Wednesday, March 9, 2011

ஜீவ சமாதி

குரு என்ற ஒருவர் உடல் என்ற கட்டுப்பாட்டைத்தாண்டி இருப்பவர். குருவானவர் உடலுக்குள் இருப்பதோ அல்லது சமாதி ஆகி இருப்பதோ, சீடனுக்குத் தடையே இல்லை. தொடர்ந்து குருவோடு மன அலைத்தொடர்பு இருக்கவேண்டும். சீடனுக்கு நிகழும் எதுவும் முதலில் குருவுக்குத் தான் தெரியும். அது முன்னேற்றமாக இருப்பினும். அதே போல புற விசயங்களால் சீடன் பாதிக்கப்படும் போதும் கூட சீடன் குருவிடம் தான் மனோ அலையை செலுத்தவேண்டும். பக்கத்திலே நின்று கொண்டு ஒருவர் தூற்றுவார்... அது வலிக்கலாம். அதை குருவிடம் சொல்லிக்கொள்ளலாம்...தூற்றியவரை கண்டு கொள்வதை கூட குருவிடம் சொல்லிக்கொள்வதிலே கவனம் இருக்கவேண்டும். இப்படி வாழும் போது குருவுடனான வாழ்தல் போன்ற ஒரு நிலை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த வாழ்க்கை முறையிலே, குருவின் தொடர்பானது, சீடனின் தியான உயர்வுக்கு ஏற்றார் போல பழக்கங்கள் மாறும். சீடன் தியானிக்க எந்த முறையான உடல், உணவு மற்றும் பழக்கங்கள் வேண்டுமோ அது எல்லாம் முறையாக உடலிலே மாற்றத்தினை ஏற்படுத்தும். இந்த மாற்றங்களால் தியானத்திலே ஆழ்ந்த நிலை எய்த உதவி செய்யும். இது அவரவர் தன்மைக்கு ஏற்றார் போல மாறும்.

கவிதை, இசை, புத்தகத்தில் படிப்பது என்று எந்த நிலை சீடனுக்குள் பழக்கங்களாக இருக்கிறதோ. அதில் எல்லாம் தானாகவே குருவின் தகவல்களும் சீடன் குருவை நோக்கி இருக்கிற தன்மைகள் மென்மேலும் வலுப்பெறும் அளவுக்கு எல்லாம் அமையும்.

குருவானவர் ஒரு பக்கம் சீடனுக்கு சோதனை செய்தாலும், மறுபக்கம் புதுவினைகள் நுழையாத படி காத்துக்கொண்டே வருவார்.. இதை சோதிக்கவிரும்பினால், புதுவினைகளை எடுத்தும் காண்பிப்பார்.. அப்போது தான் தெரியும் எந்த அளவுக்கு அவர் நம்மை காத்துக்கொண்டிருக்கிறார் என்று. ஆகையால் எதிலும் குருவை சோதித்துப்பர்த்தல் என்பது தேவையற்ற ஒன்றாகவே இருக்கும்.

No comments: