Sunday, October 9, 2011

இயற்கை உணவு-NATURAL FOOD HABIT

இயற்கை உணவு-NATURAL FOOD HABIT
ஸ்பேஸ் லா(வெளி விதி)
வெளி விதி என்ன சொல்கிறதென்றால் மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த
இயற்கை உணவு மிகுதியாக கிடைக்கிறதோ அதை உண்டு வந்தாலே போதும்.
வெளிநாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை. வேறு எந்த
ஜீவராசிகளும் உணவை இறக்குமதி செய்து உண்பதில்லை. அவைகள் அவை வசிக்கும்
பகுதியில் என்ன உணவு கிடைக்கிறதோ அதையே உண்டு வாழ்கின்றன. எதில் புரதச்
சத்து, மாவுச் சத்து, கொழுப்பு, விட்டமின்கள், உப்புகள் இருக்கிறது என
பார்த்து உண்பதுல்லை. ஆனால் அவை தங்களின் வாழ்நாளை ஆரோக்கியமாகவே
கழிக்கிறது. இந்தியாவில் மிகவும் எளிதாக கிடைக்கும் தேங்காய், பேரிச்சை,
வாழைப்பழம் இவற்றிலேயே வேண்டிய சத்துக்கள் அனைத்து உள்ளன. இவை வருடம்
முழுவதும் எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும். மேலும் அந்தந்த
சீசனில் கிடைக்கும் பழங்களையும் உண்ணலாம். (மாம்பழம், சப்போட்டா,
தர்பூஸ் போன்றவை). விலை அதிகமான பழங்களை வாங்க இயலாதவர்கள் தேங்காய்ப்
பால், காய்கறிகளின் ஜுஸ்கள், கீரை(புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை,
பாலாக்கு) ஜுஸ்கள் பருகலாம். டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள்,
புரதச்சத்து கொண்ட உணவுகள், ஆரோக்கிய பானங்கள் தேவையில்லை. இயற்கை உணவு
உண்டால் போதிய பலம் கிடைக்குமா என்ற சந்தேகம் கொண்டவர்கள் வெறும் இலை
தழைகளை மட்டுமே உண்டு வாழும் யானையையும் அது கொண்டுள்ள அபார வலிமையையும்
நினைத் துப் பார்க்கவேண்டும். யானை வேற்று ஜீவராசிகளின் பாலையும்
அருந்துவதில்லை. முட்டையையும் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதில்லை.

சமையலுணவில் குறைக்கவேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு
குறைக்க வேண்டியது மாற்று உணவு
(1) சர்க்கரை வெல்லம், கரும்பு சர்க்கரை கருப்பட்டி
(2) பொடி உப்பு கல் உப்பு
(3) கரையாத கொழுப்பு கரையும் கொழுப்பு
கொண்ட எண்ணெய் கொண்ட எண்ணெய்
(4) மிளகாய் மிளகு
(5) புளி எலுமிச்சை
(6) கடுகு சீரகம்
(7) காபி,டீ லெமன் டீ, ப்ளாக் டீ,
சுக்கு
காப்பி, வரக்காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி அவல், சிகப்பரிசி

இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம் தவிர) சமைத்த உணவை
தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும். இவை இயற்கை உணவு அல்ல.
இவற்றினால் சிறிது தீமை குறைவு.
சாறு உண்ணா நோன்பு (ஜுஸ்பாஸ்டிங்)

வெறும் நீர் அருந்தி உண்ணா நோன்பு இருக்க முடியாத பட்சத்தில் சாறு
உண்ணா நோன்பு இருக்கலாம். இதில் பழச்சாறுகள் மட்டுமே அருந்த வேண்டும்.

நன்மைகள்:
(1) உணவு திரவ வடிவில் இருப்பதால் ஜீரணத்துக்கு தேவைப்படும் ஆற்றல்
மிகவும் குறைவு. எனவே உடலின் ஆற்றல் முழுவதும் கழிவுகள்
வெளியேற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.
(2)உடல் எளிதாக ஆற்றலை கிரஹித்துக் கொள்ளும்.
(3)சாறுள்ள பழங்களின் ஜுஸ்கள் (திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி,
மாதுளம் பழம் போன்றவை) அதிகமான க்ளுக்கோஸ் சத் துக்களை கொண்டுள்ளதால்
உடல் நிலை பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய உதவுகிறது.
(4) மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டோர் இதை ஜீரணிக்க எளிதாக உணருவர்.
சாறு உண்ணாநோன்பின் போது கவனிக்க வேண்டியவை
(1) திரவ வடிவில் இருப்பதால் நார்ச்சத்து கிடைப்பதில்லை.
(2) மலச்சிக்கல் மற்றும் மூலவியாதி இருப்பவர்களுக்கு இது உகந்தது
அல்ல. அவர்கள் இயற்கை உணவை உள்ளது உள்ள படியே (நார்ச்சத்துடன்) உண்ண
வேண்டும்.
(3) சாறுண்ணா நோன்பின் போது மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் ஒரு நாளைக்கு
ஒரு முறை எனிமா எடுத்துக் கொள்ளலாம்.
இயற்கை உணவும் இரத்தத்தின்தன்மையும்

இரத்தம் காரத்தன்மை (ஆல்கலைன்) உடையது. இயற்கை உணவும் காரத்தன்மை
உடையது. எனவே இயற்கை உணவு எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன்
செய்யும். ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை (அசிடிக்) உடையது.
எனவே அது இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும். ஆனால் உடலோ மீண்டும்
இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும். அந்த போராட்டத் தில் உடல்
தோல்வியடையும் போது நாம் நோய்வாய்ப்படுகிறோம்.

அக்கு பிரஷர்(ஒருவரின் குணத்தை மாற்றுவது எப்படி?)

இது நோய்கள் நீங்க கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் கொடுக்கும்
ஒரு முறையாகும். (இது அக்குபங்சர் கிடையாது. இதற்கு ஊசியோ முறையான
படிப்போ தேவையில்லை), ஆனால் அக்குபிரஷர் மட்டுமே நோய்களை குணமாக்க
போதுமானதல்ல. இயற்கை உணவு உண்பதே நோய் குணமாக அஸ்திவாரமாகும்.
இயற்கை உணவும் உண்டு அக்கு பிரஷரையும் செய்து வந்தால் நோய் விரைவில்
குணமடையும். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலிருந்து வ ரும் நரம்புகளும்
உள்ளங்காலில் மற்றும் உள்ளங்கையில் முடிவடைகிறது என்ற் உண்மையை கொண்டு
அக்குபிரஷர் செயல்படுகிறது. பாதிக்கப்ப ட்ட பாகத்திற்குரிய பாயிண்டில்
நாம் நம் கைகளில் மற்றும் கால்களில் அழுத்தம் கொடுத்தால் ஒரு சிறிய
மின்காந்த அலை எழும்பி பாதிக்கப்பட்ட உறுப்பை சென்று அடைகிறது. இதனால்
பாதிக்கப்பட்ட பகுதி குணமடைய ஆரம்பிக்கிறது.
வலியுள்ள இடத்தில் அழுத்த வேண்டும் என்பது அக்குபிரஷரின் விதியாகும்.
பாதிக்கப்பட்ட பாகத்திற்குரிய பாயிண்டில் நாம் அழுத்தம் கொடுக்கும்
பொழுது நோயின் தன்மைக்கேற்ப வலி தெரியும். (இந்த வலி கொடுக்கப்படும்
அழுத்தத்தை விட வித்தியாசமாக இருக்கும்.) வலி அதிகமாக இ ருந்தால் அந்த
உறுப்பு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அதற்கு
பயப்படத்தேவையில்லை. இயற்கை உணவு உண்டு அக்கு பிரஷரும் சரியாக செய்து
வந்தால் நோயிலிருந்து விரைவில் விடுபடலாம்.

நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவையாவன:
(1)பிட்யுட்டரி
(2)பீனியல்
(3)அட்ரீனல்
` (4) பான்கிரியாஸ்
(5) நாபிச் சக்கரம்
(6) தைராய்டு
(7) பாலியல் சுரப்பிகள் ஆகும்.

இவை ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவை சரியாக செயல்பட்டால் ஒருவர் அன்பு, தைரியம், கருணை, வைராக்கியம்,
பொறுமை, எளிமை, பொது நலம், சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பர்.
இவை சரியாக செயல் படாவி ட்டால் அதிக காமம், கோபம், பிடிவாதம்,
அமைதியின்மை, சிடுசிடுப்பு, ஆடம்பர பொருட்கள் மேல் மோகம், கோழைத்தனம்,
அதிக ஆசை, சுயநலம், சோம்பேறித்தனம், சோர்வு, தற்கொலை எண்ணம், திருடும்
எண்ணம், கொடூரம், பயம் போன்றவற்றுடன் காணப்படுவர். எனவே மனரீதியான
பிரச்னை உள்ளவர்கள் இயற்கை உணவு, தியானம் மற்றும் அக்குபிரஷர்(முக்கியமாக
நாளமில்லா சுரப்பிகளில் எந்த சுரபி குறைபாடுடன் இ ருக்கிறது என
கண்டுபிடித்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்) செய்து வந்தால்
வியக்கத்தக்க மாறுதல்களை காணலாம். குற்றவாளிகளை கூட இந்த சிகிச்சை
முறையால் திருத்தி விட முடியும்.

நாளமில்லா சுரப்பிகளை தவிர மற்ற உறுப்புகளுக்கு கடைகளில்
விற்கப்படும் அக்குபிரஷர் உருளைகளை வாங்கி பயன்படுத் தலாம். மேலும்
சீப்பு, துணிகிளிப், ரப்பர் பாண்டு, மரக்குச்சி, துணி துவைக்கும் பிரஷ்
கூட பயன்படுத்தலாம். இவைகளை கொண்டு நாம் டிவி பார்க்கும் பொழுதும்,
கணினியில் வேலை செய்யும் பொழுதும், புத்தகங்கள் படிக்கும் பொழுது கூட
நேரத்தை வீணாக்காமல் அக்குபிரஷர் கொடுக்கலாம். நாளமில்லா
சுரப்பிகளுக்கு மட்டும் கட்டை விரலால் செங்குத்தாக அழுத்தம் கொடுக்க
வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 'நம் நலம் நம் கையில்’ என்ற தேவேந்திர வோரா
அவர்கள் எழுதிய புத்தகம் உதவும். இந்த புத்தகம் நமது பாரத பிரதமராக
இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களால் பாராட்டப்பட்ட புத்தகமாகும். அவர் 90
வயது வரை வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த புத்தகம் மேலும்
ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.
பல்வேறு நோய்களுக்கு (கேன்சர், மூளைப் புற்று, எய்ட்ஸ், நீரிழிவு, இரத்த
அழுத்தம் உட்பட) அழுத்தம் கொடுக்க வேண்டிய பாயிண்டுகள் புத்தக த்தின்
பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து நாமே நமக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டிய பாயிண்டுகளை கண்டுபிடிக்கலாம்.

கெட்டப் பழக்கங்களான புகை, புகையிலை, குடிப்பழக்கம், போதை மருந்து
போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டிய பாயிண்டு களும் இந்த புத்தகத்தில்
தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. நமக்கு நாமே டாக்டராகிவிடலாம். நமக்குரிய
சிகிச்சையை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.

உண்ணா நோன்பு

ஸ்பெயின் பொன்மொழி: 100 வைத்தியர்களை அழைப்பதை விட ஒரு வேளை உணவை இழப்பது மேலானது.
ஸ்காட்லாந்து பொன்மொழி:தனக்கு நோய் உண்டாகும் வரை உண்ணும் ஒருவன் நோய்
குணமாகும் வரை உண்ணாமலிருக்க வேண்டும்.
உண்ணா நோன்பு ஒரு உயரிய மருந்தாகும். அது ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு
தருகிறது. பஞ்சத்தால் பட்டினியால் மரணம் அடைபவர்களை விட பெருந்தீனீ
உண்டு மரணம் அடைபவர்களே அதிகம். விலங்குகள் கூட உடல் நிலை
சரியில்லையென்றால் உண்ணாவிரதம் இருக்கும். மனிதன் மட்டுமே உடல் நிலை
சரியில்லாத போதும் உண்டு உடலை சீரழிக்கிறான்.

உண்ணா விரதம் இருப்பது எப்படி?
தாகம் எடுக்கும் போது தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். இயலாதவர்கள்
பழரசங்கள் அருந்தலாம். சிறிது உடல்நிலை தேறிய பிறகு சாறுள்ள பழங்கள்
(திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, தர்பூசணி, ஆரஞ்சு) போன்ற பழங்களையும்
பிறகு சதையுள்ள (ஆப்பிள், பப்பாளி) முதலிய பழங்களையும் உண்ணலாம். உடல்
நிலை சீரான பிறகு கொட்டை பருப்புகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உண்ணவிரதம் இருக்கும் போது ஓய்வெடுப்பது அவசியம். காற்றோட்டமுள்ள
இடங்களில் ஓய்வெடுப்பது நல்லது. நம் ஆற்றலை உறிஞ்சும் வேலைகளான டிவி
பார்ப்பது, அதிகம் பேசுவது, இசை கேட்பது, அதிக தொலைவு நடப்பது போன்றவை
கூடாது. வாழ்க வளமுடன்

No comments: