Wednesday, May 9, 2012

தோப்புக்கரணம்

நமது முன்னோர்கள் பிடித்த ""தோப்புக்கரணம்"" சர்வதேச்ப் புகழ் பெற்ற அமெரிக்காவின் "யேல்" மருத்துவப் பல்கலைக் கழகம் சொல்கிறது... தோப்புக்கரணத்தின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்த இந்தப் பல்கலை., டாக்டர்கள் குழு, 'தினமும் காலையில் 20 முறை தோப்புக்கரணம் போட்டால் போதும். காது மடல்களைப் பிடித்து நெற்றியில் குட்டிக் கொள்ளும்போது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம். அதோடு, மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும்; உடல்நலனும் மேம்படும்' என்று அறிவித்துள்ளது. இதோடு, இதற்கு 'சூப்பர் பிரைன் யோகா' என்று ஒரு புதுப் பெயர் சூட்டி, மருத்துவப் பாடத்திட்டத்திலும் இணைத்துள்ளனர். தோப்புக்கரணம் போடுவதால், மூளை சுறுசுறுப்படையும், மறதி நோயை விரட்டியடிக்கும் என்று இப்போது விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மூளைக்கும் காதுகளுக்கும் ஒருவகையில் நேரடி தொடர்பு உள்ளது. இதை சீனப்பாரம்பரிய மருத்துவர்களும், இந்திய முனிவர்களும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். அதனால், சீன மருத்துவர்கள் காதுப்பகுதியில் அக்குபஞ்சர் முறைகளைப் புகுத்தினர். முனிவர்களும் கடவுள் முன் தோப்புக்கரணம் போடுவதைக் கையாண்டனர். நவீன மருத்துவ உலகில், பிரான்சைச் சேர்ந்த ‘பால்நோஜியா’ என்ற நரம்பியல் நிபுணர் 1950 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், இதுபற்றி ஆராய்ந்தார். காதுகளுக்கும், மொத்த உடல் உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதை அவர் அறிந்தார். இந்தத் தொடர்பு கருவிலேயே உருவாகிறது என்றும் கண்டறிந்தார். காது மடல்களைப் பிடித்துவிடுவதால் அதன் நரம்புகள் வழியாக மின்தூண்டல் ஏற்பட்டு, மூளையை சுறுசுறுப்படையச் செய்வதாக ‘யேல்’ பல்கலைக்கழகப் பேராசிரியர் ‘யூஜிங் ஆங்’ என்பவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மறதியைத் தவிர்த்து, ஞாபகசக்தி பெருகும் என்றும், ‘அல்சைமீர்’ என்ற மறதி நோயைக் குணமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘எரிக் ராபின்சன்’ என்ற மருத்துவர் கூறுகையில் , ‘ஞாபக மறதி நோயைக் குணப்படுத்தும் மருந்து இல்லா வைத்தியம்தான் தோப்புக்கரணம்’ என்று தெரிவித்துள்ளார். ஒருவர் தினமும் தோப்புக்கரணம் போடுவதால், கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கின்றனவாம். * மூளையின் செயல்பாட்டை எந்தப் பாதிப்பும் இல்லாமல் வேகப்படுத்துகின்றது. * வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும். * ஒரு நாளில் அதிக பணிகளைச் செய்ய முடியும். * மூளைக்கு அதிக சக்தியைக் கொடுக்கின்றது * பதற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகின்றது. * எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் கல்வித்திறனை அதிகப்படுத்துகின்றது. இடது காதைப் பிடிக்கும் போது வலது பக்க மூளை தூண்டப்படுகின்றது. வலது காதைப் பிடிக்கும் போது இடதுபக்க மூளை தூண்டப்படுகின்றது. அதைமுறைப்படி செய்தால் நல்லது. வலது காதை இடது கையால் பிடிக்க வேண்டும். இடது காதை வலது கையால் பிடிக்க வேண்டும். காது மடலின் கீழ்ப்பகுதியை (கம்மல் போடும் பகுதியை) பிடித்து அழுத்தியபடி கையின் பெருவிரலை முன்பகுதியிலும், ஆட்காட்டி விரலை பின்பகுதியிலும் வைத்துப் பிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரு காதுகளையும் பிடிக்கும் போது இடதுகை உள்ளேயும், வலது கை வெளியேயும் இருக்க வேண்டும்.

No comments: