Thursday, March 10, 2011

குருவை நோக்கி

எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர் அத்தகை அளித்தருள் அருட்பெருஞ்சோதி..

எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர் அப்படி அளித்தருள் அருட்பெருஞ்சோதி...

என்று அகவல் சொல்வது போல, அன்பர்களின் எண்ணத்திற்குத் தேவையானதை அருளும் அருட்பெருஞ்சோதியில் கலந்திருக்கும் குருவே அனைத்தும் சென்று சேரட்டும்.

எவ்வளவோ உதவிகள் அங்கே இருந்து வந்திருக்கிறது.. இன்னமும் தேவை இருப்பின் அங்கே இருந்து வரவும் இருக்கிறது.

எழுத்தைப்படித்தால், அருட்பேராற்றலாம் குருவைப்பற்றிக்கொள்ளும் நெறி அன்பர்களுக்கு வந்தால், அதுவே தாம் குருவின் அருள். அதுவே நிகழட்டும்.

நிகழ்வுகள் அனைத்தும் குருவை நோக்கி மேலும் மேலும் உயர்ந்து செல்வதாக அனைத்தும் நிகழட்டும். மிஞ்சுவது, இருப்பது குருவின் ஆற்றல் என்றே அடங்கிப்போவோம்.

நன்றி : சுந்தரராஜன்

No comments: