Sunday, June 26, 2011

நல்லவர்களாக வாழுங்கள்

நல்லவர்களாக வாழுங்கள்

* இறையருளைப் பெறுவதற்கு ஆதாரம் அன்பு தான். மனதில் அன்பு ஊற்றெடுக்க வேண்டுமானால்,
எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்று தான் வழியாகும்.

* அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும்.
பசி புத்தியை தடுமாறச் செய்யும். பசி என்னும் தீயை அன்னத்தால் அணைக்க வேண்டும்.
அன்னமிடுபவர்கள் பெருங்கருணையாளர்கள் என்றால் மிகையில்லை.

* பெரியவர்களைக் கண்டால் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
தவறு செய்தால் அதனைத் திருத்திக் கொள்ள முயலுங்கள். நற்குணங்களை பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.

* ஆன்மிக உணர்வுடன் ஆண்டவனிடம் சரணடைந்தால் நம் மனம் தூய்மை பெறும்.
தூய மனம் பேரின்பத்தின் வாசலைத் திறந்துவிடும் சக்தி படைத்தது.

* மரணம் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தேடி வரலாம்.
மனிதர்கள் நம் நிலையாமை தன்மையை உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர்.
அதனால் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை கொண்டு அலைகிறார்கள்.

* மனம் என்னும் கடிவாளத்தை உறுதியாகப் பிடித்தால் தான் நம் புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

No comments: