Monday, February 21, 2011

பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா ?

பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா ?
> திரைப்படங்களில் கிராமத்து சீன். கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி
> எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி
> அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க
> முடியாது.
>
>
>
> ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த* பழைய
> சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில்
> இருக்கும் ஒரு மருத்துவர்*. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு
> நன்மை செய்யும் '*ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்*' (கவனியுங்கள்:
> 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக
> வைத்திருக்கிறதாம் !
>
>
>
> கூடவே *இரண்டு சிறிய வெங்காயம்* *சேரும்போது*, *நோய் எதிர்ப்பு சக்தி
> அபரிமிதமாக பெருகுகிறதாம்*. அப்புறம்* பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக்
> காய்ச்சலும் நம்மை அணுகாது!*
>
>
>
> பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய
> விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில, நம் சினேகிதிகளுக்காக...
>
>
>
> "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும்,
> அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால்
> இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும்
> போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும்
> குணப்படுத்தும்.
>
>
>
> அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை
> சீராக இயங்கச் செய்கிறது.
>
>
>
> இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல
> வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல்
> எடையும் குறைந்தது." என்கிறார்.
>
>
>
> மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள்
> முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை
> கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர,
> ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய்
> எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.
> ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".
>
>
>
> பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி...!)
>
>
>
> பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும்
> கைக்குத்தல் அரிசிதான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப்
> போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து,
> மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று
> இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய
> உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!
>
>
>
>
>
> மூளையைப் பாதிக்கும் செயல்கள்:
>
>
>
> 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.
>
>
>
> காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை
> இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும்
> கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
>
>
>
> 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது
>
>
>
> இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி
> குறைவுக்குக் காரணமாகும்.
>
>
>
> 3. புகை பிடித்தல்
>
>
>
> மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
>
>
>
> 4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
>
>
>
> நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது.
> இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
>
>
>
> 5. மாசு நிறைந்த காற்று
>
>
>
> மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம்
> பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை
> பாதிப்படையும்.
>
>
>
> 6. தூக்கமின்மை
>
>
>
> நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு
> தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
>
>
>
> 7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
>
>
>
> தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது.
> இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப்
> பாதிக்கிறது.
>
>
>
> 8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
>
>
>
> உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப்
> படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை
> கொடுப்பதே சிறந்தது.
>
>
>
> 9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
>
>
>
> மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில்
> புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
>
>
>
> 10. பேசாமல் இருப்பது.
>
>
>
> அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது
>
>
>
>
>
>
>
> : பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா ?
>



--
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)
M-195A, 2/848, I FLOOR
TNHB PHASE-I
KRISHNAGIRI - 635 001
CELL : 99943-94610
srinivasanb2401@blogspot.com

No comments: