1893-ம் வருடம் தென்னாப்பிரிக்காவின் ஆளரவற்ற ஒரு ரயில் நிலையத்தில் கடும் குளிரில் இரவைக் கழித்துக் கொண்டிருந்தான் 24-வயது இளைஞன். இரயில் பயணத்துக்கான முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தும், நிறவெறி காரணமாக கீழே இறக்கப்பட்ட அராஜகத்தை நினைத்துத் துடித்தான். வழக்கறிஞர் தொழில் செய்யும் தமக்கே இந்தக் கொடுமை நிகழ்கிறது என்றால், படிக்காத இளைஞா்களுக்கு என்னவெல்லாம் அநியாயம் நிகழும் என எண்ணிப் பார்த்தான்.
இந்த அநியாயத்தை எதிர்த்து நிற்பதா அல்லது இந்தியாவுக்கு திரும்பிவிடுவதா என்ற இரண்டே கேள்விதான் அப்போது அவனிடம் இருந்தது. இரவெல்லாம் சிந்தித்தவன், காலையில் சூரியன் கண்விழிப்பதற்குள் மிகத் தெளிவான போராளியாக மாறினான். அடிமைத்தனத்தையும், அராஜகத்தையும் எதிர்க்கத் துணிந்தான். போராட வேண்டுமாயின் பணபலம் மற்றும் ஆள்பலம் வேண்டும், உன்னிடம் இரண்டும் இல்லை என்பதால் தோற்றுவிடுவாய் என்று அவநம்பிக்கை விதைத்த நண்பர்களைப் பார்த்து “மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்” என்று போராட்டத்தைத் தொடங்கினான். அதில் வெற்றி பெறவும் தொடங்கினான். ஆம்…பாரதத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் அந்த இளைஞன். 21-ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்தியப் போராட்டத்தின் வெற்றியைக் கண்டுதான், இந்தியா அவரை கைநீட்டி அழைத்தது.
1 comment:
ungal pathiugal migavum arumai ...
thank you very much
we eager to welcome your post,,,,,,
yours
karthi.M
Post a Comment