Wednesday, September 12, 2012

சாப்பிடும் விதம் சரிதானா?

சாப்பிடும் விதம் சரிதானா?


சாப்பிடுவது, அன்றாடம் வேளை தவறாத வேலை. ஆனால் நாம் சாப்பிடும் விதம் சரிதானா என என்றாவது யோசித்திருக்கிறோமா?
சாப்பிடும்போது செய்ய வேண்டிய விஷயங்களை மறக்கக் கூடாது.
சிலர் மிக வேகமாகச் சாப்பிடுவார்கள், சிலர் மிக மெதுவாகச் சாப்பிடுவார்கள். எப்படிச் சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாகக் கடிக்கப்பட்டு, மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு அதன்பின்தான் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். உணவை அப்படி அப்படியே விழுங்கக் கூடாது.
சிலர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவர், சிலரோ ஒவ்வொரு வேளையும் சுமார் முக்கால் மணி நேரம் சாப்பிடுவர். அதுவும் தவறு, இதுவும் தவறு.
பொதுவாக சைவ உணவை சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விடலாம். அசைவ உணவைச் சாப்பிட சிறிது நேரமாகத்தான் செய்யும். குறைந்தது 10 நிமிடங்களும், அதிகபட்சமாக பதினைந்து நிமிடங்களும் சாப்பிடுவதற்கு ஒதுக்குவது நல்லது.
நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதில் வாயில் உள்ள உமிழ்நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ் நீர்ச் சுரப்பிகள் உள்ளன. அவை, பரோடிட் சுரப்பி, சப்மேன்டிபுலார் சுரப்பி, சப்லிங்குவல் சுரப்பி எனப்படு கின்றன.
உணவைப் பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை நுகர்ந்தவுடன் உமிழ்ந்íர் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ்நீரில் மியூக்கஸ், புரோட்டீன், தாது உப்புகள் மற்றும் அமிலேஸ் என்ற என்சைம் ஆகியவை இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்துதான் செரிமானத்துக்கு உதவுகின்றன.
நாக்கில் உள்ள சுவை நரம்புகள், நாக்கில் வந்து தொடும் உணவானது இனிப்பா, புளிப்பா, உப்பா, துவர்ப்பா என்பதைக் கண்டுபிடித்து அதற்கு தேவையான சரியான என்சைம்களை சுரக்கச் செய்கின்றன.
* வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்றவற்றைத் தொடர்ந்து உபயோகிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உமிழ்நீர்ச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால்தான் இப்பழக்கம் உள்ளவர்களுக்கு உமிழ்நீர் சரிவரச் சுரக்காமல் அடிக்கடி தொண்டை காய்ந்து போய்விடுகிறது. அதேபோல பற்களை நன்கு பராமரிக்காவிட்டாலும் உணவை முழுமையாக அரைத்து விழுங்க முடியாது.
சாப்பிடுங்கள், நன்றாகச் சாப்பிடுங்கள். ஆனால் அடிப்படையான விஷயங்களை மறக்காதீர்கள். உணவு ஜீரணம் ஆகும் வேலை வாயிலேயே தொடங்கிவிடுகிறது என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்க

No comments: