்றாக உள்ளது, அதை ஒன்று சேர்த்தாலே ஞானசாதனை . அப்படி சேர்க்கும்போது சூலாயுதம் போல் மூன்று கூறாக உள்ளது. வேல்போல் குவிந்து ஒன்றாகி விடும். முருகனுக்கு சக்தி கொடுத்தது ஞானவேல் அல்லவா? நாம் ஒவ்வொருவரும் ஞான வேலாக மிளிர வேண்டும்! ஒளிவிட்டு பிரகாசிக்க வேண்டும்! அனுபவிப்போம் - உண்மை அறிவோம் !

இந்த ரகசியத்தை யாரவது சுட்டிக் காட்டினால்தான் நமக்குப் புரிய முடியும். அதனால்தான் "சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்ற பழமொழி நிலவுகிறது. பற்பல நூற்களையும் ஞானவான்கள் கூற்றையும் படிக்கும்போது பரம்பொருள் - ஒளி - கண் - என நினைத்து பாருங்கள் - படியுங்கள் - உண்மை விளக்கங்கள் அழகாக புரியும் ! சிந்திப்போம் தெளிவு கிடைக்கட்டும். பரம்பொருள் ஒளியாக - கண்ணில் காரியப்படுவதை நாம் உணர்வதுதான் ஞானத்தின் முதல்படி. திருவடி தீட்சை என்றும் சட்சு தீட்சை என்றும் இதைத்தான் குரு உபதேசம் செய்வார்.

உபதேசம் என்பதன் பொருள், உப = இரண்டு, தேசம் = இடம் . இரண்டு இடம் - இரண்டு கண் என்பதே ஆகும். இதை உறுதிப்படுத்ததான் சாஸ்திர விளக்கம் கூறுவர். அவரும் இதைதான் சொன்னார் - இவரும் இதைத்தான் சொன்னார் - எல்லாருமே இதைத்தான் சொன்னார்கள் என எல்லா ஞானிகள் நூற்களையும், அவற்றின் மறை பொருள்களையும் - பரிபாசையாக சொன்னவைகளை விளக்கித் தெளிவுபடுத்துவர். இந்த உபதேசத்தை ஒரு சடங்காகவே செய்வர். உபதேசம் பெற்றவன் அஞ்ஞான வாழ்க்கையை முடித்து ஞான வாழ்வுக்கு முயல்பவனாக மீண்டும் பிறந்தவனாக கருதப்படுகிறான் . மெய் பொருள் உணர்ந்த உபதேசம் பெற்றவர்களே இரு பிறப்பாளன் ஆகிறான்.

இயேசுநாதர் 2 மீன்களையும் 5 அப்பங்களையும் 5000 பேருக்கு பங்கிட்டுக் கொடுத்தார். மீதமுள்ளதை 12 கூடையில் வைத்தார் என பைபிள் கூறுகிறது. பைபிளின் முதல் பகுதியிலேயே வேத வாக்கியங்களை மேலோட்டமாக பார்க்காதீர். ஆழ்ந்து கவனியுங்கள் என கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் 2 மீனையும் 5 அப்பத்தையும் எப்படி ஐயா 5000 பேருக்கு பங்கிட்டு கொடுக்க
முடியும் ? கொஞ்சமாவது சிந்திப்போம்.

மீன் என்றால் தண்ணீரில் வாழும் மீன்அல்ல. மீன் போன்ற அமைப்புடைய நம் கண்கள். இயேசு 2 மீன்களாக தன் இரு கண்களாலும் 5 அப்பம் என்றது ஞானேந்திரியம் ஐந்தாலும் 5000 பேருக்கு உபதேசங் கொடுத்தார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அதாவது கண்ணால் பார்த்து அனைவருக்கும் ஞானதீட்சை கொடுத்தார் என்பதே பொருள். கண்ணில் உள்ள ஒளியால் அக்னியால் ஞானஸ்தானம் வழங்கினார் என்பதே பொருள். மீதமுள்ளவை 12 கூடையில் வைத்தனர். இது 12 கலையுடன் சூரிய நிலையில் நின்றனர் என்றே பொருள்படும். நமக்கு சூரிய கலை வலது கண்ணே. இதையெல்லாம் உண்மை ஞானம் விளக்கம் பெற்றவர்கள் உடனே உணர்ந்து கொள்வார். அறியாதவர்கள் இல்லை என தர்க்கம் செய்யாதீர்கள். எவ்வளவு தூரம் இது உண்மை என அறிய முற்படுங்கள் சிந்தியுங்கள் என்பது எனது தாழ்மையான கருத்து. கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள்.

பைபிளில், கண்ணே சரீரத்தின் விளக்காய் உள்ளது. உன் கண் ஒளியுள்ளதாய் இருந்தால் உன் சரீரமும் ஒளி உள்ளதாய் இருக்கும். தேவன் ஒளியாய் இருக்கிறார். நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம். உன் சரீரத்தின் விளக்கான கண்ணில் உள்ள தேவனாகிய ஒளியை பெருக்கி உன் சரீரத்தை ஒளிமயமாக்கினால் ஒளிமயமான தேவனை தரிசிக்கலாம் என கூறப்பட்டுள்ளதை சிந்திப்போம்! குர் ஆனிலும் இன்னும் உள்ள அனைத்து மத நூற்களிலும் இதையேதான் கூரியிருகின்றனர். படித்து , சிந்தித்து தெளிவடைவோம்.

இறைவன் எப்படிபட்டவர் என்றால், ஒரு சிறு உதாரணம். நாம் தேடும் குறிப்பிட்ட அன்பரை சரியான விலாசத்தில் தேடி கண்டுபிடித்து விட்டோம். வீடு பூட்டியிருக்கிறது. நாம் வீட்டுக் கதவைத்தட்டி நண்பரை பேர் சொல்லி கூப்பிடுகிறோம். நமது நண்பர் வீட்டில் எங்கிருந்தாலும் என்ன செய்வது கொண்டிருந்தாலும் ஓடோடி வந்து கதவை திறந்து வாருங்கள் வாருங்கள் உட்காருங்கள் ஏதாவது சாப்பிடுங்கள் என்று நம்மை வெகுவாக உபசரித்து வீட்டின் உள்ளே கூட்டிச் சென்று அமர வைக்கிறார். இதுபோலவே, நாம் இறைவன் குடிகொண்டிருக்கும் இந்த உடலின் உட்புகு வாசலை-கண்ணை-கண்மணியில்-நினைவால்-தட்ட வேண்டும். தட்ட வேண்டிய இடத்தில் தட்டவேண்டிய முறைப்படி தட்டிக்கூப்பிட்டால் எங்கு இருந்தாலும் இங்கே வந்து வாசலை திறந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்வான். கேட்டதெல்லாம் தருவான். அருள்வான். அருளாளன் அல்லவா இறைவன்! நம் கடன்-கடமை இறைவன் இருக்கும் வீட்டு வாசலில்-கண்ணில் நினைவை நிறுத்தி பணி-சாதனை -செய்து கிடப்பதே. நம்மை உள்ளே அழைத்துச் சென்று அருள் கொடுப்பவன் எல்லாம் வல்ல இ றைவன் செயலே. வாசல் கதவை தட்டிக் கூப்பிட்டால் போதும்! நாம் செய்ய வேண்டியது இவ்வளவே! இந்த சின்ன வேலையைக் கூட நம்மால் செய்ய முடியாவிட்டால் எப்படி?! தட்டுங்கள் - திறக்கப்படும்.

நல்ல குருவைப் பெற்று சாதனை செய்யுங்கள், சத்சங்கம் கூடுங்கள். அப்பொழுதுதான் ஒருவருக்கொருவர் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளலாம். "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ஊண் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான் பற்றப் பற்ற தலைப்படுந்தானே". நமது ஊண் உடலைப்பற்றி நிற்கின்ற உணர்வுறு மந்திரமாகிய கண்ணில் ஒளியாக துலங்கும் ஜீவனை நாம் சாதனையால் பற்றப் பற்ற - சிக்கெனப் பற்றினால் - நமக்கு கைவல்யப்படும். "சுடரடி தொழுது எழு என் மனனே" என ஒரு பக்தர் பாடுகிறார். இறைவன் திருவடியாகிய சுடரை தொழு என் மனமே என்கிறார். திருவடியே - சுடர் என் ஜோதியே எவ்வளவு அழகாக கூறுகிறார் பாருங்கள்.!

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"



வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

நன்றி
மதிவாணன்
mathish0610@gmail.com

Saturday, July 23, 2011

சைவமா? அசைவமா?-ஒரு கருத்தாய்வு

சைவமா? அசைவமா?-ஒரு கருத்தாய்வு
எந்த உயிரையும் உட்கொள்ளாத உயிரினம் சைவம் என மனிதர்களால் கூறப்படுகிறது. ஆனால், மனிதர்களில் சைவம் உண்டா என இனி அலசுவோம்.


பூமியில் இருக்கும் உயிரினங்களை இருவகைப்படுத்தலாம்.

1.இடம்பெயரா உயிரினங்கள். 2.இடம்பெயரும் உயிரினங்கள்



இடம் பெயரா உயிரினங்கள் என்பது மரம் ,செடி, கொடி போன்ற உயிரினங்கள்.

இடம் பெயரும் உயிரினங்கள் என்பது மனிதன்,வீட்டு விலங்குகள்,காட்டு விலங்குகள்,பறவைகள்,மீன்கள் இன்னும் பல.



இடம்பெயரா உயிரினங்கள் நேரடியாக தனக்கு தேவையான உணவை பூமியிலிருந்தும்(நீர் மற்றும் தாதுக்கள்), சூரியனிடமிருந்தும் (வெப்பம்,ஸ்டார்ச்) எடுத்துக்கொள்கிறது.(இவைகள்தான் சைவம்,ஏனென்றால் இவைகள்தான் பஞ்சபூதங்களிலிருந்து நேரடியாக உணவை எந்த உயிரையும் கொல்லாமல் எடுத்துக்கொள்பவை.)

சில வகை மரம்,செடிகள் சிறு பூச்சிகளையும் விலங்குகளையும் பிடித்து அவற்றின் உடலில் உள்ள நீர்ச்சத்துக்களை உறிஞ்சக்கூடியவையும் உண்டு.(இவை அசைவ தாவரங்கள்)

அநேகமாக,சைவமா அசைவமா என சர்ச்சை பண்ணும் உரிமை மரம்,செடி,கொடிகளுக்கு மட்டும்தான் இருக்கமுடியும்



இடம்பெயரும் உயிரினங்கள், மற்ற இடம்பெயரும் உயிரினங்களையும் இடம் பெயரா உயிரினங்களையும் தின்று வாழ்கின்றன.



மொத்தத்தில், இந்த பூமியில் வாழும் அனைத்து இடம்பெயரும் உயிரினமும் மற்றொரு உயிரைத்தின்றே வாழ்கின்றன. பஞ்சபூதங்களிடமிருந்து நேரடியாக உணவைப்பெறும் மனிதர் யாரேனும் இருந்தால் அவர்தான் சைவம்.அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. ஆக, எந்த மனிதனும் சைவம் இல்லை.



(பின்குறிப்பு; ஆகவே,உயிரினத்தை வைத்து சைவமா அசைவமா என நாம் பேசுவதில் அர்த்தமில்லை. இனி,உண்ணும் வழக்கத்தை மட்டும் வைத்து பார்த்தால் தாவரங்களை உண்பவர்களை தாவர உண்ணிகள் எனவும் இரத்தம் வெளியேறி துடிதுடித்து சாகும் உயிரினங்களை உண்பவர்கள் மாமிச உண்ணிகள் எனவும் கூறிப்பழகுவோம்.)

by Kumar Ilang

வாழ்க வளமுடன்
குருவே துணை

Thursday, July 21, 2011

வெந்தயம்

வெந்தயம்
வெந்தயம்/வெண்தயம் ( Fenugreek ) - ஒரு மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி கீரையாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
௧)பாலூட்டும் தாய்மாரின் பாற்சுரப்பைக் அதிகரிக்கும்
௨)காலையில் சிறிதளவு வெந்தயமும் தண்ணீரும் குடித்துவந்தால் பல குடல் தொடர்பான நோய்கள் அணுகாது
௩)கரண்டி [ 100 கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து [பொன் கலரில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து , பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
௪)கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு ,[50 கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும். அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு பாட்டிலில் போட்டு வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.
௫)வயிறு உப்புசமாகவோ ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [ 2] வகை பொடியை 1 ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.
௬)தினமும் காலையில் [ 1] வகை பொடியை மோரிலோ , தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட் சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான் குடிக்கணும்.
௭)பேதி போகும்போது மோரில் [ 1] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.
௮)முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்] 1 ஸ்பூன் [ 1] வகை பொடி + சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
௯) சிலருக்கு வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். ( சூட்டினால் அது போல் ஆகும்) அந்த சமயம் [ 1 வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை மற்க்காமல் எடுத்து செல்லவும்.
௧௦) ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய , முழு வெந்தயம்- ஸ்பூன் , பாசிபயறு- 2 ஸ்பூன் , கோதுமை- 2 ஸ்பூன் , இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி , மறுநாள் காலை மிளகு- 2, சிறிது கல் உப்பு , கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து , காலையில் வெறும் வயிற்றில் தோசை வார்த்து [நல்லெண்ணெய்] காலை உணவாக சாப்பிட்டால் பி.பி , சுகர் நன்றாக குறையும் , ருசிக்கும் குறைவில்லை.
௧௧) வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.
௧௨)வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கி , மிளகாய்பொடி , மஞ்சள்பொடி , பெருங்காயதூள் , உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில் போட்டு கலந்து நீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளி சட்னி , வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி சூப்பர். ( வெந்தய கீரையை சுத்தம் செய்து கூட்டு செய்தும் சாப்பிடலாம். அதன் பலன்களுக்கு தனி புத்தகமே போடலாம்)
எந்த வகை ஊறுகாய்க்கும் [ 2 வகை] பொடி சேர்க்கவும்.
௧௩)டம்ளர் இட்லி அரிசி , 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின் நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன் கலரில் இருக்கும். வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.
௧௪)டம்ளர் புழுங்கல் அரிசியுடன் ,1/2 டம்ளர் உளுந்ந்து , 1/2 டம்ளர் வெந்தயம் இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்ல பூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித சட்னியும் சுவையாக இருக்கும். நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம். எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பதும் நல்லது.
௧௫) தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணியுடன் விழுங்கினால் , உடல் எடை குறைப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சுகர் உள்ளவர்களும் சாப்பிடலாம். சுகர் குறையும்.
௧௭)முதல் நாள் இரவு ஊரவைத்த வெந்தயத்தை மறுநாள் காலை அரைத்து , தலையில் வைத்து ஊறி குளித்தால் தலை முடி பள பளப்பாகும். ரொம்ப குளுமையானது இது

Saturday, July 16, 2011

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை
இறந்தபின் மனிதனுடைய வினைப்பதிவுகள் என்னவாகிறது? இது பரவலாக நிலவி வரும்
வினா. வினைப் பயன் விட்டுப் போகாது. ஒவ்வொரு உயிரும் தன் வினைப் பயனைத்
தூய்மை பெறும்வரையில் வேறு உடலில் சேர்ந்தேனும், தன் வினைப்பயனாக
துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவித்தே தீரும். அதற்காகப் புதிதாகப் பிறவி
எடுக்க வேண்டும் என்பதில்லை.
ஒரு குழந்தை பிறந்து அது தன் பன்னிரெண்டு வயது வரை தன்னிச்சையாக
வினைகளைப் பெறவில்லை; பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று வைத்துக்
கொள்வோம். பன்னிரண்டு வயதிலே இறந்து விட்டது. இந்நிலையில் அக்குழந்தையின்
உயிரின் நிலை என்ன? 12 வயதிற்குள்ளாக எந்தக் குழந்தை உயிர் விட்டாலும்
தன், தாய் அல்லது தந்தை, பாட்டன், பாட்டி போன்ற கருத்தொடரான உறவினர்களின்
உயிரோடு அடைக்கலமாகி விடும். விரிந்த உயிர் சுருங்கி விடுவதுபோல
அவ்வுயிருக்கு வேறு எந்தப் பதிவும் இல்லை. ஆகவே அந்த உயிரில் பதிவு பெற்ற
உயிர்கள் தாயும் தந்தையும்தான். எனவே, அவ்வுயிர் தாய், தந்தையரிடமே
சேர்ந்து விடும். அவ்வுயிருக்கும் அமைதி ஏற்பட்டு விடும்.
பெற்றோர்களுக்கும் அக்குழந்தையை வளர்த்தமையால் அவர்களின் வினைகளும் ஒரு
பகுதி கழிந்து விடுகின்றன. இவ்வாறு இருவர் வினைகளும் கழிந்த ஒரு
கூற்றுதான் அக்குழந்தையின் முடிவு.

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை பற்றி நாம் பல கதைகளைச் சொல்லக்
கேட்டிருக்கிறோம். இறந்த உயிர் வானுலகம் செல்லும். வானுலகத்தில்
சொர்க்கம், நரகம் உண்டு. நல்வினை செய்த உயிர்கள் சொர்க்கத்திற்குச்
சென்று இன்பமுறும். தீவினை செய்த உயிர் நரகம் சென்று அங்குள்ள நெருப்புக்
கொப்பரையில் விழப்படச் செய்தும், செக்கிழுத்தும், பாம்பு, பூரான் போன்ற
விஷ ஜந்துக்களாலும் துன்புறும் என்று கருடபுராணத்தில் கதை
சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு, மனிதனுக்கு அச்சமூட்டி, தவறுகள் செய்யாது
இருப்பதற்காக, தீவினைகள் செய்யாது இருப்பதற்காக பல கதைகள் சொல்லப்பட்டு
வந்தன. அக்காலத்தில் அவை நன்மையே அளித்து வந்தன.

இக்காலத்தில் இதை நம்புபவர்கள் இல்லை. இந்த விஞ்ஞான காலத்தில் சொர்க்கம்,
நரகம் என இரு உலகங்கள் பூமிக்கு மேல்புறமாக இருக்கிறது என்பதை நம்பவும்
முடியாது. காலத்தால் அக்கதைகள் மறைந்து விட்டன. உண்மையான சிந்தனைக்குரிய,
அறிவுக்குப் பொருத்தமான நல்ல கருத்துக்களை, நம் பழக்கத்தின் காரணமாக
ஏற்றுக் கொள்ள சிரமமாக இருந்தாலும் உண்மையான கருத்துக்களை மனித குலத்தின்
வாழ்வின் நலத்திற்காக வெளியிட்டுத் தான் ஆக வேண்டும். இவற்றை
இன்றில்லையென்றாலும் பிற்காலத்தில் வரும் சிந்தனையாளர்களுக்கு இது
மிகவும் அவசியம். மரணமென்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமானால்
உயிரினத்தில் அமைந்துள்ள கருமைய இரகசியங்களைத் தெளிவாக உணர்ந்து கொள்ள
வேண்டும்.

திருக்குறள் - ஒரு அறிமுகம

திருக்குறள் - ஒரு அறிமுகம்,


தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை.

அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.

"அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள்.

அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.

அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

மிளகு

மிளகு
நறுமனப் பொருள்களின் அரசன் என்று போற்றப்படும் மிளகு உடலுக்கு நல்லதா?
உடல் நலத்துக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் நல்லது!

மிளகில் சோர்வு அகற்றி இடையறாத ஊக்கம் தருகிற நறுஞ்சுவையும், நறுமணமும் உள்ள பொருட்கள் நீக்கமற நிறைந்துள்ளன.

100 கிராம் கறுப்பு மிளகில் புரதம் 11.2% கொழுப்பு 6.8% என்று உள்ளது. இதில் 300 கலோரி கிடைக்கிறது.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது.

குழந்தைகள் மட்டுமல்ல, வாழ்வில் முன்னேற முயற்சிப்பவர்களுக்குத் தேவையான சக்தியையும் வழங்கும். அதற்கு ஏற்ப கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், புரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளாறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட்ட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து அரைத்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.

தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், அறவு மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

உடம்பு வலி, பற்சொத்தை உள்ளவர்களும், மலட்டுத் தன்மை உள்ளவர்களும் மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.

மிளகு இரசமும், மிளகு சேர்ந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்
குருவே துணை

Friday, July 8, 2011

இறைவழிபாடு

இறைவழிபாடு

தெருவில் “Keep your Clean & Beauty” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைப்பார்த்த நாட்டுப்பற்று மிகுந்த சர்தார்ஜி சுற்றுச்சூழல் கெட்டுப்போய்விடும் என்ற நல்லெண்ணத்தில் தன் வீட்டில் வரும் குப்பை, கூளங்கள், வீணான உணவுப் பொருட் களை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் போடாமல், தன் வீட்டு அறை ஒன்றிலேயே சேகரித்து வந்தார். இப்போது வீட்டின் உள் சூழல் கெட்டுப் போய்விட்டது. நாற்றம். துர்நாற்றம்.
தன் தவறை உணராத சர்தார்ஜி வீட்டின் வெளிப்புறம் நாற்றத்தினை உருவாக்கும் அழுகிய பொருட்கள் ஏதேனும் காணப்படுகிறதா? என தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.
சர்தார்ஜியின் தவறை சுட்டிகாட்ட நினைத்த அவர் மனைவியின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது. சர்தார்ஜி தொடர்ந்து அதே தவறை (குப்பையை வீட்டிற் குள் பாதுகாக்கும் ) செய்து வந்தார்.
இறுதியில் மனைவி, மக்கள் அவரை விட்டு பிரிந்து சென்றனர். பின் பக்கத்து வீட்டி னரும் உடல் நலன் கருதி வீடுகளை காலி செய்து பாதுகாப்பான பகுதிகளுக்கு குடி சென்று விட்டனர்.
சர்தார்ஜி குடும்பத்தார், உறவினர், நண்பர்களை இழந்தாலும், தன் செயலை மாற்றிக் கொள்ளத் தயாராகவில்லை.
சர்தார்ஜியை போன்றே நம்மில் பலரும் அவ்வப்போது ஏற்படும் சிறு மற்றும் பெரிய பிரச்சனைகள், தோல்விகள், அவமானங்கள், எதிர்மறை அனுபவங்கள், சண்டை சச்சரவு களால் மனதில் உருவாகும் எதிர்மறை எண்ணங் கள், நெருடல்கள், ஆத்திரம், கோபம், வன்மம், பகை, போட்டி மனப்பான்மை, பழிவாங்கும் எண்ணம், போன்ற குப்பைகளை அவ்வப்போது மனதிலிருந்து அகற்றி சுத்தப்படுத்தாமல், மனதை மாசுபடுத்த அனுமதித்து விடுகிறோம். விளைவு மனமென்னும் கோவில், தீய எண்ணங்களின் கூடாரமாகவும், பிறப்பிடமாகவும் மாறுகிறது. பயன்மிக்க, உயர்ந்த கருத்துக்கள், திட்டங்கள் மற்றும் நேர்மறை செயல்கள், (அன்பு, கருணை, உதவி, உழைப்பு, மன்னிப்பு, மாண்பு ) உருவாக வேண்டிய மனம் அமைதியின்மை, வெறுப்பு, பழிவாங்குதல், தோல்வி மனப்பான்மை, வெறுமை, அவமானம், துக்கம், போன்ற எதிர்மறை இயல்புகளின் புகலிடமாக மாறி விடுகின்றது. மனிதன் இத்தகைய நிலைதான் இன்றைய சமுதாயத்தின் பல்வேறு எதிர்மறை செயல்களான கொலை, தற்கொலை, விவா கரத்து, மனநிலை பாதிப்பு, அடிதடி, கற்பழிப்பு, கொள்ளை மற்றும் பல விபத்துக்களுக்கான அடிப்படை காரணமாக அமைகின்றது. அதை விட நம் சாதனை வாழ்விற்கு தேவையான குடும்ப, சமூக, நட்பு வட்ட ஆதரவு தளம் குறைய துவங்குகின்றது. சந்தோஷம், சாதனை கனவுகள், சிறந்து விளங்குகின்றன. ஆகவே நம் வாழ்வில் என்ன என்ன பிரச்சனைகள், அவமானங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், காயங்கள், ஏற்பட்டி ருந்தாலும் அவை யார் காரணமாக வந்திருந் தாலும், நாம் அவ்வப்போதே அந்த எதிர்மறை அனுபவங்கள் காரணமாக நம் மனதில் ஏற்படும் பகையுணர்வு, பழிவாங்கும் உணர்வு, துக்கம், கோபம், மற்றும் அவமானம் போன்ற அசுத்தங் களை சுத்தப்படுத்த முயற்சி எடுப்பது நல்லது.
மனதின் மாசை அகற்றி, புத்துணர்வு உருவாக்க, அவ்வப்போது நேரம் ஒதுக்குவது நல்லது. அப்படி மனதில் ஏற்படும் காயங்களை ஆறவைத்துவிட்டால், பிற்காலத்தில் பெரிய மனநோய்கள் வருவதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். எதிர்மறை தாக்கங்களையும், விளைவுகளையும் தடுத்து நிறுத்த முடியும். குடும்ப உறவுகள், நட்பு வட்டம் குறைவதை ஆதரவு தனம் சுருங்குவதை கட்டுப்படுத்த முடியும், நம் சந்தோஷ, சாதனை வாழ்வு சாத்தியமாகும்.
மனதை சுத்தமாக வைத்திருப்பது எப்படி
நண்பர் ஒருவர் மகிழ்ச்சியான ஒரு கொண்டாட்டம் இருக்கிறது. வாருங்கள் என்று அழைப்புவிடுத்தார். வீட்டிற்குச் சென்றேன். வீடே திருவிழா கோலம்தான் சந்தோஷத் திற்கான காரணத்தை தெரிந்தால், ஆச்சரியப் பட்டு போவீர்கள்.
நண்பர் குடும்பத்திற்கும், அவர் உறவினர் குடும்பத்திற்கும் இடையே நிகழ்ந்து வந்த அடிதடி, போட்டி, பொறாமை, கொலை, பனிப்போர் போன்றவற்றை பேசித்தீர்த்து மீண்டும் நல்லுறவை உருவாக்கியதைக் கொண் டாடும் கொண்டாட்டம் தான் அன்றைய சந்தோஷ நிகழ்வு,
தலைமுறை, தலைமுறையாக இருந்து வந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை எடுத்த நண்பர் பேச்சு வார்த்தையின் போது பிரச்சனைக்குரிய 1 ஏக்கர் நிலத்தில், 70 சென்ட், நிலத்தை மனமுவந்து எதிர்தரப் பினருக்கு விட்டுக் கொடுத்ததனாலேயே பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இதைதான்
விட்டுக் கொடுப்பவர்கள்
கெட்டுப் போவதில்லை.

கெட்டுப் போபவர்கள்
விட்டுக் கொடுப்பதில்லை.

என்ற பொன் மொழி உணர்த்துகிறது.
இப்போது இரு குடும்பத்தினரும் பகைமை உணர்வை மறந்ததனால்

(அ) மன அமைதியோடு வாழ முடிகின்றது.
(ஆ) மன அமைதியோடு தொடர்புடைய உடல் நலம் உருவாகின்றது.
(இ) அவர்கள் சக்தி, நேரம் மற்றும் திறன்கள் சண்டை சச்சரவுகளில் வீணாகிக் கொண்டிருந்தது. தடுத்து நிறுத்தப்பட்டு, பயனுள்ள வகையில் பயன்படுத்த துவங்கப்பட்டிருக்கின்றது.
(ஈ) குடும்பங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை யால் சமூகசூழல் செம்மைப்படுத்தப் பட்டுள்ளது.
(உ) இரண்டு குடும்பத்தினருக்கு மட்டுமல்ல சமூதாயத்தினருக்கும் நாளை என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்ற பயஉணர்வு வேரறுக்கப்பட்டுவிட்டது.
(ஊ) மன்னிக்கும் தன்மை நம்மிடம் தன்னம் பிக்கையை, நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து நம் ஆளுமையை வளப்படுத்து கின்றது.
(எ) பகைமையை மறந்து, நட்புறவை வளர்ப் பதன் மூலம் அன்பு நிலை நாட்டப் படுகின்றது. உறவுகள் மலர்கின்றது.
மன்னிக்கும் செயலினை உளவியல் வல்லுநர்கள் மனக்குளியல் அல்லது உணர்வு விடுதலை அல்லது எண்ண விடுதலை என்று கூறுகிறார்கள்.
ஏனென்றால் பழிவாங்கும் எண்ணம், கோபம், வெறுப்பு ஆகிய தன்மைகளுடன் வாழ்ந்தால், அவை நம்மை ஆள்கின்றது. ஆட்டுவிக்கின்றது.
ஆனால் மன்னிக்கும் மாண்புடன், தீமை செய்தவருக்கு மன்னிப்பு அருள்வதனால் நாம் நம் உணர்வுகளை ஆட்சி செய்கின்றோம். நம் விருப்பப்படி நம்மை, நம் எண்ணங்களை, செயல்களை நல்ல திசைகளில், வாழ்வின் உன்னத குறிக்கோளை நோக்கி பயன்படுத்துகிறோம்.
சாதனைகள் சாத்தியமாகிறது. சந்தோஷம் சகஜமாகின்றது. ஆகவே
மன்னிப்போம், மறப்போம்,
சரித்திரம் படைபோம்.
10. இது பிரார்த்தனை நேரம்
கடவுள் இருக்கின்றாரா? இல்லையா ? என்ற கேள்வி அவ்வப்போது பலரால் பல பகுதிகளில் எழுப்பப்பட்டு வந்த போதும், இன்றளவும் பெருவாரீயான மக்கள் கடவுள் நம்பிக்கையுடன், தொடர்ந்தோ, அவசியப்படும் போதோ, அவசரங்களுக் காகவோ, இறை வழிபாடுகள், பிராத்தனைகளில், ஈடுபட்டு வருவது கண்கூடு.

இறைவழிபாடு, ஜெபம், தரிசனம், பிரார்த் தனை, பூஜை, தியானம், கூட்டுப் பிரார்த்தனை , அர்ச்சனை, ஓதுதல் என எத்தனையோ பெயர் களில், வழிகளில் இறைவனை துதிக்கின்றனர், வணங்குகின்றனர், வேண்டுதல்களை சமர்ப்பிக் கின்றனர்.
பிரார்த்தனை பலனளிக்குமா?

இறைவனை பற்றியும், பிராத்தனையின் பலன்களை பற்றியும், இருவேறு கருத்துக்கள் இருந்து வந்தாலும், அனுபவபூர்வமாகவும், அறிவியல் ஆய்வுகள் மூலமாகவும், ஆன்மீக அனுபவ பகிர்வுகள் மூலமாகவும், இறைவழிபாடு, வேண்டுதல், பிரார்த்தனை, கூட்டுப்பிரார்த்தனை, துôரதேச பிரார்த்தனை (Distant Prayer) அடுத்தவர் களின் பிரார்த்தனை (Intercessory Prayer) ஆகிய வற்றை நம்பிக்கையோடு பயன்படுத்துபவர்கள் அளப்பரிய பலன்களை அனுபவித்து வருவதற் கான ஆதாரங்களைக் காண முடிகின்றது.

பிரார்த்தனை எப்படி பலனளிக்கிறது?
பிரார்த்தனை அல்லது ஜெபம் அல்லது இறைவழிபாடு வழங்கும் பலன் ஆன்மீக பலம், மதம் என்பது ஆன்மீக பலத்தை அடைய நாம் பயன்படுத்தும் ஒரு பாதை மட்டுமே. ஆன்மீக பலம் என்பது இறைவனிடம், பரம்பொருளிடம், நாம் கொள்ளும் நம்பிக்கையில் விளைவாக கிடைக்கும் அருள் பலனே ஆகும். இறை நம்பிக்கை மூலம் கிடைக்கும் ஆன்மீக பலம் நமக்கு,

(அ) நம் மீதே நம்பிக்கையை உருவாக்குகின்றது. எத்தகைய சூழலிலும் நாம் பயப்படத் தேவையில்லை. இறைசக்தி என்னை காத்தருளும் என்ற அபார நம்பிக்கையை வழங்குகிறது. ஆன்மீக பலம் மூலம் கிடைக்கும் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை உடையவர்கள், எத்தகைய நோய்கள், துன்பங்கள் அல்லது தோல்விகள் ஏற்பட்டாலும், எளிதில் மீண்டு சகஜ நிலைக்கு வந்து விடுவதாக பல்வேறு உளவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்து கின்றன. ஆகவே பிரார்த்தனை, இறைவழிபாடு மற்றும் இறை நம்பிக்கை மூலம் கிடைக்கும் ஆன்மீக சக்தி நாம் எத்தகைய எதிர்மறை சூழ லிலும் துணிவுடனும், சந்தோஷ மனநிலை யுடனும் சாதனை வாழ்வு வாழ உதவுகின்றது.

(ஆ) துன்பங்கள் அகலும், நன்மைகள்
இறை நம்பிக்கை மற்றும் தொடர்ந்த பிரார்த்தனையுடன் வாழ்ந்து வருபவர்களிடம், தவறுகள், அநியாயங்கள், துரோகம், ஏமாற்றுதல், பொறாமை போன்ற எதிர்மறை குணநலன்களின் தாக்கம் குறைவாக காணப்படும். நாம் தீமைகள் செய்யாதவரை நமக்கு தீங்குகள் விளையும், வாய்ப்புகள் மிக மிக குறைவே. அடுத்த நிலையில் இறை அன்பு உடையவர்கள் அடுத்தவருக்கு முடிந்த அளவு நன்மைகள் செய்து வருவார்கள். பலன் அவர்களுக்கும் நன்மைகள் அதிகமாக விளைந்து வரும்.

(இ) இறை நம்பிக்கை ஆணவத்தை
அடக்கி வைக்க உதவுகின்றது.
ஆணவமற்ற ஆளுமை அன்பு, பண்பு, அமைதி, பாசம், எளிமை, மனிதாபிமானம் உள்ளிட்ட சந்தோஷ சாதனை, வாழ்விற்கு தேவை யான அனைத்து குணநலன்களுக்கும் அடிப்படை யாகின்றது. இவை அனைத்திற்கும் மேலாக, பிரார்த்தனையோடு கூடிய இறைநம்பிக்கை.

1. உடல் நலம் 2. மனநலம் 3. தன்னம்பிக்கை 4. எண்ணத்துôய்மை 5. நட்பு வட்டம் 6. பாது காப்பு உணர்வு

என எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கு கிறது. ஆகவே கடவுள் நம்பிக்கை, இறைவழிபாடு மற்றும் பிரார்த்தனை நம் வாழ்வில் சந்தோஷத் தையும், சாதனைகளையும் வாரி வழங்கும் அட்சய பாத்திரம் என்பதை உணருவோம். சந்தோஷ சாதனை சரித்திரத்தை எழுதத் துவங்குவோம்.

வெற்றி பெற வழி

வெற்றி பெற வழி

தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலும் பிற்காலத்திலும் துன்பம் வராத செயல்கள் செய்ய வேண்டும்.

கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும்.

இது தான் வேதங்கள், புராணங்கள் சொல்லும் சாரம்(Essence) ஆகும்.
ஏதோ சந்தர்ப்ப வசத்தால் பிறருக்கும் துன்பம் வந்து விடுகிறது. அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை.

துன்பத்தைத் தீர்க்கிறபோதும், அதனால் நமக்கு துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமக்கே துன்பம் வந்து, நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும்படி கெஞ்சும் நிலை வந்துவிடக் கூடாது அல்லவா?
அந்த அளவில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்.

தனக்கும் துன்பமில்லாது பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில் நமக்கு என்னென்ன தேவையோ, அப்படிப்பட்ட சூழ்நிலை தானாகவே அமையும்.

இதற்காகக் கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெறவேண்டியதே இல்லை.
எந்த இடத்திலே, எந்த காலத்திலே, எந்த நோக்கத்தோடு,
எந்தச் செயலை நீ எவ்வளவு திறமையாகச் செய்கிறாயோ
அதற்குத் தகுந்தவாறே உனக்கு விளைவும் வரும், வெற்றியும் வரும்

வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி

Wednesday, July 6, 2011

புத்தர் கூறிய கதை

புத்தர் கூறிய கதை


(1931 ஆம் ஆண்டு பீகார் மானிலத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து 1953 ஆம் ஆண்டு சன்யாச தீட்சை பெற்றவர் ஸ்வாமி ஜோதிர்மயா நந்தா அவர்கள். அமெரிக்காவில் மியாமி என்ற மானிலத்தில் 1969 ஆம் ஆண்டு யோக ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆசிரமம் ஒன்றை நிறுவி யோக வழி முறைகளைக் கற்றுக் கொடுக்கும் அவர் பல்வேறு புத்தகங்கள் எழுதி உள்ளார். அவர் எழுதிய சிறு கதைகள் மனதை சிந்திக்க வைப்பவை )



ஒரு முறை புத்தருடைய சீடர்களில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அவர்களுடைய அறியாமையை விலக்கி, அஹிம்சா வழியை போதிக்க எண்ணிய புத்தபிரான் அவர்களுக்கு கீழ் கண்ட கதையைக் கூறினார்.



முன்னொரு காலத்தில் பனாரஸ் என்ற ( வாரணாசி) பகுதியில் கௌசலா என்ற பகுதியை திர்கதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஆனால் பக்கத்து நாட்டு அரசனான பிரும்மதத்தா என்ற மன்னன் எல்லா நாடுகளின் மீதும் படையெடுத்தபடி கௌசலா நாட்டையும் கைப்பற்றிய பின் அந்த அரசனையும், அரசியையும் கொன்று விட்டால் பிறகு வேறு எவரும் தலை தூக்க முடியாது என எண்ணியதால் அவர்களைத் தேடத் துவங்கினான். ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் தப்பி ஓடி மாறு வேடத்தில் தங்கி இருந்து தமது நண்பனான ஒரு குயவன் வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது ஒரு குழந்தையும் பிறந்து பெரியவனாகியது. ஆனாலும் பிரும்மதத்தா அவர்களை கொன்று விட வேண்டும் என்ற கவலையில் அவர்களை தேடிக் கொண்டு இருந்தான்.



ஒரு நாள் திர்கதியின் மகன் திர்காயு வெளியில் சென்று இருந்த பொழுது மாறு வேடத்தில் இருந்த மன்னனை அடையாளம் கண்டு கொண்ட முடி வெட்டுபவன் காசுக்கு ஆசைப்பட்டு அவர்களை அரசனிடம் காட்டிக் கொடுத்துவிட அவர்களை கைது செய்த அரசன் அவர்களை மக்கள் முன் சிரச்சேதம் செய்து கொல்ல ஏற்பாடு செய்தான். அந்த கொடுமை நடக்க இருந்த இடத்தில் கூடி இருந்த மக்கள் மத்தியில் திர்காயுவும் இருந்தான். மரணம் அடைய இருந்த திர்கதியோ எங்கே தன்னுடைய மகன் கோபப்பட்டு கூட்டத்தில் இருந்து வந்து சண்டையிடத் துவங்கி விடுவானோ, அப்படி வந்தால் அவனையும் அல்லவா மன்னன் கொண்று விடுவான் என பயந்து, உரத்த குரலில் கூவினான் ‘ மகனே, நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே, வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது, அஹிம்சையே சிறந்த வழி’ அதைக் கேட்ட மன்னன் அதன் அர்த்தம் தெரியாமல் குழம்பினான். ஆனால் அவன் புரிந்து கொண்டான் கூட்டத்தில் திர்கதியின் மகனும் உள்ளான். ஆகவே திர்கதியையும், அவன் மனைவியையும் கொன்ற பின் திர்காயுவைத் தேடினான், அவன் கிடைக்கவில்லை. திர்காயுவின் மனதில் ஆத்திரம் நிறைந்து இருந்தது. தன் பெற்றோரைக் கொன்ற மன்னனை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருந்தான்.



திர்காயு யானைகளை அடக்குவதில் சிறந்து இருந்ததினால் அவனுக்கு அரண்மணையில் யானைக் கொட்டத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய சாதூர்யத்தை பலமுறை கண்ட மன்னன் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனை தன் காவல் பணியில் வைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு திர்காயு யார் என்பது தெரியாது. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற பொழுது அவர்கள் இருவரைத் தவிற மற்றவர்கள் எங்கோ போய் விட்டனர். களைப்படைந்த மன்னனை ஒரு மர நிழலில் தன் தொடை மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உறங்குமாறும், அதன் பின் கிளம்பிப் போகலாம் எனவும் திர்காயு கூற மன்னனும் உறங்கத் துவங்கினான். தான் எதிர் பார்த்து வந்த தருமணம் வந்து விட்டது என எண்ணிய திர்காயு மன்னனைக் கொல்ல வாளை கையில் எடுத்த பொழுது, தன் தந்தை கூறிய அறிவுறை மனதில் தோன்ற தனது முடிவை மாற்றிக் கொண்டு வாளை உறையில் வைக்க, திடுக்கிட்டு எழுந்த மன்னன் கூறினான் ‘எனக்கு பயமாக உள்ளது. என்னைக் கொல்ல எவனோ என் அருகில் வாளை எடுத்துக் கொண்டு வந்ததைப் போல இருந்தது.’ .அதற்கு திர்காயு பதிலளித்தான் ‘ அது நான்தான்’. மன்னன் கதறினான், கெஞ்சினான் ‘ ஐயோ என்னைக் கொன்று விடாதே, விட்டுவிடு’. திர்காயு அமைதியாகக் கூறினான் ‘உன்னை நான் விட்டு விடுகின்றேன். என்னையும் நீ கொல்ல மாட்டேன் என வாக்குறுதி கொடு’. உடனேயே மன்னனும் வாக்குறுதி அளிக்க தான் யார் என்பதை வெளிப்படுத்தினான் திர்காயு.



அதன் பின் சற்று நேரம் கழித்து மன்னன் திர்காயுவிடம் அவனுடைய தந்தை தான் மரணம் அடையும் முன் கூறிய ‘ நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே,’ என்ன கூறினாரே அதன் பொருள் என்ன என்பதை விளக்குமாறு கேட்க திர்காயு கூறினான் ‘நீண்ட தூரம் பார்க்காதே என்றால் உன் வெறுப்பை வளர்த்துக் கொண்டே இருக்காதே என்று பொருள், குறைந்த தூரத்தையும் பார்க்காதே என்றால் அவசரப்பட்டு இப்போது எதுவும் செய்து விடாதே என்ற அர்த்தம். அன்று அவசரப்பட்டு நான் ஓடி வந்து உங்களை கொன்று இருந்தால் மக்கள் என்னைக் கொன்று இருப்பார்கள். அதன் பின் என் ஆட்கள் என்னைக் கொன்றவர்களை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டும் தொடர் கதையாகி இருக்கும். இப்போது நாம் இருவரும் ஆத்திரத்தை விட்டுவிட்டு அஹிம்சையை பின் பற்றினால் அனைவருக்கும் நல்லது அல்லவா, என்று கூற விரோதிகள் இருவரும் இணைந்தனர்.



இந்த கதையைக் கூறிய புத்தர் தம் சீடர்களுக்கு வெறுப்பை வளர்த்துக் கொள்வது ஒருவருக்கொருவர் அழிய அவரவர்களே காரணமாகி விடுவதினால், ஆத்திரத்தை அடக்கி, அமைதியாக எதற்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.
by Vethathiriyam for World Peace on Thursday,

Saturday, July 2, 2011

அன்பு

அன்பு

அன்பைக் கொடுத்துதான் அன்பைப் பெற வேண்டும்.ஆனால்,வெறுப்பைக் கொடுத்து அன்பை எதிர்பார்க்கிறோம்.
அன்பைப் பற்றி பேச ஒரு வார்த்தை போதும்.ஆனால் அன்போடு வாழ ஒரு வாழ்கையே வேண்டும்...

அன்பின் ஒரே எதிரி கோபம்தான்.கோபத்தின் ஒரே நண்பன் வெறுப்பு.வெறுப்பின் காரணம் எதிர்பார்ப்பு.
எதிர்பார்த்தது நடக்கவில்லை எனில் வெறுப்பு வருகிறது.கோபமும் கூடவே வந்துவிடும்..கோபம் வந்தால் அன்பு பறந்தோடி விடும்..
எதையும் யாரிடமும் எதிர் பார்க்க வேண்டாம்..வருவதை ஏற்றுக்கொள்வோம்...வாழ்க வளமுடன்

அன்பான மனிதராக வாழ்வதற்கு
நம் மனதில் பிறரைப் பற்றிய அன்பான வார்த்தைகள், கருத்துகள்.
அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்கள்.இவற்றை பதிய வைக்க வேண்டும்.பிறரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு,வெளியில் அன்பு காட்ட முனைந்தால் அது வெறும் நடிபாகத்தான் இருக்கும்.

பிறரது பிரச்சினைகளை நம் பிரச்சினைகள் போல எடுத்துகொண்டுஆறுதல் கூறுவது, பிரச்சினைகள் தீர வழி காண்பது, அவர்களுக்காக சங்கல்பிப்பது, இறைவனை வேண்டுவது, முடிந்த உதவிகளை செய்து வாழ்வது, பிறர் தவறை ஏற்றுக் கொள்வது, பொறுத்துக்கொள்வது, சகித்துக் கொள்வது. இவை அன்பான மனிதரின் அடையாளங்கள்