Friday, April 27, 2012

உறவுகள் மேம்பட

வேதாத்திரிய சிந்தனைகள் : - ''உறவுகள் மேம்பட'' குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், மேலும் பெரிதாகாமல் இருக்கவும் பின் வரும் கருத்துக்களை பின்பற்றினால் போதும் : - (8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (9) எல்லோரிடத்திலும், எல்லா விசயங்களையும், அவர்களுக்கு -----சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள் (10) கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள் (11) அற்ப விசயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள் (12) உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், -----கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள் (13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கிற நிகழ்ச்சிகளைத் -----தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (14) மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய, -----இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை -----சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள் (16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லா வார்த்தைகளையும், -----தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து, -----அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள் (17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள் (18) பிரச்சனைகள் ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி -----வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் -----துவக்க முன்வாருங்கள். வாழ்க்கை இன்பமாக அமையும். வாழ்க வளமுடன்.

No comments: