Wednesday, March 21, 2012

ஊனுடம்பே ஆலயம்

உடலும் உயிரும் இசைந்து வணங்கி இயங்கும் நிலையில் இணைக்கப் பெற்று வாழ்ந்து வருபவன் மனிதன். அற்புதமான தொகுப்பாக உள்ள உடல் அமைப்பு, வியத்தகு ஆற்றல்களை உள்ளடக்கமாகக் கொண்ட உயிர்ச்சக்தி, குறுகியும், விரிந்தும், நுணுகியும் இயங்கத் தக்க அறிவுத் திறன் இவை இலட்சக்கணக்கான ஆண்டுகளாகக் கருமூலம் பிறவித் தொடராக மேலும் மேலும் சிறந்து மிகவும் உயர்ந்த நிலையை எய்தியுள்ளன.




ஒரு உயர்ந்த குறிக்கோளோடு மனித உயிர்கள் இவ்வுலகுக்கு வந்துள்ளன. மன உணர்வை விரிந்த அளவில் வளர்த்துக் கொள்ளவும், அறிவில் முழுமை பெற்று இயற்கையை உணர்ந்து, ரசித்து அதனோடு ஒன்றி வாழ்ந்து நிறைவு பெறும் நிலையான அமைதியைப் பெறவும் உள் நோக்கமாக அமைந்துள்ளதே மனித உயிர்.


அறிவின் உயர்வு பெற்று உயிரின் மதிப்பும் சிறப்பும் உணர்ந்து நிறைவு பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கமெனினும், அது வெற்றி பெற உடலை நலமோடும் வளமோடும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.




-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No comments: