Tuesday, December 14, 2010

TODAY'S THOUGHT

புதிய சிந்தனை – II
சிந்தனை1: முடிந்தால் இதற்கு ஒரு வழிகண்டுபிடிப்போம் இல்லாவிட்டால் நாமே ஒரு வழியை உருவாக்குவோம்.
சிந்தனை2: பாசிட்டிவ் ஆகச் சிந்திப்பது.
 ‘ஏன் முடியாது?’ என்று பேசிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு ‘எப்படியெல்லாம் செய்ய முடியும்?’ என்று யோசிப்பது.
சிந்தனை3: ‘இடம் மாறித் தேடுவது’.
இதற்கு நம் துறையின் மையத்தை விட்டு ஓரமாகப் போய்த் தேடலாம். நம் தொழில்துறையும் வேறு துறைகளும் சந்திக்கும் குறுக்குச் சாலைகளில் தேடலாம். இந்தக் கணத்தில் வேறு ஏதோ ஒரு தொழில்துறையில் இருப்பவர், உங்களுக்கு இருக்கும் அதே மாதிரி பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருக்கலாம் அல்லவா?
உதாரணம்: விப்ரோவின் தொலைக்கட்டமைப்பின் (Remote Infrastructure) தலைவராக இருக்கும் ஜி. கே. பிரசன்னாவிடம் இதற்கு ஓர் எளிய பாலிசி இருக்கிறது. ‘ஒன்றைச் செய்ய முடியாது என்றால், அதற்கேற்ற கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனபதுதான் காரணம். அந்தக் கருவியை முதலில் செய்வோம். முடியாததெல்லாம் தானே முடிந்துவிடும்’.
இந்தத் தத்துவம், விப்ரோவையும் பிரசன்னாவையும் தொலைக் கட்டமைப்பு நிர்வாகத்தில் உலக அளவில் முன்னோடிகளாக்கிவிட்டது! இப்போது அவர்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள கம்ப்யூட்டர்களையும் மற்ற சாதனங்களையும் இந்தியாவில் இருந்தபடியே நிர்வாகம் செய்கிறார்கள்.
டாட்ஸ்கின்னர் சொன்னதை சற்று மாற்றிச் சொல்வதென்றால், ‘நீங்கள் வரைபடத்திலேயே இல்லாத இடங்களுக்கு பயணம் புறப்பட்டு விட்டீர்கள் என்றால், அந்த இடங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் எனபது முக்கியமல்ல; நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், தகவல்கள் எங்கிருந்து எப்படிப் பெறுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
வாழ்க  வளமுடன். குருவே துணை.

No comments: