Sunday, January 2, 2011

கர்மயோகம்

கர்மயோகம்

ஞானி ஒருவரிடம் வந்த செருப்பு ஒன்று, அவரிடம் தனது மனக்குறையை வெளிப்படுத்தியது. ‘வணக்கத்துக்குரிய ஞானியே! என் பரிதாப நிலையைக் கேளுங்கள். நான், என் எஜமானரை இரவும் பகலும்… அவரின் கால்களை கல்லும் முள்ளும் காயப்படுத்தாமல் காக்கிறேன். அவரின் உள்ளங்கால்களில் அழுக்குப் படியாமல் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அந்த நன்றியற்ற மனிதர், என்னை எப்போதும் கதவுக்கு வெளியே விட்டு விடுகிறார். இந்த அவமானத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ என்று கூறி அழுதது.

இதைக் கேட்ட ஞானி, “காலணியே! நீ கர்மயோகத்தில் சிறந்து விளங்குகிறாய். உன் சுயநலத்தைத் தியாகம் செய்துவிட்டு எஜமானருக்கு தொண்டு செய்கிறாய். அவரின் பாதத்தை நீ தாங்குவதன்மூலம் எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறாய். நீ தியாகத்தின் திருவுருவம். ஒரு கர்மயோகி தனது பணியையே தெய்வ வழிபாடாகக் கருதிச் செய்ய வேண்டும். கைம்மாறாக எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இறைவனே எல்லா வடிவங்களிலும் இருக்கிறார். எல்லாப் பணிகளையும் இறைவன் பணியாகக் கருதிச் செய்தால், பாராட்டை எதிர்பார்க்கத் தோன்றாது. மதிப்பு-அவமதிப்பு, இன்பம்-துன்பம், லாபம்-நஷ்டம் ஆகியவற்றை சமமாகக் கருதிச் செயல்படுவதே சிறந்த கர்மயோகம்” என்றார்.

No comments: