Thursday, March 10, 2011

உயர்புகழ் குருவிற்கு

உயர்புகழ் குருவிற்கு

வாழ்க வளமுடன்.


குருவே சரணம்



குரு சீடர் என்ற உறவு என்பதன் தன்மை இருக்கிறதே அது இந்தப்பிறப்பிலே நாம் மேன்மையான உயர்வை அடைவதற்கு எப்போதும் உதவியபடியே வருகிறது.

குருவானவர் சுமார் 30 வருடத்திற்கு முன் ஒரு கவியிலே...

கர்ம வினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும்
அருள் நிறைந்த பெருஞ்சோதி என்னை அரவணைத்துக்கொள்ளும்
அந்தப்பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்.

என்றார்.

குருவானவர் உடல் என்ற கூட்டுக்குள் அதன் பிறகு இவ்வளவு வருடம் இருந்திருந்தார். எனினும் உடலைக்கடந்து அந்த பெருஞ்சோதியிலே இருக்கவேண்டும் என்று அவருக்கு இருந்த எழுச்சியைத் தாண்டி, இறை அருள் நமக்காக நம்முடன் தொடர்ந்து பணியாற்ற அருளியது. அதனால் தான் இப்போது இருக்கிற பலர் குருவை தரிசிக்கும் வாய்ப்பு கூட பெற்றொம்..

குருவிற்கு உடல் என்ற கூட்டைத்தாண்டிச் செல்ல வேண்டும் என்று இருந்தார்.. சீடர்கள்..?

எந்த ஒரு சீடனும், வாழும் போது தியானத்திலே, இந்த பரு உடலைக்கொண்டே, உடலின் மரணம் என்றால் என்ன என்கிற என்கிற அனுபவத்தைப்பெற்று விடவேண்டும். இந்த உடலின் மரணம் என்றால் என்ன என்பதை தியானத்திலே உணர்ந்த ஒருவருக்கு, அதன் பிறகு மரணமில்லை.

ஒருவர் செய்யும் தியான முறையிலே இறைக்கு உருவத்தைக்கொடுத்தாலும், அந்த நம்பிக்கையின் அளவு ஆழ்ந்து சென்றால், அவரின் மனமே, அவர் வடித்த உருவை அவர் முன் வந்து காண்பிக்கும். தோன்றிய பிறகு, அங்கே சரணடைதல் என்ற நிலை வந்து விடுகிறது. ஏனெனில், அதற்கு மேல் அவருக்கு எதுவும் தேவை இல்லை. ஒன்று தியானத்திலே லயித்து மனத்தைக்கடந்து, முனைப்பை ஒடுக்கி, இறையிலே கலக்கவேண்டும். இல்லை எனில், அந்த அனுமானித்த உருவத்தைப்பார்த்த பிறகு உடலைக்கடக்க உயிர் பிரியவேண்டும். இதுவே இது வரை ஆழ்ந்த ஆன்மீகத்திலே நாம் கேள்விப்பட்டிருக்கிற மகான்கள் விசயத்திலே ஏற்பட்டிருக்கிறது.

நமது குருனாதர் உடலைக்கொண்டு இறையிலே லயித்து, மனம், உயிர் தாண்டி பேரறிவில் கலந்த பிறகு நம்மிடம் வந்து இருக்கிறார்.

உயிரை உணர்த்தி, உயிரை உயர்த்தி அறிவிலே நிலைக்கும் பேறு நமக்கு குருவே தந்து இருக்கிறார். இதற்கு மேல் உருவத்தை ஏற்படுத்துவதோ அல்லது உருவத்தை மையமாக கொண்டு நாம் வழி பிறழ்வதோ, அல்லது உருவம் இல்லை என்று தாறுமாறாகப்பயணிப்பதோ, பிறவிப்பயனைக் கேள்வி குறியாக்கி விடும். மனம் ஒடுங்குவதற்கு தியானத்திலே ஆழ்ந்து செல்லவேண்டும்.
இந்த உடலுக்கு குருவானவர் மரணத்தை தியானத்திலேயே உணர்த்துவார். அந்த நிலையை உணர்ந்து முனைப்பை ஒடுக்கவேண்டும்.

உயிர் உடலை விட்டு பிரிவதை குருவானவர் உணர்த்தும்போது, கிடைத்த உணர்வை முன் படர்ந்து வாயால் சொல்பவர் எவரும் இல்லை... காரணம், மனம் என்ற நிலையைக்கடந்த பிறகு எஞ்சுவது அறிவு என்ற ஒன்றே...

பல மார்க்கங்கள் இறையை உணர... எண்ணங்கள் கோடி என்றால், அத்தனை கோடி எண்ணங்கள் இறைவனைப்பற்றியும் சொல்லமுடியும்... கடைசியிலே ஏற்பட்டது என்னவோ, தன்முனைப்பு ஒடுங்கி, இறைவனே மிஞ்சி நிற்கிறான் என்று சரணடைந்தார் என்றே தான் இருக்கமுடியும்... சரணடைந்தாலும், தான் தனது என்ற தன்முனைப்பு அடங்குவது கூட முயற்சியாலே தான் வரும்.

குண்டலினி தியானத்தால் நாம் வாழும்போதே இறையோடு கலந்து நின்று விழிப்பிலேயே வாழ்ந்து காட்ட முடியும் என்பதைக்காட்டிய குருவின் அருளானது, தியானத்திலே ஒடுங்கும் எவரையும் ஏற்று இறை அறத்தை அளித்துக்கொண்டே இருக்கும். எஞ்சி நிற்பது குரு அருளே.

மரணத்தைக்கடந்தும் வாழும் குருவின் பிள்ளைகளை பதிவு செய்யவேண்டும். அந்த உயர்புகழ் குருவிற்க்கு சீடர்களால் கிட்டுவதைப்பார்த்த பிறகு உடல் என்ற கூட்டைக் கடந்து விடல் என்பது சுய முயற்சியால் நடந்து விடவேண்டும். அதற்கு குருவின் அருளை எப்போதும் வேண்ட வேண்டும்...

வாழ்க வளமுடன்.
நன்றி : சுந்தரராஜன்

No comments: