Wednesday, January 5, 2011

சிந்தனைகள்

சிந்தனைகள்

· நீங்கள் வெற்றி பெறுவதற்கு மிகுந்த விடாமுயற்சியையும், பெரும் மன உறுதியையும் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன் “சமுத்திரத்தைக் குடித்திடுவேன்” என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழைத்தால் நீ உனது குறிக்கோளை நிச்சயம் அடைவாய்.

· மக்களுக்காகச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவன் ஆகிறான்.

· மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகிறான்.

· தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

· எப்போதும் எந்த மனிதனையும் உருப்படாதவன் என்று சொல்லாதே. அவனிடமுள்ள பழைய குணங்களை மேலும் சிறந்த புதிய பழக்க வழக்கங்களால் தடுத்து விடமுடியும்.

· ஒரே ஒரு கொள்கையை எடுத்துக் கொண்டு, அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிருந்தால் உனக்கு ஆதரவான காலம் வரும்.

No comments: